பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் அரசு வழங்க வேண்டும் ரெலோ தலைவர் செல்வம்

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் இந்த அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்திவரும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா இந்த அரசு வழங்க வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக இந்த அரசு 3 நாள் பொது முடக்க பயணத் தடையை அறிவித்துள்ளது.

ஆனால் இந்த மூன்று நாட்களிலும் அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்திவரும் கடற் தொழிலாளர்கள் சிறு வியாபாரிகள் கூலித் தொழிலாளர்கள் என்று பெருவாரியான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை அடையாளம் கண்டு இந்த மூன்று நாட்களுக்கும் 10,000 ரூபா வீதம் வழங்குவதற்கு இந்த அரசு முன் வர வேண்டும்.

அதேவேளை இந்த பொது முடக்க பயணத் தடை நீடிக்குமாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்களும் பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிடும் என்பதனை அரசு புரிந்து அதற்கேற்ற வகையில் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.