அதி உயர் பாதுகாப்பு வலயங்களும் தடை செய்யப்பட்டுள்ள விடயங்களும்

அரச இரகசிய சட்டத்தின் இரண்டாம் பிரிவில் ஜனாதிபதியினால் கொழும்பில் சில இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் எவை?

1 – பாராளுமன்ற தொகுதி

பொல்துவ முற்சந்தியில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம், கும்புக்கஹதுவ வீதி, ரஜமல்வத்த வீதி, பாராளுமன்ற மைதானத்தின் கிம்புலாவல சந்தி வரையான பகுதி, மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டடத் தொகுதி, பின்னியர சந்தி முதல் பெத்தகான சந்தி வரையான பகுதி, தியவன்னா நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன.

2 – உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதி , மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதி, கொழும்பு நீதவான் நீதிமன்ற தொகுதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம்

டாம் வீதி , அளுத்கடை வீதி, சாஞ்சி ஆராச்சிவத்த வீதி,பார்சல் சுற்றுவட்டம், புனித செபஸ்டியன் வீதி மற்றும் மிஹிந்து மாவத்தை வரையான பகுதி இதில் உள்ளடங்குகின்றது.

3 – ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம்

இந்த அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் சைத்திய வீதியில் இருந்து பொலிஸ் தலைமையகம் வரையான பகுதி மற்றும் பேரவாவி, மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, சாரணர் மாவத்தை, கடற்கரை பகுதி உள்ளிட்ட காலி முகத்திடல் வரையான பகுதி

4 – அக்குறுகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம்

பாதுகாப்பு அமைச்சு மாவத்தை , தியவன்ன பூங்கா மாவத்தை, பாடசாலை மாவத்தை , D.G.விஜேசிங்க மாவத்தை வரையான பகுதி அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ளடங்குகின்றது.

5 – விமானப்படை தலைமையகம்

பேர வாவி, சித்தம்பலம் A கார்டினார் வீதி , மோகன் வீதி, ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை வரையான பகுதிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

6 – பிரதமர் செயலக அலுவலகம்

பிளவர் வீதி, பிளவர் வீதியின் உட்பகுதி , 5 ஆவது ஒழுங்கை , 27 ஆவது ஒழுங்கை வரையான பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்குகின்றன.

7 – அலரி மாளிகை

காலி வீதியின் ரொடுண்டா சந்தியில் இருந்து பெரஹர மாவத்தை அல்விஸ் சந்தியில் இருந்து தர்மபால மாவத்தை வரையான பகுதி, கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தின் கடற்கரை பகுதி, லிபர்ட்டி சுற்றுவட்டம் , காலி வீதியின் ஒரு பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரையான பகுதி

8 – பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லம்

பௌத்தாலோக மாவத்தை, தும்முல்லை சந்தி, ஶ்ரீசம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை வரையான பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடங்குகின்றன.

குறித்த பகுதிகளில் காணப்படும் தூதரகங்களுக்கு சொந்தமான இடங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள் என்ன?

பொலிஸ்மா அதிபர் அல்லது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ கடிதம் இன்றி இந்த பகுதிகளில் பெரஹர, கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்க முடியாது என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.