இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எட்வின் ஷார்க், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். கடந்த வாரம், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

இரு நாடுகளின், பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் ஊடாக, இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது