அமெரிக்க தூதரகத்தின் கவனத்திற்கு? -Elanadu Editorial

இலங்கையை மீட்கும் முயற்சிகளுக்கு உதவுவது தொடர்பில் அமெரிக்கா
ஆராய்வதாக தெரிகின்றது. இதனடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களில்,
சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சிகளுக்கான உதவியாக 120 மில்லியன்
டொலர்களையும், பாலுற்பத்தி தொழிற்துறை மேம்பாட்டிற்காக 21 மில்லியன்
களையும், 5.75 மில்லியன்களை மனிதாபிமான உதவிக்கானதாகவும்
அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, நிலைமைகளை
ஆராயும் நோக்கில், அமெரிக்க உயர்மட்ட குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து பேசுபொருளான
மனித உரிமைகள் நிலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போதும்
அது கேள்விக்குறியுடனேயே நகர்கின்றனது. கடந்த பதின்மூன்று வருடங்
களாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச அழுதங்கள் தொடர்பில் தமிழ் மக்கள்
வெறுப்படைந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி விடயத்தில்
சிறு தூரத்தைக்கூட இலங்கையின் ஆட்சியாளர்கள் இதுவரையில் கடக்க
வில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால், இலங்கையின்மீது இதுவரையில்
மேற்கொள்ளப்பட்ட மேற்குலக அழுத்தங்கள் வெற்றியளிக்கவில்லை.
இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், அமெரிக்காவின் உலகளா
விய மனித உரிமைசார்ந்த அழுத்தங்களின் பின்புலத்தில், இலங்கையின்
மீதான அழுத்தங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. யுத்தம் முடிவுற்றதை
தொடர்ந்து, பொறுப்பு கூறலை வலியுறுத்தி 2012இல் முதலாவது பிரேரணையை
அமெரிக்கா முன்கொண்டுவந்தது. அன்றைய சூழலில் அது, அமெரிக்க
பிரேரணையென்றே பரவலாக அழைக்கப்பட்டது. அமெரிக்க தலையீட்டின்
மூலமாகவே, இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல் விவகாரம்
சர்வதேசத்தின் கவனத்தை பெற்றது. ஆனால், பிரேரணைகள் தொடர்ந்தனவே
தவிர, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கோரிக்கைளுக்கு எவ்வித வெற்றியும்
இதுவரையில் கிட்டவில்லை.
இவ்வாறானதொரு சூழலில்தான், நாடு மோசமான பொருளாதார நெருக்
கடியை எதிர்கொண்டிருக்கின்றது. இதற்கு, அமெரிக்கா உதவி செய்வது தொடர்
பில் கவனம் செலுத்துகின்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை
மீட்கும் அமெரிக்க முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதுதான்.
ஆனால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதுடன் மட்டும் விடயங்கள்
முடிந்துவிடப்போவதில்லையென்பதை அமெரிக்க அதிகாரிகள் உணரவேண்
டும். தமிழ் மக்களுக்கான நீதி, பொருளாதார நெருக்கடிக்கு அப்பாற்பட்டது.
அமெரிக்காவின் உதவிகளுக்காக காத்திருக்கும்போதே இலங்கையின்
ஆட்சியாளர்கள், சீனாவின் ‘ஒரு சீனா’ கொள்கையை ஆதரிப்பதாகவும், ஜக்கிய
நாடுகள் சபை சீனாவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாதென்றும்,
அண்மையில் ஜ.நாவில் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் மறுபுறுமோ,
தாய்வான் விடயத்தில் சீனாவின் ‘ஒரு சீனா’ கொள்கையை அமெரிக்கா கடுமை
யாக எதிர்த்துவருகின்றது. தாய்வானின் சுயாதீனத்தை அமெரிக்கா அங்கரித்
திருக்கின்றது. ஆனால், அமெரிக்காவின் டொலர்களுக்காக காத்திருக்கும்
நிலையிலிருக்கின்றபோதே, மறுபுறம் அமெரிக்காவின் மூலோபாய நிலைப்
பாட்டை வெளிப்படையாகவே கொழும்பு எதிர்கின்றது. இது, கோட்டாபயவின்
நடுநிலை வெளிவிவகாரக் கொள்கைக்கு முற்றிலும் முரண்பாடான விடய
மாகும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல், கொழும்பின்
சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வாறு பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும்
காட்டும் அரா மீன் போன்றவர்கள் என்பதையே, அவர்களது மேற்படி
நடவடிக்கை தெளிவாக எடுத்தியம்புகின்றது. பொருளாதார உதவிகளைக்கூட
சரியாக பயன்படுத்துவார்களாக என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை.
அமெரிக்க மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சரியாக
சென்றடையுமா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு. தமிழ் மக்கள் கொடிய
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். சிங்கள மக்கள் இப்போது அனுபவிப்பதை,
தமிழ் மக்கள் ஏற்கனவே முப்பது வருடங்களாக அனுபவித்தவர்கள். ஆனால்,
யுத்தத்திற்கு பின்னரான சூழலில், தமிழ் மக்களின் பொருளாதார மீட்சிக்காக
அமெரிக்கா உட்பட, மேற்குலக நாடுகள் பாரிய மனிதாபிமான உதவிகளை
வழங்கியதாக சான்றில்லை. இப்போதும், அமெரிக்க உதவி நிறுவனம் மற்றும்
ஜரோப்பிய ஒன்றியத்தின் பாரியளவான நன்கொடைகள், கொழும்புமைய
அரசுசாரா நிறுவனங்களையே சேர்கின்றன. சிங்கள பகுதிகளே முக்கியத்துவப்
படுத்தப்படுகின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில்
சிந்திக்கும்போது, அமெரிக்க தூதரகம் இங்கே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்
விடயங்கள் தொடர்பிலும் கவனம்செலுத்த முன்வரவேண்டும்.