தமிழ் கட்சிகள் அவரச சந்திப்பு!

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் நில அடையாளங்களை சிதைத்து, வாழ்வுரிமையை பறிக்க இந்த அரசு மேற்கொண்டு வரும் அசுர வேக நடவடிக்கைகளிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளைளும், அரச சாராத தமிழ் கட்சிகளையும், மத பெரியார்களையும், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைகழக மாணவர்களையும் உள்ளடக்கிய விரிவான கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (24) காலை 10.00 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும்.

அரசின் இந்த நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவே இந்த கூட்டம் இடம்பெறும்.

இன்று யாழிலுள்ள தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ் அரசு கட்சி சார்பில் கலையமுதன், புளொட் சார்பில் ப.கஜதீபன், ரெலோ சார்பில் தி.நிரோஷ், தமிழ் தேசிய கட்சி சார்பில் பேராசிரியர் சிவநாதன், ஈ.பி.ஆர்.எல் சார்பில் குகன், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்திற்கு வருபவர்கள் உரிய சுகாதார நடைமுறையை பின்பற்ற அறிவறுத்தப்பட்டுள்ளனர்.