ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

ஒரே நோக்கத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஓரணியாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக அணி திரண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக 5 நாட்களாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியே இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, போத்தல ஜயந்த, சிவராம், நிமலராஜன், கீத் நொயார் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி செயலத்திற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் புதிய சிந்தனைகளுடன் பிறிதொரு பரிமாணத்தைக் கண்டுவருகின்றது.

அந்தவகையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது.

இவ்வாறு கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவிரவாக இன்று 5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்கின்றது.

Posted in Uncategorized

நம்பிக்கையில்லா பிரேரணை, குற்ற பிரேரணைகளில் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று(12) கையொப்பமிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பான ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் மக்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஓன்றிணைந்து நிற்பதாகவும் பாராளுமன்றத்தில் சாத்தியமான அனைத்து ஜனநாயக வெற்றிகளையும் அடைவதற்காக பாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணைக்கு மேலதிகமாக 20 ஆவது திருத்தம் தலைகீழாக மாற்றப்பட்டு 19 ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்படல் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும் அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்த நாட்டுக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தல்!

பிரதமர் மஹிந்த நாட்டு மக்களுக்கு விசேட உரையை உண்மையில் அரசியல் தெரிந்தவர்களுக்கு என்றால் அந்த ஒரு கதையை விளங்கிக்கொள்ள முடியாமலில்லை. இன்று எங்களுடைய நாட்டில் இருக்கக்கூடிய இந்த நெருக்கடிக்கு முன்னால் ராஜபக்சக்களின் அடுத்த கட்ட ஏற்பாடு என்ன என்று மிகத் தெளிவாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ராஜபக்சக்களுக்கு இருக்கக்கூடிய வழி சூழ்ச்சி மற்றும் அழிவு தவிர வேறெதுவும் இல்லை என்பது அந்த கதை மூலம் மிகத் தெளிவாக இருக்கின்றது. அதனால் மஹிந்தவுக்கு ம முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிலை வழங்குவது ரட்டே ராலவின் பொறுப்பாகும்.

அடுத்ததாக மஹிந்தவின் அழுத்தத்துக்கு பயந்து கொள்ள வேண்டாம் என்று இந்த நாட்டு மக்களுக்கு குறிப்பிடுவதும் ரட்டே ராலவின் ஒரு பொறுப்பாகும்.விசேடமாக ஏப்ரல் 3ஆம் திகதி முதல் போராட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு. அதேபோன்று அதற்கு இருக்கக்கூடிய பதில் என்னவென்றும் சொல்ல வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் அந்த பதிலை குறிப்பிட்ட பின்னர் ரட்டே ராலவுக்கு வெலிகமவுக்கு போவதற்கு வேண்டி ஏற்படும். பரவாயில்லை அது தொடர்பில் இரண்டாவதாக நாங்கள் யோசிப்போம். உண்மையான கதை தற்பொழுது ராஜபக்சக்கள் தோல்வியுற்று விழுந்த கொக்கைப் போல் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி, சமல், நாமல்,பெசில் உள்ளிட்ட ராஜபக்சக்கள் இன்னும் இருப்பது ஒளிந்து கொண்டுதான். உண்மையில் மஹிந்தவும் ஒளிந்து கொண்டுதான் இருந்தார். கடந்த வாரம் மஹிந்த பதவி விலகுவதற்கு இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் பதவி விலகல் கடிதம் கூட தட்டச்சு செய்ய பொறிக்கப்பட்டிருந்தது. அவையாவும் நீங்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

அவ்வாறு ஒழிந்து கொண்டிருந்த மஹிந்தவுக்கு இவ்வாறான ஒரு தெம்பு வந்தது எவ்வாறு. மீளவுமல முன்னோக்கி வந்து மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு தைரியத்தை வழங்கியது யார் ?அந்த தைரியத்தை வழங்கியது இந்த நாட்டினுடைய எதிர்க்கட்சி.

அதேபோன்று சுயாதீனமாக செயற்படுவோம் என்று மக்கள் போராட்டத்தை தாரைவார்த்த சிறிய கட்சி கூட்டணி. அடுத்ததாக சுயாதீனமாக செயற்படும் என்று குறிப்பிட்ட மொட்டு அணியினர் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். உண்மையில் அவர்கள் தற்பொழுது மக்கள் போராட்டத்தை தாரைவார்த்து விட்டு விட்டார்கள்.

அவற்றை தாரை வார்ப்பு மேற்கொள்வதற்கு கடந்த சில தினங்களில் திரைக்குப்பின்னால் அதிகமான விடயங்கள் நடைபெற்றது. அந்த அனைத்து சம்பவங்களும் நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் ரட்டே ரால ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொன்றாக அபாய எச்சரிக்கை விட்டுக்கொண்டிருந்தார்.

ஏப்ரல் 3ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்த நாளிலேயே ரட்டே ரால குறிப்பிட்டிருந்தார் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மக்கள் போராட்டம் மற்றும் பாராளுமன்ற போராட்டம் ஆகிய இ்ண்டும் ஒன்றாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று.

அந்த பொறுப்பு பாராளுமன்றத்திற்கு இருக்கின்றது. அதே போன்று மீண்டும் ஒரு தடவை இந்த பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய கடல் கன்னிகள் பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படக் கூடிய சந்தர்ப்பம் இதனுள்ளே இருப்பதாக.

அமைச்சரவை அமைச்சு, இராஜாங்க அமைச்சுக்களுக்கு விற்பனை செய்யக்கூடிய நிலவரம் நாளை தோன்றும் என்பதனை உங்களுக்கு அவதானிக்க முடியும். தேவை என்றால் நீங்கள் ஏப்ரல் மாத ரட்டே ரால ஆக்கங்கள் சிலவற்றை எடுத்து பாருங்கள்.

அவை அனைத்திலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா என்று. தற்போது உறுப்பினர் ஒருவர் ராஜபக்சக்கள் கட்சிக்கு சார்பாக அல்ல சுதந்திரமாக இருப்பதற்கு வழங்குகின்ற பணம் 5 கோடியை தாண்டியுள்ளது. அதனால் தற்போது ராஜபக்ஷக்களுக்கு தெரியும் 41ஆவது அணியையும வழி நடத்த முடியும் என்று.

ரட்டே ரால வரலாறு முழுவதும் இவ்வாறான போராட்டத்தை விமல் போன்றவர்கள் எவ்வாறு தாரை வார்த்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் சிறிய கட்சி கூட்டணி மேற்கொண்ட கலந்துரையாடல் பொய்யென்று தற்பொழுது தெளிவாக விளங்கி உள்ளது. அதை ராஜபக்சக்கள் காலம் தாழ்த்த மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும்.

இவர்கள் மேற்கொள்ள வேண்டியது ஜனாதிபதியும் பின்னால் சென்று விடுவது அல்ல. பாராளுமன்ற பெரும்பான்மையை ராஜபக்ஷவிற்கு எதிராக பெற்றுக்கொள்வதற்கு எதிர்க் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த வழிநடத்தலினை மேற்கொள்வதாகும்.

தற்போது அவர்கள் சென்றதன் பின்னர் மஹிந்த பிரதமராக பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு இருக்கக்கூடிய அடுத்த பதில் என்ன? அதுதான் ஒரே ஒரு பதிலாக இருப்பது இவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் என்று சொல்வதாகும். அதுதான் ராஜபக்சக்களை விழச் செய்யவுள்ள ஒரே உறவு point ஆகும்.

அதனை செய்யாமல் இந்த மடத்தனமான படையணி வெளியில் வருகை தந்து நாமல நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப் பிரேரணைக்கு தாங்கள் இணக்கம் இல்லை என்று சொன்னார்கள்.அப்படியாயின் எந்த மடையனுக்கு தெரியாமல் இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பெரும்பான்மை இல்லையென. இதனை விட ஒரு தாரைவார்ப்பு இன்னும் இருக்கின்றதா? அந்த சந்தர்ப்பத்தை தான் மஹிந்த நேற்று மேற்கொண்டது. மஹிந்தவுக்கு தெரியும் மடையனாக வருகின்ற இடத்துக்கு மடத்தனமாக இருக்க.

செவிடனாக இருக்க கூடிய சந்தர்ப்பத்தில் செவிடனாக இருக்க. குருடனாக உள்ள இடத்தில் குருடனாக இருக்க வேண்டும் என்று.ரட்டே ரால குறிப்பிடுவதனை நேற்று மஹிந்த தன்னுடைய கதை மூலம் நிரூபித்தார். மஹிந்த நேற்று நடந்து கொண்டது ஒரு செவிடனைப்போல். இல்லை என்றால் எவ்வாறு.

இந்த நாட்டில் இருக்கக்கூடிய 95 வீதமானவர்கள் gota go home என்ற வசனம் கேட்காமல் 225 பேரும் வேண்டாது என்பது மாத்திரம் கேட்பது. மஹிந்த அந்த இடத்தில் சிறப்பான முறையில் ராஜபக்சக்களை பாதுகாத்து அதனை பொதுப் பிரச்சினையாக மாற்றினார்.

அடுத்ததாக மஹிந்த அவருடைய கதையில் முழுவதும் ஒரு விடயத்தை குறிப்பிட்டு இருந்தார். அது இந்த பூமியில் இருக்கக்கூடிய போராட்டத்தில் பங்குபெற்ற கூடிய இளைஞர் இவர்களுடைய போராட்டத்தை 88/89 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டு பார்த்தது.

அந்த போராட்டத்தை எல்டீடிஈ யோடு தொடர்புபடுத்தினர். இறுதியில் குறிப்பிட்டது அவ்வாறான ஒரு இரத்த ஆறு ஓடுகின்ற நிலைக்கு இந்த நாட்டை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டாம் என்று. உண்மையில் குறிப்பிட்டது பிள்ளைகளே சும்மா சாக வேண்டாம் என்று.

மஹிந்த போன்று அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்தவர்களின் சமிக்ஞை ஜேஆர் போன்ற கொடிய இராட்சதர்களின் அரசியல் சமிக்ஞை என்னவென்று ரட்டே ரால அன்றே இனங்கண்டார்.உண்மையில் மஹிந்த இதற்கு தயாரானது ஒரு வாரத்திற்கு முன்னரே.

அவர்கள் அதனை ஏற்புடையது ஆக்கிக் கொண்டது நேற்று முன்தினம். இருந்தும் அவர்கள் மக்கள் போராட்டத்திற்கு எதிராக தற்பொழுது குண்டர் அணியினரை இறக்கியுள்ளார்கள். அனுராதபுரம், சிலாபம் போன்ற இடங்களில் நேற்று அதனை நாங்கள் கண்டோம்.

உண்மையில் தற்பொழுது அவர்களுக்குத் தேவையாக இருப்பது இந்த பூமியில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்துவதே. அதற்கு அவர்கள் ஏப்ரல் 3 மக்கள் போராட்டத்தின் உள்ளேயே உளவாளிகளை அனுப்பி முடிந்துவிட்டது. அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதனால் காலிமுகத்திடல் போராட்ட பூமியில் இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய அந்த பூமியில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். அதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளுதல் வேண்டும். தற்போது ஓரளவுக்கு தெரிந்த அடிப்படையில் அந்த இடத்திற்கு தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான ஒரு கருத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

அதற்கு அவர்கள் பாலியல் தன்மையை கூட கையாளலாம். அந்த இடத்தில் இருக்கக் கூடிய இளைஞர் யுவதிகள் பாலியல் தேவைகளுக்காக ஒன்று கூடினார்கள் என்று உருவாக்கலாம். உண்மையில் சில முக்கியமான நபர்கள் என்ற அடிப்படையில் இவ்வளவு காலமும் முகமூடி அணிந்துகொண்டு இருந்த மனிதர்கள் இன்று சமூக ஊடகங்களில் மிருகங்கள் போன்று செயற்படுகின்றார்கள்.

சில அதிபர்கள் கூட அந்த நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். உண்மையில் நாடு எவ்வளவோ அராஜகத்தை நோக்கி செல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் அந்த அராஜகத்திற்கு செல்லுகின்ற அவர்களுக்காக இவ்வாறு முன்நின்று செயற்படுகின்ற இலங்கையர் என்ற அடிப்படையில் சாதாரணமாக வெட்கப்படவேண்டிய தன்மைக்கு உட்பட வேண்டிய நிலை இருக்கின்றது.

எவ்வாறு இருப்பினும் ரட்டே ராலவை தைரிமற்றதாக்க ராஜபக்சக்கள் அனைவரும் ஒன்றாக வந்தாலும் அது முடியாது.அதனால் ரட்டே ரால போராட்டக்காரர்களிடம் வேண்டிக்கொள்வது அதனை சரியான முறையில் பேணுங்கள். ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள், பெயர் போனவர்கள் அதனுடைய அமைப்பாளர்களாக நியமியுங்கள். தற்பொழுது அந்த இடத்திற்கு தேவையாக இருப்பது அன்பான படைத்தலைவர்கள்.

உதாரணமாக யுவதியொருவரை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை உங்கள் மீது அவர்கள் ஏற்படுத்த முடியும். தேரர்களோடு உங்களை முரண்பாட்டிக்கு இழுக்கக் கூடியதாக அமையும்.ரட்டே ரால இந்த இடத்தில் குறிப்பிடுவது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வன்முறைகளுக்கு செல்ல வேண்டாம்.

ஒரு வசனத்தைக் கூட அவ்வாறு பயன்படுத்த வேண்டாம். இவர்களுக்கு தேவையாக இருப்பது அந்த இடத்துக்கு போராட்டத்தைக் கொண்டு சென்றால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதிகமான நபர்களை அந்த இடத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

விஷேடமாக இரவு நேரங்களில். அதேபோன்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களை உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். உயர்ந்த பட்சம் சமூக வலையமைப்புக்களை பயன்படுத்துங்கள். அவற்றில் உண்மையான விடயங்களை நீங்கள் கதையுங்கள். ரட்டே ராலவினல முன்னய ஆக்கத்தை வாசித்திருப்பீர்கள்.அதில் தற்போது உங்களுடைய நிழல் கூட உங்களுக்கு எதிரியாக நீங்கள் நினைத்துக் கொண்டு வேலை செய்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டதனை.

அவதானம் என்பது பயப்பட வேண்டாம் என்ற விடயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.மக்களுடைய ஒத்துழைப்பு இருக்கும் வரை இந்த போராட்டத்தை அவர்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதனை பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு ஆகும். அதே போன்று ரட்டே ரால இந்த நாட்டு மக்களிடம் வேண்டிக் கொள்வது மஹிந்தவின் அந்த கதையை மீண்டும் கேளுங்கள்.

அதன் உள்ளே இருக்கின்ற அச்சுறுத்தலை விளங்கிக்கொள்ள. அச்சுறுத்தலானது யாருக்கும் அல்ல நல்ல ஒரு சமூகத்தைப் பற்றி போராடுகின்ற அந்த இளைஞர்களின் எழுச்சிக்கு எதிரானதே. ராஜபக்சக்கள் அதிகாரத்தை பாதுகாப்பதற்கு அந்த வேலையை செய்தால் அதற்கு தயாராக வேண்டும் பதில் வழங்குவதற்கு. அதனை மேற்கொள்வது கூடியதாக இருப்பது சிவில் சமூகத்தின் உடைய போராட்டத்தினால் மாத்திரம் தான்.

முழு நாடுமே வீதிக்கு இறங்க வேண்டும். அதே போன்று இந்த நாட்டினுடைய விவசாய மக்கள் மக்கள் ஒழிப்புக்கு எதிராக ஒட்டுமொத்த பாரிய வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனால் ராஜபக்சக்கள் போன்று அதற்கு எதிராக இருக்க கூடியவர்களுக்கு பதில் ஒன்று இருப்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

அந்த போராட்டத்திற்கு மக்கள் வருவார்களாக இருந்தால் அந்த போராட்டத்தின் முன்னிலையில் வருவதற்கு ரட்டே ரால தயாராக இருக்கின்றார்.

அவ்வாறாயின் போய் வருகின்றேன்

கடவுள் துணை

வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு

ரட்டே ரால

புதிய பிரதமரின் தலைமையிலேயே இடைக்கால அரசாங்கம் : இல்லையேல் போராட்டம் என்கிறார் வாசுதேவ

புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம்.

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை பதவி நீக்குவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றதாகும்.ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் புறக்கணிக்கிறார்கள்.

சமூக மட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை முன்வைத்துள்ளோம்.

சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி வகிக்க முடியாது.

பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரச நிர்வாகத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்காமல் மக்களால் வெறுக்கப்படும் அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சினை மீண்டும் ஸ்தாபிக்கும் முயற்சிகளை ஒருதரப்பினர் தற்போது முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம்.

நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அரச தலைவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

நம்பிக்கையில்லா பிரேரணை – ஆதரிக்கலாமா? Elanadu Editorial

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி
மீதான நம்பிக்கையில்லா பிரேரனையொன்றை கொண்டுவருவதற்கான

முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஆதரிக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து
கட்சிகள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க
வேண்டுமென்று கோரியிருக்கின்றன. இது தொடர்பில் அவர்கள் ஒரு அறிக்
கையை வெளியிட்டிருக்கின்றனர். வழமைபோல் தமிழரசுக் கட்சி வெளியில்
நிற்கின்றது.

சஜித் பிரேமதாஸவினால் முன்னெடுக்கப்படும் நம்பிக்கையில்லா
பிரேரணை முயற்சி வெற்றியளிக்குமா என்பதில் கேள்விகள் உண்டு.

ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ளவர்கள் அனைவரும்
இதற்கு ஆதரவளிப்பார்களா- என்பது கேள்விக்குறியாகும். ஏனெனில்
அவர்களில் அநேகர், பஸில் ராஜபக்ஷவுடன் முரண்பாடுள்ளவர்களேயன்றி,
மொட்டு தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் அவர்களுக்குள் பெரிய சிக்கல்கள் இல்லை. அதேவேளை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான
அணியுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புக்கள்
இருந்தால் மட்டும்தான், அவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள்.

இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க
லாம்? ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியே,
மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 69
லட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் கோட்டபாயவுக்கு வாக்களித்திருந்
தனர். ஆனால் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் அவரை பெருவாரியாக
நிராகரித்திருந்தனர்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், தன்னையொரு
சிங்கள பௌத்த தலைவராகவே காட்சிப்படுத்தியிருந்தார். அனுராதபுரத்தில்,
தனது பதவிப் பிரமாணத்தை செய்ததன் மூலம், தனது வழி சிங்களபௌத்தம் என்பதை மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பிரகடனப்படுத்திருந்தார்.

இந்த நிலையில், அவரைப் பதவி விலகுமாறு கூறும் கோரிக்கையை தமிழ்த் தேசியத் தரப்புக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறும் சஜித் தரப்பு, இதுவரையில்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை தொடர்பில் எவ்விதமான நிலைப்
பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஆகக் குறைந்தது கோட்டபாய ராஜ
பக்ஷவின், தமிழர் பிரச்னை தொடர்பான நிலைப்பாட்டை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக்கூட, சஜித் பிரேமதாஸ தெளிவுபடுத்தவில்லை.
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே அவரது செயற்பாடுகள்
அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் சஜித் பிரேமதாஸவின் நம்பிக்
கையில்லா பிரேரணையை ஆதரிப்பது தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு
முறை தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்தித்து செயற்படவேண்டும்.

ஜனநாயக்ததை உறுதிப்படுத்துதல் என்னும் ஒற்றைச் சொல்லை வைத்துக்
கொண்டு, விடயங்களை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. 2015 ஆட்சி
மாற்றமும் அப்படியானதொரு கணிப்பின் அடிப்படையில்தான் தமிழர்களால்
ஆதரிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? ரணில்-மைத்திரி
ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த
முடிந்ததா?

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மிகவும் கவனமான அணுகு
முறை அவசியம். ஒருவேளை, கூட்டமைப்பின் ஆதரவுடன், பிரேமதாஸ
வின், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையுமானால் – அதன்
பின்னர் கோட்டபாய ராஜபக்ஷவுடன் எந்தவொரு விடயம் தொடர்பிலும்
கூட்டமைப்பினரால் பேச முடியாமல் போகும். ரணில்-மைத்திரி முரண்
பாட்டின்போது, கூட்டமைப்பு ரணில் சார்பில் செயற்பட்டது. முக்கியமாக
சம்பந்தனும் சுமந்திரனும், அப்போதும் ஜனநாயகக் கதைகளையே கூறியிருந்தனர்.

இறுதியில் மைத்திரியின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட
கூட்டமைப்பால், அதன் பின்னர் அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தை
களையும் முன்னெடுக்க முடியவில்லை. இந்த அனுபவங்களிலிருந்துதான்
கூட்டமைப்பு அதன் முடிவுகளை பரிசீலிக்கவேண்டும். ஆதரிப்பது அல்லது
எதிர்ப்பது என்பதல்ல இங்கு விடயம். ஆனால், ஒரு முடிவால் வரப்போகும்
சாதக பாதங்கள் என்ன என்பதை கருத்தில் கொள்வதே முக்கியமானது.
ஓவ்வொரு முடிவும் இறுதியில் தமிழர்களுக்கு என்ன நன்மையை கொண்டு
வருமென்பதுதான் முக்கியமானது.

Posted in Uncategorized

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியது அரசாங்கம்

வௌிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டியை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கலந்துரையாடல் மூலம் கடன் மறுசீரமைப்பிற்கு செல்லவுள்ளதாகவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கூறினார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மத்திய வங்கி புதிய ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், கடனை மீள செலுத்துவதை விட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார்.

எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஏற்றுமதி வருமானத்தை வர்த்தக வங்கிகளினூடாக இலங்கை மத்திய வங்கிக்கு கட்டாயமாக மாற்றுவதை 50 வீதத்திலிருந்து 25 வீதமாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மீதமுள்ள 25 வீத வௌிநாட்டு கையிருப்பு, அத்தியாவசிய இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ தளங்களினூடாக இலங்கைக்கு பணத்தை அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கடனை மீள செலுத்துவதற்காக அநாவசியமாக பணம் செலவிடப்பட மாட்டாது எனவும், நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாபயவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் – 11 கட்சிகள் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளன 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தை இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

பௌத்த தேசம்; கொழும்பில் பிக்குகள் களமிறக்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பட்ட குழு ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைத் துணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வண.வட்டினாபஹ சோமானந்த தேரரிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று தீவிரவாத இனவாதிகள் குழுவுடன் இணைந்து மக்கள் போராட்ட பூமியை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Update: A pro-government protest march was held at Viharamahadevi Park. pic.twitter.com/3zcFQcDF6s

— DailyMirror (@Dailymirror_SL) April 12, 2022

‘சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் காலிமுகத்திடல் பகுதியில் பல உளவாளிகள் இறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தற்போது போராட்டக்களத்தில் திரண்டு வருகின்றனர்.

அரசாங்கம் எவ்வளவு ஆத்திரமூட்டல் செய்தாலும், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் போர்க்களத்தில் உள்ள அமைப்பாளர்கள், வலியுறுத்துகின்றனர்.

அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க போவதாக கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலான இந்த சதி குறித்து ஏற்கனவே இலங்கை தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மோதல் வலயத்தில் உள்ள இளம் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் – காணொளி உரையின் 15 முக்கிய தகவல்கள்

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் ஆளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சவையில் இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை தமது ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கம் வாயிலாகவும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்

1. யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் மறந்த கதை தற்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில் மின்சாரம் தடைபடாத நாடொன்றை நான் உருவாக்குவேன் என அன்று நான் கூறினேன். அதற்கான மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் திட்டங்களை ஆரம்பித்திருந்தாலும், முந்தைய அரசாங்கம் எமது திட்டத்தை உரிய வகையில் முன்னோக்கி கொண்டு செல்லாததால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனது.

2. எரிபொருள் வாங்க மக்கள் நாட்கணக்கில் கஷ்டப்பட்ட துன்பத்தை எம்மால் உணர முடிகிறது. எரிவாயுவை வாங்க நின்ற பெண்களின் சிரமத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். எனினும், அவர்கள் வரவில்லை.

3. தற்போது கட்சி தொடர்பில் சிந்திப்பதை விடவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதே எம் அனைவரது பொறுப்பாகும். யார் பொறுப்பேற்கா விட்டாலும், அதிகாரத்திலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பிரச்னைகளுக்கு நாம் தீர்வை பெறுவோம்.

4. 30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம். இந்த நேரத்தில் மக்கள் கஷ்டப்பட நாம் வசதிகளை உருவாக்கவில்லை. அதிவேக வீதிகள், நவீன வீதிகள் நிர்மாணிக்கப்பட்டது, உங்களை அந்த வீதிகளில் வரிசைகளில் நிற்க வைப்பதற்காக அல்ல. நாம் துறைமுகங்களை நிர்மாணித்தது, எரிபொருள் கப்பல்களை பணம் செலுத்தி அதில் உள்ள பொருட்களை வாங்க முடியாமல் நிறுத்தி வைப்பதற்காக அல்ல.

5. மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்துவதற்காகவும், துப்பாக்கி சூடுகளை நடத்துவதற்காகவும் நாம் ஆட்சி நடத்தவில்லை. இந்த நாட்டின் அனைத்து பிரச்னைகளின் போதும், மக்களை பாதுகாத்துக்கொள்ள முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வரலாறு எமக்கு உள்ளது. மக்களுடன் தைரியமாக வேலை செய்து, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே நாம் பாடுபடுகிறோம். மிகவும் சிரமமான காலத்தில் கூட வெளிநாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சித்தது.

6. இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்காத விதத்திலான தீர்மானமொன்றை எடுப்பது எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காக மாத்திரமே வேலை செய்தோம். ‘நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் வேண்டாம்’ என்ற போராட்டம் தற்போது எமக்கு கேட்கிறது. அதனூடாக இந்த ஜனநாயக முறைமையை நிராகரிப்பது என்றால், அந்த ஆபத்தின் எதிர்காலத்தை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

7. நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசி, முழு நாடாளுமன்றத்தையும் இல்லாது செய்வதன் ஊடாக ஏற்படும் அனர்த்தத்தை நாம் கண்டுள்ளோம். அன்று நாடாளுமன்ற ஜனநாயகம் நிராகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் ரத்தம் வீதிகளில் வழிந்தோடியதை கண்டோம். இந்த ஜனநாயகத்தை நிராகரிக்க வேண்டும் என்றால், அந்த அபாயத்தை கடந்த காலங்களை நினைத்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்,

8. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உயிரோடு எரித்தார்கள். 88, 89 ஆகிய இருள்ட யுகத்தில் 60 ஆயிரம் வரையான இளையோரின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். அன்று இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாம் எடுத்த முயற்சி, முதியோரின் நினைவில் இருப்பதை நாம் நன்கறிவோம். தெற்கிலுள்ளவர்களை போன்று வடக்கில் உள்ளவர்களுக்கும் இதனை நினைவுப்படுத்த வேண்டும்.

9. அந்த இறந்த உறவுகளின் பெற்றோரிடம் கேட்டால், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என கூறியே, மக்கள் பிரதிநிதிகள் வீதிகளில் கொலை செய்யப்பட்டனர். அதனூடாகவே 70களில் வடக்கு இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த அரசியல் செயல்பாடு காரணமாக வடக்கில் மாத்திரமன்றி, தெற்கு மக்களும் துன்பங்களை அனுபவித்தனர்.

10. கண்ணி வெடிகளுக்கு, துப்பாக்கி சூடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பாடசாலை மாணவர்களும் படிப்படியாக போராட்டத்திற்கு அழைத்த செல்லப்பட்டார்கள். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு அழைத்து சென்றனர்.

11. நாடாளுமன்றம் வேண்டாம் என்றே அன்றும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆபாயத்தை நாம் அறிந்தமையினால், உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் பிறந்த இந்த தாய் நாட்டை மீண்டும் அந்த இருள் சூழ்ந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள், ஒவ்வொரு நொடியையும் கடக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடியாது போனாலும், விரைவில் இந்த பிரச்னையைத் தீர்ப்போம்.

12. நீங்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு தருணத்திலும், எமது நாட்டிற்கு டொலர் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர், தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையிலிருந்து மீண்டெழுவது எம் அனைவரது பொறுப்பாகும். அதற்காக சக்தி, தைரியம் உள்ள அனைவரையும் நாம் அழைத்திருக்கிறோம்.

13. உங்களின் பொறுமை இந்த நாட்டிற்கு தற்போது அவசியம். அன்புக்குரிய பிள்ளைகளே, நீங்கள் பிறந்த இந்த பூமியின் மீது அளப்பரிய அன்பை கொண்டுள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று வன்முறைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது, மிதிக்கப்பட்ட மணல் துகில்ககளை விடவும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் கூறியுள்ள நிந்தனைகள் மற்றும் அபகீர்த்திகள் அதிகம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூற வேண்டும்.

14. நாட்டிற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர், போலீஸார் இடையூறு, அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம். இன்று சுதந்திரமாக வீதிகளில் நீங்கள் பயணிக்க, ஆர்ப்பாட்டங்களை நடத்த, ராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து, நாட்டை மீட்டெடுத்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

15. ஆர்ப்பாட்டம் நடத்தும் உங்களின் கைகளில் தேசிய கொடி இருக்கிறது. நாம் பிறந்த இந்த மண்ணில் எந்தவொரு இடத்திலும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான். அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.

பிபிசி தமிழ்

Posted in Uncategorized

சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த மைத்திரி சார்பு விக்கெட்டை வீழ்த்தியது ஆளும் தரப்பு – இராஜாங்க அமைச்சர் பதவியையும் கொடுத்தது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்தது இருந்தது.

எனினும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பணடார இராஜாங்க அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுஜன பெரமுனவில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று(11) இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

அதற்கமைய சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்த பதவியை ஷஷீந்திர ராஜபக்ஸ வகித்திருந்தார்.

இதேவேளை, பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாததால் அவர் தொடர்ந்தும் இராஜாங்க அமைச்சர் பதவியில் நீடிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.