இலங்கையில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றினால் 131 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில்,
10 ஆயிரத்து 995 பேர் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டில் மேலும் 2,882 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 477,636 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 409,628 ஆக அதிகரித்துள்ளது.