தமிழ்த் தரப்பை ஐக்கியப்படுத்தும் ரெலோவின் முயற்சியை வரவேற்கிறோம் -சுரேஷ்

மாகாணசபை முறைமையைக் காப்பதற்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்மையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது அறிக்கையை வரவேற்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

அவரது ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

அண்மையில் ரெலோவின் பேச்சாளர் பதின்மூன்றாவது திருத்தத்தையும் மாகாணசபையையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார். ரெலோவின் பேச்சாளர் என்ற அடிப்படையில் அது ரெலோவின் கருத்தாகவே கொள்ளப்படும்.

1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈபிஆர்எல்எவ், ஈஎன்டிஎல்எப் இணைந்து இணைந்த வடக்கு-கிழக்கு மகாணசபையை உருவாக்கினோம். 1990ஆம் ஆண்டு மாகாணசபை கலைக்கப்பட்டு 2009ஆம் ஆண்டுவரை யுத்தம் நீடித்தது. யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அர்ப்ப சொற்ப சலுகையான மாகாணசபை உரிமைகளைப் பறிக்கின்ற அதேசமயம், புதிய அரசியல் சாசனத்தினூடாக மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்கின்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

மாகாணசபை முறைமையை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக கொண்டுவந்தது என்ற அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் உடனடியாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதையும் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளதாத தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பல தரப்புகள் கையில் இருப்பவற்றைக் கோட்டை விட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில், மாகாணசபையைக் காப்பாற்ற முற்படுவது வரவேற்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் ரெலோவின் இந்த முன்முயற்சி வரவேற்கத்தக்கது. கடந்த காலத்தில் 13ஆவது திருத்தம் என்பதே தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்குப் போதுமானதல்ல. ஆகவே அது ஏற்புடையதுமல்ல அதனை தும்புத்தடியால்கூட தொடுவதற்கு நாங்கள் தயாரில்லை என்ற அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களது கருத்துகள் அமைந்திருந்தன. அதே கருத்தினை ரெலோ கொண்டிருந்தாலும்கூட, இன்று தனது நிலையை மாற்றிக் கொண்டதானது கூரிய அவதானத்திற்குரியது.

ஆனால் இது வெறும் ஊடக அறிக்கையையும் தாண்டி இதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. அதற்கான முயற்சிகளை எடுத்து, தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேசி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய கடமைகளை ரெலோ தரப்பினர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிரசுக் கட்சியின் மேலாதிக்கம் காரணமாகவும் தன்னிச்iயான செயற்பாட்டின் காரணமாகவும் கூட்டமைப்பிற்கென புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ அல்லது ஒரு யாப்போ இல்லாமல் ஒழுங்கற்ற போக்கைக் கைக்கொண்டு செயற்பட்டது. தமிழரசுக் கட்சியினர் அங்கத்தவக் கட்சிகளை ஒதுக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கே குந்தகமாக விளங்கினர். தனது தன்னிச்சையான முடிவுகளை அங்கத்துவக் கட்சிகள் ஏற்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர். இவர்களது தன்னிச்iயான முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்தது.

தமிழரசுக் கட்சியின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுககு; கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய நீங்களும் உறுதுணையாக இருந்து வந்திருக்கிறீர்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய கட்சிகளுடனும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் பேசி அவற்றை ஒருங்கிணைப்பதனூடாகவே நீங்கள் கூறிய மாகாணசபை முறைமையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மாகாணசபைக்கான அதிகாரங்கள் போதாதென்பதை நாம் அதன் ஆரம்ப காலத்திலிருந்தே கூறி வருகின்றோம். சமஷ;டி அரசியலமைப்புமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கும் மாற்று கருத்து கிடையாது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், சிங்கள பௌத்த மேலாதிக்கமானது தமிழர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி, எந்தவித அதிகாரமுமற்ற ஒரு சிறுபான்மையினராக வாழ வேண்டும் என்ற ஒரு நிலையில், உள்ளவற்றைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. எனவே இன்றைய காலத்தின் தேவை கருதி, அவசிய அவசரம் கருதி வெறுமனே அறிக்கையோடு மட்டும் நிற்காமல் ரொலோ இதயசுத்தியுடன் முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் ; உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர் குறித்தும் இந்த ஆணைக்குழு குறித்தும் நாட்டிற்கு விசர்பூனை ஆணைக்குழு என கூறினால்தான் தெரியும்.

அந்தளவு மோசமான, கிறுக்குத்தனமான ஆணைக்குழுவாகும். நீதிமன்றத்தை பலவீனப்படுத்தி சட்டத்தை ஆணைக்குழு கையில் எடுக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது.

இந்த ஆணைக்குழு மூலமாக எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இன்று பிரச்சினை எழுகின்றது. ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ; பிரஜாவுரிமை பறிக்கப்படும் நிலைமையொன்று நாடாளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எமக்கு தெரியவருகின்றது. இதற்கு அரசாங்கத்தில் உள்ள பலர் விருப்பமில்லை என்பதும் எமக்கு தெரியும்.

எதிர்க்கட்சி உறுபினர்களின் பிரஜாவுரிமையை பறிப்பது ஜனநாயக செயற்பாடு அல்ல, இந்த செயற்பாடுகள் பயந்த, பலவீனமான அரசியல் நகர்வுகள் என்றே நாம் கருதுகின்றோம். இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்னவெனில், முன்னைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு தற்போது சிறையில் உள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும். முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது

பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அவர்களை கொலைசெய்து கடலில் போட்டனர்.

இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் ?, இதுவா சட்ட நியாயாதிக்கம் ?, இவ்வாறன செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம்.

அதேபோல் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி போன்றவர்களை விடுதலை செய்யவும் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. இவர்களை காப்பாற்ற அன்றும் எமது தரப்பில் இருந்த சட்டத்தரணிகள் முன்வந்தனர், அவர் இன்று ஜனாதிபதியுடனும் மோதிக்கொண்டுள்ளார்.

அதேபோல் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யக்கோரியும் இந்த விசர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டில் செய்த எட்டுப்பேர் கொலை, அவர்களை தாக்கி தலைகளை வெட்டிய சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஒரு இராணுவ சிப்பாயாக இருக்கலாம், அல்லது இராணுவ அதிகாரி என்பதற்காக அநாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது

அதேபோல் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை பாதுகாத்தோம் என கூறவும் முடியாது. இதனை எவரும் ஏற்றுகொள்ள முடியாது, கொலைகாரர்களை விடுதலை செய்துவிட்டு எவராலும் புகழாரம் சூட்டிக்கொள்ள முடியாது என்றார்.

Posted in Uncategorized

அதிகாலையில் வீடுபுகுந்து ரிசாட், ரியாஜ் இருவரும் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டனர்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (24) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாமும், தமது சகோதரரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றையும் பதிவு செய்திருந்தார்.

“என்னை எவ்விதமான ஆதாரங்களுமின்றி கைது செய்யும் வகையில், இன்று அதிகாலை 1.30 மணி முதல் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள எனது வீட்டின் முன்னால் சிஐடியினர் உள்ளனர். எனது சகோதரரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இதுவரையில் சகல சட்டபூர்வ விசாரணைகளுக்கும் முழு ஆதரவை வழங்கியுள்ளேன். இது சட்டத்துக்கு முரணானது” என அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை பழிவாங்க முற்பட்டால் சர்வதேசத்திடம் செல்வோம் – கபீர் ஹாசிம்

நீதிமன்ற அதிகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றுக்கு வழங்குவது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

அதனால் அரசாங்கம் விசேட ஆணைக்குழு அமைத்து ஹரீன் பெர்ணான்டோவை அரசியல் வேட்டையாடயாட முற்பட்டால் நாங்கள் சர்வதேசத்தில் முறையிடவும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

Articles Tagged Under: கபீர் ஹாசிம் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதிவரையான காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் தொடர்பில் ஆராய விசாரணை குழு அமைத்து, அதன் பரிந்துரைகளை குற்றப்புலனாய்வு துறைக்கு வழங்கி இருந்ததோம்.

குற்றப்புலனாய்வு துறை அதுதொடர்பில் விசாரணை செய்து அதன் அறிக்கையை சட்டமா அதிபருக்கு வழங்கி இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களமே குற்றம் உள்ளவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. அதனால் நாங்கள் காட்டுச்சட்டத்தை பின்பற்றி செயற்டபவில்லை. தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு சாட்சியம் இலலை என்றால் அவருக்கு அதிலிருந்து விடுதலையாகலாம்.

அப்படி இருக்கும் நிலையில் நீதிமன்றத்துக்கு சென்று தங்களின் குற்றமற்ற தன்மையை ஒப்புவிக்க ஏன் அச்சப்படுகின்றீர்கள். அத்துடன் அரசாங்கத்தின் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நாட்டின் சுயாதீன் நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

அதனால்தான்தான் இதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல அமைப்புகள் நீதிமன்றம் சென்றிருக்கின்றது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது மக்களின் இறையாண்மைக்கு எதிராகும்.

மேலும் எமது நாடு தொடர்பில் மனித உரிமை பேரவையால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.

நீதிமன்றத்துக்கு அப்பால் ஆணைக்குழுவொன்று தீர்ப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது நாட்டின் சுயாதீன் நீதித்துறைக்கு பாரிய அச்சறுத்தலாகும். அதனால் அரசாங்கம் விசேட ஆணைக்குழு அமைத்து ஹரீன் பெர்ணான்டோ உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசியல் வேட்டையாட முற்பட்டால். அதற்கு எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் சர்வதேசத்துக்கு செல்லவும் தயார் என்றார்.

Posted in Uncategorized

மிருசுவிலில் 8 பேரின் கழுத்தை அறுத்து கொன்றது சுனில் ரத்னாயக்க – சரத் பொன்சேகா

சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலைசெய்து,கழுத்தை அறுத்து புதைத்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில் –

மரண தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவை விடுதலை செய்யவும் அரசியல்பழிவாங்கல்தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒருமரணதண்டனைக் கைதியைவிடுவிக்கசிலபொறிமுறைகள் உள்ளன.இங்குஅவைபின்பற்றப் படவில்லை. ஜனாதிபதி பின்கதவால்தீர்மானங்களைஎடுக்கின்றார். மரணதண்டனைக் கைதியை விடுவிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் பரிந்துரை முன்வைக்கவேண்டும்.பின்னர்ஓய்வு பெற்ற சட்டமா அதிபர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். பாரியகுற்றம்செய்தவர்தொடர்பில் ஜனாதிபதிக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும்.

நன்னடத்தை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவை அனைத்தும் இங்கு பின்பற்றப்படவில்லை. இந்த அரசாங்கம் மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தது. சுனில் உள்ளிட்ட இராணுவ­ ­ சிப்பாய்கள்­ ­மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்துப் புதைத்தனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை விடுதலை செய்துள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு அத்தகைய செயல்களை அங்கீகரிப்பீர்கள்? கொலைகாரன் கொலைகாரன்தான். பிரேமாவதி மனம்பேரியை கொன்றதும் இராணுவ சிப்பாயே. அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.இராணுவவீரரர் களை விடுவிக்கின்றோம் என நீங்கள் கொடி தூக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசீமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய – கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சஹ்ரானினால் நடாத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

Batticaloa Campus பல்கலைக்கழகமாக மாற்றம் !-G.L.பீரிஸ்

சர்ச்சைக்குரிய Batticaloa Campus கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வளாகமாகவோ தனியானதொரு பல்கலைக்கழகமாகவோ மாற்றப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Batticaloa Campus-இற்கு பட்டங்களை வழங்கும் அனுமதியை உயர்கல்வி அமைச்சோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ வழங்கவில்லை என G.L.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை விட இந்த வளாகத்தில் வசதிகளும் கட்டடங்களும் அதிகம் இருப்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்காக அதனை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு 30,000 மாணவர்கள் மாத்திரமே இணைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் 41,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது 16 பல்கலைக்கழகங்களே உள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் 17 ஆவது பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படும் என அவர் தகவல் வௌியிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

யாழ் பல்கலை கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு

யாழ் பல்கலையில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் கண்டனம் வெளியிட்டதோடு, பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹக்கீம் – சுமந்திரனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு நேர்ந்த கதி! ரெலோ சுரேந்திரன்

கடந்த காலங்களில் மிக முக்கிய பேசு பொருளாகவும் தமிழ் அரசியல் பரப்பில் மிக முக்கிய வகிபங்கையும் கொண்டிருந்த கல்முனை தமிழ் பிரதேச செயலகம் நேற்று முன்தினம் மீண்டுமொரு அரச அறிவிப்பின் மூலம் அதனுடைய செயற்பாடுகள் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க கடந்த நல்லாட்சி காலத்தில் இதன் முனைப்புக்களின் ஏன் தோல்வி ஏற்பட்டது?

தற்போதைய அரசாங்கம் இதற்கான அங்கீகாரத்தை வழங்குவதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் அதுவும் தற்போது நிறைவேறாமல் அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், இதனுடைய உண்மைத் தண்மையை தெளிவுப்படுத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேன் எம்மோடு இணைந்திருக்கின்றார்.

அவருடனான விசேட நேர்காணல் இதோ,

 

சிறுபான்மையினரை இலக்குவைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த கூடாது – சர்வதேச மன்னிப்புச்சபை

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் சிறுபான்மையினரை இலக்குவைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று இருவருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் சுமார் 250 இற்கும் அதிகமானோரைக் காவுகொண்ட ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் இடம்பெற்று இருவருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. அந்தக் குண்டுத்தாக்குதல்களில் தமது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

அதேவேளை எந்தவொரு சமூகத்தையும் அடக்குமுறைக்கு உட்படுத்தக்கூடிய வெறுப்புணர்விற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அவ்விசாரணை சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதேவேளை விமர்சகர்களையும் சிறுபான்மையினரையும் இலக்குவைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வித விசாரணைகளுமின்றி அவர்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற மிகவும் மோசமான சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது.

அதனை மறுபரிசீலனை செய்வதற்கும் முடிவிற்குக் கொண்டுவருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized