இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு அமைக்கப்படவுள்ள நிபுணர்கள் கொண்ட குழுவுக்கு 2.8 மில்லியன் டொலர்கள் தேவை என தெரிவிக்கப் பட்டிருந்தது. அதில் 2021 ஆம் ஆண்டுக்கான 0.74 மில்லியன் டொலர்களையும், 2022 ஆம் ஆண்டுக்கான 2.1 மில்லியன் டொலர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ஐ.நாவின் பொதுச்சபை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இதன் மூலம் 13 அங்கத்தவர்களைக் கொண்ட தனியான செயலணி ஒன்று உருவாக்கப் படவுள்ளது. அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் அனுபவம் கொண்ட ஒருவர் இந்த குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளதுடன், சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான நடவடிக்கைகளை அவர் ஒருங்கிணைப்பார் என தெரிவிக்கப் படுகின்றது. அவருக்கு உதவியாக மேலும் இரு சட்டவலுநர்கள் பணியாற்றுவார்கள்.
TRENDING TODAY
- தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தமிழ் பொது அமைப்புகள் தீர்மானம்
- வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைப் பேணும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் – கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் வலியுறுத்து!
- சு.கவின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச – மைத்திரி தெரிவிப்பு
- யாழில் தமிழ் தேசிய மேதின நிகழ்வு
- பசில் கூறுவதற்கு ஏற்ப ஆட நான் பொம்மை கிடையாது – விஜயதாச காட்டம்
- இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஈரான் ஜனாதிபதி நம்பிக்கை
- இலங்கை – இந்தியா இடையே கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது
- தென் கொரியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை – மைத்திரி
- அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு; கடும் அதிருப்தியில் அமெரிக்கா
- மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது – அனுரகுமார
- 2026 வரை இலங்கையின் வறுமை விகிதம் அதிகரித்த மட்ட்த்தில் காணப்படும் – உலக வங்கி
- ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில் வரவேற்பு பதாதைகள்
- சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் இன்று(23) நாட்டிற்கு வருகை
- ’’Foxhill supercross ’’ கார் பந்தயம்: 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்
- 2024ஆம் ஆண்டிலும் இலங்கை 33வது ஆண்டாக வரவு – செலவுத் திட்ட வருமான இலக்கை எட்டத் தவறும் – வெரிட்டே ரிசேர்ச்
- வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!
- உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை – பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என கோட்டாபய தெரிவித்தார் – மல்கம் ரஞ்சித்
- இந்திய அதிகாரிகளை மீண்டும் சந்திக்கும் முயற்சியில் மைத்திரி
- குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி : விசாரணைகளை கேள்விக்குள்ளாக்கும் தார்மீக உரிமை எதிர்க்கட்சிக்கு கிடையாது – சரத் வீரசேகர
- வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதியானின் சித்திர தேர் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள்
{"ticker_effect":"slide-h","autoplay":"true","speed":"5000","font_style":"normal"}