தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுவிஸ் கிளையால் மறைந்த தலைவர் சிறி அண்ணா, மற்றும் அவருடன் மரணித்த 350க்கும் மேற்பட்ட போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும், சுவிஸ் கிளையால் சூரிச் மாநிலத்தில் முப்பத்தி ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது,
அத்துடன் 1985ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி எமது இயக்கம் நடத்திய மிகப்பெரிய இராணுவத் தளமான கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலில் வீரமரணமடைந்த ஒன்பது போராளிகளுக்கும் 36வது ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வானது மூத்த உறுப்பினர் விமல் அவர்களின் தலைமையில்,
எமது மூத்த உறுப்பினரும் மதிப்பிற்குரிய சிவா அண்ணன் அவர்களின் அஞ்சலி உரையுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வுக்கு மிக மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் Corona தடுப்பூசி (இரண்டையும்) போட்டுள்ளனர்.
எமது வேண்டுகோளை ஏற்று வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்திய, மற்றும் Zoom, தொலைபேசி வாயிலாக, ஸ்கைப் , வாட்ஸ்அப் ஊடாக அஞ்சலி செலுத்திய அனைத்து சுவிஸ் கிளை உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி கிளை நிர்வாகம்.