வடக்கில் 40 ஏக்­கர் அரச காணி­கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் முடி­வ­டைந்த பின்­னர் பாது­காப் ­புத்தரப்பின­ருக்கு 40 ஏக்­கர் அரச காணி­கள் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கையளிக்­கப்­பட்­டுள்­ளன.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தினூடாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, வடக்கு மாகாண காணித் திணைக்­க­ளம் வழங்கிய பதிலிருந்தே இது தெரியவந்துள்ளது.

வடக்கு மாகா­ணத்­தில் 22 ஆயி­ரம் குடும்­பங்­கள் காணி­கள் இல்­லா­மல் இருக்­கும் சூழலில், இந்­தக் காணிகள் 2019, 2020, 2021, 2022ஆம் ஆண்­டு­க­ளில் கையளிக்கப்பட்­டுள்­ளன. கடற்­ப­டை­யி­ன­ருக்கு 22.15 ஏக்கரும், காவல்துறையினருக்கு 9.5 ஏக்­க­ரும், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு 6.25 ஏக்­க­ரும், விமா­னப்­ப­டைக்கு 1.24 ஏக்கரும் வழங்­கப்­பட்­டுள்­ளன. காவல்துறையினருக்கும் 2019 ஆம் ஆண்டு அரச காணி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஒட்டுசுட்டா­னில் 0.4 ஏக்­க­ரும், புதுக்­கு­டி­யி­ருப்­பில் 4.9 ஏக்­க­ரும், கொக்­கி­ளா­யில் 1 ஏக்­ க­ரும், பளை­யில் 2 ஏக்­க­ரும், நயி­னா­தீ­வில் 0.25 ஏக்­க­ரும், வவு­னியா தெற்­கில் 1 ஏக்­க­ரும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

2020ஆம் ஆண்டு கடற்­ப­டை­யி­ன­ருக்கு சங்­கானை பிர­தேச செய­லர் பிரி­வில் அரா­லி­யில் 0.37 ஏக்­க­ரும், யாழ்ப்­பா­ணத்­தில் 0.06 ஏக்­க­ரும், ஊர்­கா­வற்­றுறை மெலிஞ்­சி­மு­னை­யில் 0.3 ஏக்­க­ரும், கொக்­குத்­தொ­டு வா­யில் 3.39 ஏக்­க­ரும், கொக்­கி­ளாய் கிழக்­கில் 1.49 ஏக்­க­ரும், பூந­க­ரி­யில் 7.38 ஏக்­க­ரும், மண்­டை­தீவு தெற்கில் 0.62 ஏக்­க­ரும், அல்­லைப்­பிட்­டி­யில் 0.25 ஏக்­க­ரும், வேலணை கிழக்­கில் 0.25 ஏக்­க­ரும், ஊர்காவற்றுறை சுரு­வி­லில் 0.19 ஏக்­க­ரும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

விமா­னப்­ப­டை­யி­ன­ருக்கு கேப்பாபிலவில் 1.24 ஏக்­கர் வழங்­கப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கரை­து­றைப்­பற்­றில் 1.83 ஏக்­கர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஆண்டு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு முச­லி­யில் 4.42 ஏக்­க­ரும், கடற்­ப­டை­யி­ன­ருக்கு வேல­ணை­யில் 0.31 ஏக்­க­ரும், நெடுந்­தீ­வில் 1.5 ஏக்­க­ரும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த ஆண்டு கடற்­ப­டை­யி­ன­ருக்கு பூந­கரி பொன்­னா­வெ­ளி­யில் 5 ஏக்­க­ரும், வலைப்­பாட்­டில் 0.25 ஏக்கரும், முச­லி­யில் 0.21 ஏக்­க­ரும், காரை­ந­க­ரில் 0.04 ஏக்­க­ரும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அரச காணி­க­ளுக்­கு­ரிய கோரிக்­கை­க­ளில் சில, பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் வடக்கு மாகாண சபை இயங்­கிய காலத்­தில் முன்­வைக்­கப்­பட்­ட­போது அப்­போ­தைய காணி அமைச்­ச­ராக இருந்த முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.