இலங்கை இந்தியாவின் கரிசனைகளையும் கருத்தில்கொள்ளவேண்டும் – இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

வெளிநாட்டு கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்தஇந்தியாவின் கரிசனைகளை இலங்கை செவிமடுக்கவேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரஅமைச்சர் எம்ஜே அக்பர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் உண்மையில் இன்னமும் இராணுவமோதலில் ஈடுபட்டுள்ளன, எல்லைதகராறு தீர்க்கப்படாததால் இதற்கு இன்னமும்தீர்வு காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே நாங்கள் விசேட கரிசனைகளை கொண்டுள்ளோம் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிpவித்துள்ளார்.

உங்களிற்கு தெரியும் இவை சுற்றுலா ஆடம்பர கப்பல்கள் இல்லை இவை சீன கப்பல்கள் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் மின்னணுசாதனங்களிற்கு மீண்டும் திரும்பியுள்ளோம் அவை மூலோபாய நலன்களின் அடிப்படை தேவைகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடபகுதியில் இமாலயத்தில் சீனாவுடனான இந்தியாவின் மோதல் ஒரு கடுமையான யதார்த்தை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமைதி ஸ்திரதன்மைக்கு அடிப்படையான 1980களில் செய்து கொள்ளப்பட்டஉடன்படிக்கையை நாங்கள் இன்னமும் மதிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லையில் பதற்றம் நிலவுகின்றது ஆனால் துப்பாக்கிவேட்டுக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்டவர்களிற்கு இந்தியா புகலிடம் வழங்குவது குறித்த விசேட கரிசனைகளை கொண்டுள்ளன இதேபோன்று எங்கள் கரிசனைகளை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.