பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழுவின் 6ஆவது கூட்டத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளது. எவ்வாறாயினும், அந்தச் சட்டத்தின் அண்மைய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ந்தும் செயற்படுமாறு இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
![](https://telo.org/wp-content/uploads/2021/10/EU-and-SL-flag-2.jpg)