3 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் கையிருப்பில் – துறைசார் அமைச்சு

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் பிரிவுகளுக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெரசிட்டமோல் (Paracetamol)மருந்து உற்பத்தியை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பரவிவரும் நோய்கள் காரணமாக பெரசிட்டமோல் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பெரசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் / முஸ்லிம் மக்களின் வாக்கின்றி வெற்றிபெற முடியாது என்பதை 6.9 மில்லியன் சிங்கள மக்கள் மாற்றியுள்ளனர் – ஜனாதிபதி

கடந்த அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையற்ற தீர்மானங்களே தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது தவறு காரணமாகவோ அல்லது தற்போதைய அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் இன்மை காரணமாகவோ பிரச்சினைகள் எழவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஆகவே இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டு தவறாக வழிநடத்தப்பட்டதன் விளைவுகளை பொதுமக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்கு சிங்கள மக்கள் மட்டும் வாக்களித்துள்ளனர் என்றும் தமிழ் அல்லது முஸ்லிம் வாக்கில்லாமல் வெற்றிபெற முடியாது என்பதை இவர்கள் மாற்றியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

பக்கத்து பேரசுகளின் ஆசீர்வாதம் இல்லாமல்? ஈழநாடு Editorial

சிறிய நாடுகளின் இறைமை என்பதை எப்போது வேண்டுமானாலும், அதன்
அருகிலுள்ள பேரசுகள் தகர்க்க முடியும். எந்த உலக சட்டங்களாலும் அதனை
தடுத்து நிறுத்த முடியாது. சிறிய நாடுகளின் பாதுகாப்பும், அமைதி
யும் – குறித்த நாடுகள், அருகிலுள்ள பேரசுகளுடன் எவ்வாறு நடந்து கொள்
கின்றன என்பதை பொறுத்தே அமையும். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு
இதற்கான நவீன உதாரணமாகும். ரஷ்யாவின் விருப்பங்களை புறம்தள்ளி,
உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைந்து கொள்ள முற்பட்டதன்
விளைவாகவே ரஷ்யா, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை முன்
னெடுத்திருக்கின்றது. தனது நாட்டை காப்பாற்றுவதற்காக, உக்ரைன் ஜனாதிபதி
யுத்த களத்திற்கு சென்றிருக்கின்றார். தாம் தனித்து போரிடுவதாகவும், ஒரு
நாடும் தமக்கு ஆதரவாக வரவில்லையென்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரி
வித்திருக்கின்றார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை சிலர் இலங்கை மீதான இந்திய
படையெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதை காண முடிகின்றது. சில
ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதாவது, அப்போதிருந்த
ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி நிர்வாகம்
முன்னெடுத்த வெளிவிவகாரக் கொள்கையின் காரணமாகவே, அப்போதிருந்த
இந்திரா காந்தி தலைமையிலான இந்திய நிர்வாகம் அதிருப்தியடைந்தது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன, இலங்கையின் பாரம்பரியமான அணிசாரா
கொள்கையிலிருந்து விலகி, மேற்கு சார்பான. அமெரிக்க சார்பான
வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடித்தார். பிராந்திய சக்தியான
இந்தியாவை முற்றிலும் புறம்தள்ளி செயற்பட எத்தணித்தார். இதனால் இந்திரா
காந்தி அதிருப்தியடைந்தார். இதனைத் தொடர்தே, இலங்கையின் தமிழர்
பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையீடு செய்தது. ஈழத் தமிழ் ஆயுத
அமைப்புக்களுக்கு பயிற்சியளித்து, அவர்களுக்கு ஆயுதங்களையும் நிதியையும்
வழங்கியது. ஜெ.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு நெருக்கடிகளை கொடுத்தது.
தனக்கு அமெரிக்கா கைகொடுக்குமென்றே ஜே.ஆர் நம்பி யிருந்தார்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், ஜே.ஆர். அமெரிக்காவை
அணுகினார் ஆனால் அது நடைபெறவில்லை. இந்த அனுபவத்திலிருந்து
தான் ஜே.ஆர். இந்தியாவுடன் இணங்கிச் செல்லும் முடிவை எடுத்திருந்தார்.
ஒரு வேளை ஜே.ஆர், அன்று இணங்கிச் செல்லாது முரண்டு பிடித்திருந்தால்,
இலங்கைத் தீவு இரண்டு துண்டுகளாக உடைந்திருக்கவும் வாய்ப்புண்டு.
அல்லது, இந்திய இராணுவம் இலங்கைத் தீவை முற்றிலுமாக கைபற்
றியிருக்கலாம். ஆனால் ஜே.ஆர். நிலைமைகளை விளங்கிக் கொண்டு ஒரு
தேர்ந்த இராஜதந்திரியாக நடந்து கொண்டார். இந்தியாவுடன் நட்புக்
கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் கொண்டிருந்த ஈழத்
தமிழர்களோ, பாரதத்துதோடு மோதி, இறுதியில் அரசியல் கையறு நிலைக்குள்
தள்ளப்பட்டனர்.

ரஷ்யாவின் படையெடுப்பு, பக்கத்து பேரசுகளை புறத்தள்ளி செயற்பட்
டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு புதிதாக கிடைத்திருக்கும்
ஒரு சான்று. பக்கத்து பேரசுகளை அனுசரித்து செல்லாத போது, பக்கத்து
பேரசுகள் சிறிய அயல்நாடுகளை தண்டிக்கும். பேரசுகளின் அனுகுமுறை
களில் நீதி, நியாயம், கருணை எதனையும் எதிர்பார்க்க முடியாது. உலக
அரசியல் வரலாறு தொடர்பில் புரிதலுள்ள எவரும் அவ்வாறு சிந்திக்க
மாட்டார்கள்.

பக்கத்து பேரரசுகளை புறம்தள்ளி செயற்படுவதன் விளைவை, ஈழத்
தமிழர்களும் இன்று நன்கு புரிந்துகொண்டிருக்கின்றனர். இங்கு எங்களுடைய
விருப்பு வெறுப்புகள் முக்கியமல்ல. ஏனெனில் பேரசுகள் சிறிய நாடுகளின்
மக்களது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை.
உக்ரைன் மக்களது விருப்பங்களின் அடிப்படையில் ரஷ்யா அதன் முடிவுகளை
எடுக்கவில்லை. இந்திய இராணுவத்தை இலங்கையின் நிலைகொள்ளும்
முடிவை எடுத்த போதும் – இங்குள்ள எவருடைய விருப்பங்களும்
கேட்கப்படவில்லை.

பேரசுகளின் தீர்மானங்கள் அப்படித்தான் அமைந்திருக்கும். பக்கத்து
பேரசுகளை அனுசரித்து செல்ல வேண்டியது, சிறிய அயல்நாடுகளின்
கடைமையாகும். அந்தக் கடைமையை செய்யாத போது – அதன் பலனையும்
அனுபவிக்க வேண்டிவரும் என்பதுதான் பேரசுகளின் பதில். பக்கத்து
பேரரசுகளை புறம்தள்ளி செயற்பட்டு, பேரரசின் கோபத்திற்கு ஆளாகி
னால், எந்தவொரு நாடும் குறித்த சிறிய நாட்டிற்காக சண்டையிட்டு சாகப்
போவதில்லை.

ரஞ்சனின் விடுதலைக்கு சர்வதேசத்தை நாடவுள்ள சஜித்

சிறை வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக சர்வதேசத்தை நாட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (25) காலை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்தித்துப் பேசிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் சுதந்திரத்திற்கான ஜனநாயகப் போராட்டத்திலும் நாம் இன்னும் இருக்கிறோம். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை தற்போது எமக்கும் நாட்டுக்கும் இழப்பாகவே பார்க்கின்றேன்.

ரஞ்சனுக்கு பூரண சுதந்திரம் வழங்குமாறு கௌரவ ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். நாங்கள் நேற்றும் இன்றும் அந்த கோரிக்கையை முன்வைத்தோம் ஆனால் அவருக்கு இன்னும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை. மனிதாபிமானத்தின் பெயரால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரத்தை வழங்குமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், இந்த நாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண சுதந்திரத்தை வென்றெடுப்பதே எமது நம்பிக்கையாகும். வேறு எந்த வெளி தலையீடுகள் மூலமாகவும் வெற்றி பெற எங்களுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் உள்நாட்டில் அந்த வெற்றியை எங்களால் அடைய முடியாவிட்டால், இந்த மனிதாபிமானத்தின் சுதந்திரத்திற்காக சாத்தியமான அனைத்து நியாயமான ஜனநாயக செயல்முறைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அந்தச் செயற்பாட்டில் எமது நாடு, எமது தாய்நாடு, இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, ஒற்றுமை, மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மீறுவதற்கு நாம் எந்த வகையிலும் இடமளிக்க மாட்டோம். அதற்குக் காரணம் நாங்கள் உண்மையான தேசபக்தர்கள். நாட்டை உண்மையாக நேசிக்கும் இந்த தாய்நாட்டின் பொது சேவையாளர்கள் நாங்கள்.

எனவே, ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண சுதந்திரத்தை வெல்வதே எமது ஒரே நோக்கமாகும். அதற்காக, சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும், உள்நாட்டிலும் நம்மால் இயன்ற மிக உயர்ந்த பங்கைச் செய்ய உறுதிபூண்டுள்ளோம் என சஜித் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயற்பட முடியாது – அரசாங்கம்

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 95 சதவீதமானவை இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், பொறுப்புக்கூறலையும் நிறைவேற்ற அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை நாட்டின் பொதுச்சட்டத்திற்கமைய முன்னெடுத்துள்ளது.

சர்வதேச சமூகத்தை மகிழ்விக்க நாட்டின் இறையாண்மைக்கு முரணாக ஒருபோதும் செயற்பட முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் (ஓய்வு) ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

பலம்வாய்ந்த நாடுகள் இலங்கைக்கு சார்பாகவே செயற்படும்.ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடல்ல இலங்கைக்கு எதிரான செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடர் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.49ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் புதிய யோசனைகளும்,வாக்கெடுப்பும் இடம்பெறாது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.

ஆணையாளரின் அறிக்கைக்கு ஏற்கெனவே பதிலளித்துள்ளோம்.அறிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிடின் ஆணையாளர் ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கையினை மீண்டும் பேரவையில் சமர்ப்பிப்பார்.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 95 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களை மையப்படுத்தியதாக காணப்படுகிறது.

பாராளுமன்றம்,ஜனாதிபதியின் செயற்பாடுகள்,அரச கட்டமைப்பு,நீதிமன்ற கட்டமைப்பு ஆகிய துறைகள் குறித்து ஆணையாளர் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது மனித உரிமை பேரவையின் விடயதானங்களுக்கு பொறுப்பானதல்ல.

இலங்கையில் இராணுவ ஆட்சி நடைமுறையில் இல்லை எ;ன்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் விளங்கிக்கொள்ள வேண்டும்.இலங்கைக்கு எதிராக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அநீதியானது.

இலங்கை இருமுறை தீவிரவாத குழுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளது.30வருட கால சிவில் யுத்தம் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின மத அடிப்படைவாதிகளின் தாக்குதலும் பாரிய தாக்குதலை ஏற்படுத்தியது.இலங்கை தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுப்படவில்லை.தீவிரவாத செயற்பாட்டை இல்லாதொழித்து அனைத்து இன மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரையும்,அப்போதைய அரசாங்கத்தையும் குற்றவாளிகளாக கருதும் சர்வதேசம் யுத்ததை தோற்றுவித்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு குறித்து ஏன் அக்கறை கொள்ளவில்லை.

மனித உரிமை மீறல்கள் செயற்பாட்டில் விடுதலை புலிகள் அமைப்பு ஈடுப்பட்டதற்கு எதிராக சர்வதேச அரங்கில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.இவ்வாறான செயற்பாடுகளினால் சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்பில் யுத்தகாலத்தை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் பேசப்படுவது நாளுக்கு நாள் குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையினதும்,அதன் உறுப்பு சபைகளினதும் கொள்கைகளை இலங்கை முறையாக பின்பற்றுகிறது.

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பல விடயங்களில் முன்னேற்றகரமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காணப்பட்டுள்ளது.காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம்,நட்டஈடு வழங்கும் அலுவலகம் அமைக்கப்பட்டு முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சர்வதேச சமூகத்தை மகிழ்விக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பும்,சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்காசிய வலய நாடுகளில் இலங்கை அமைதியான நாடு என்பதை வெளிப்படைத்தன்மையும் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளையும்,பொறுப்புக்குகூறலையும் செயற்படுத்த அரசாங்கம் தேசிய இறையாண்மையின் கொள்கைகளுக்கு அமைய செயற்படுகிறது. நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் செயற்பட முடியாது.

ஜெனிவா விவகாரம் அரசாங்கத்திற்கு எதிரான செயற்படல்ல அது இலங்கைக்கு எதிரான செயற்பாடு என்பதை இலங்கை மக்கள் அனைவரும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடு என்ற ரீதியில் அனைத்து இன மக்களும் ஒன்றினைந்தால் மாத்திரமே சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.

Posted in Uncategorized

பிரதமரின் பணிப்புரைக்கு அமைய சிவாலயங்களுக்கு நிதியுதவி

சிவராத்திரி விரத புண்ணிய காலத்தில் ஆன்மீக செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு இதனூடாக நிதியுதவி வழங்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந்த நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

மகா சிவராத்திரி தினத்தன்று நடத்தப்படும் கலை கலாசார நிகழ்வுகளின் போது, சிறார்களுக்கு பரிசில்கள் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை மூடிமறைக்க அரசு கடும் பிரயத்தனம்- சபா.குகதாஸ்

இலங்கை அரச படைகளினால் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இருபத்து ஐயாயிரம் குடும்பங்களுக்கு அதிகமானோர் ஆண்டுக் கணக்காக தேடி அலைந்த வண்ணம் உள்ளனர். இவர்களது விபரங்கள் பல சர்வதேச ஆவணங்களிலும் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.

யுத்தகாலத்தில் இலங்கை இராணுவத்தால் வீடுகளில் புகுந்து கடத்தப்பட்டவர்கள் இறுதிப் போரில் இராணுவ சோதனைச் சாவடியில் சரணடைந்தவர்கள் மற்றும் உறவினர்களால் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் என சாட்சியங்களுடன் உள்ள விடையத்தை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்க தற்போது கடும் பிரையத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ் விடையம் சர்வதேச ரீதியாக மனிதவுரிமை செயற்பாட்டில் தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களையும் அபகீர்த்தியையும் நெருக்குவாரங்களையும் கொடுத்த வண்ணம உள்ளது இதில் இருந்து விடுபட சிங்கள ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் இதனை கைவிடுமாறும், காணாமல் போனவர்கள் வரவில்லை என்றால் அர்த்தம் என்ன, காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை , என பொறுப்பற்ற வகையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைக் கொடுக்காமல் மூடி மறைத்து மறப்போம் மன்னிப்போம் என்ற வகையில் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது இனப்படுகொலை அரசாங்கம்.

ஆகவே தமிழர் தரப்பு ஒற்றுமையாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக் கூறலையும் பெற்றுக் கொடுக்கும். பாதிக்கப்பட்ட மக்களும் தங்களுக்குள் பிரிவினைகளை களைந்து வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாது உறுதியாக பயணிப்பதே நீதிக்கான கதவுகளை திறக்கும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஏப்ரல் 21 தாக்குதல்: சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் தவறியுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உண்மையை மறைத்து, அரசியல் இலாபத்திற்காக இந்த தாக்குதலை பயன்படுத்தி, விடயங்களை சிக்கலாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை கண்கூடு எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும், நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியை தாம் காணவில்லையெனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளது: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விசனம்

இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்காக இலங்கை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல் , இன, மத, தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்களை சிரமப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் பொறிமுறையை செயற்படுத்துவதற்காக பூரண நோக்கத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசரத் தேவையாக உள்ளதெனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்காகவும் தண்டனை பெறாதிருப்பதை தடுப்பதற்காகவும் நிறுவன, பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை தாம் ஏற்றுக்கொண்டாலும், இலங்கையின் உத்தேச திருத்தங்கள் சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு அமைய போதுமானதாக இல்லை எனவும் மிச்செல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பல வருடங்களுக்கு முன்னதாக முன்வைத்த பரிந்துரைகள், அவதானிப்புகளை முழுமையாக மீண்டும் பரிசீலனை செய்யுமாறு அவர் இலங்கை பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 40/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலகி இரண்டு வருடங்கள் கடந்தாலும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையுடன் கூடிய திட்டமிடல் வரைபை இலங்கை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தல்களை பகிரங்கப்படுத்துமாறும் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்படியும் நடக்கிறது…! ஊர்க்குருவி

அண்மையில் ஒரு செய்தியைப் பார்த்ததுதான் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத் துப் போராட்டத்தை நடத்திய வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், இதன்போது ஒரு நியாய மான கேள்வியைக் கேட்டிருந்தார்.

சுகிர்தன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் மட்டுமல்ல, கூட்டமைப்பின் இளம் தலைவர்களில் முக்கிய மானவர். கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் தளபதிக ளில் ஒருவர்போல இயங்கிவருபவர்.

பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் காரணங்களுக் காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்பது அவரின் குற்றச்சாட்டாக இருந்தது.

இல்லையெனில், கடந்த உள்@ராட்சி தேர்தல் பிரசாரத் தின்போது விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பி பிரசாரம் செய்த அங்கஜன் இராமநாதன்மீது ஏன் இந்தச் சட்டம் பாயவில்லை. புலிகளின் தலைவர்களின் படங்கள் வைத்திருந்த அப்பாவிகள் கைது செய்யப்படுகின்றபோது, பகிரங்கமாக பாடல்களை ஒலிபரப்பிய அங்கஜன்மீது ஏன் அந்தச் சட்டம் பாயவில்லை என்பது அவரின் கேள்வி. – நியாயமானதுதான்.

அங்கஜன் அப்போது அரச தரப்பு எம். பி. அதனால்தான் அவர்மீது அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட வில்லை என்பது அவரின் குற்றச்சாட்டு.

இப்போது அதே குற்றச்சாட்டு கூட்டமைப்பின்மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அண்மையில் உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து தமிழக முதலமைச் சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வரவிருக்கிறார். அந்த விஜயத்தின்போது தமிழர் விடயத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடிக்கு சிம்மசொப்பனமாக திகழும் தலைவர் ஒருவரை வாழ்த்தி, போற்றி, புகழ்வது அவருக்கு மகிழ்ச்சியை உண்டாக் குமா என்று ஊர்க்குருவி இதுதொடர்பாக கேள்வியும் எழுப் பியிருந்தது.

இந்தக் கேள்வியில் தொக்கிநின்ற சந்தேகத்தை இப்போது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவும் கிளப் பியிருக்கின்றது. இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தது கூட்டமைப்புக் குழு. அமெரிக்கா தங்களை அழைத்தபோது அவர்களையும் அழைத்திருந்தது என்று அப்போது விளக்க மளிக்கப்பட்டது. ஆனால், அவர்களை அழைத்தவர்கள் யார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியாததல்ல.

அது சரி, இப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்து டன் சேர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் தமிழக முதல்வ ருக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால், அதனை பயங்கரவாத தடைச் சட்டம் கண்டுகொள்ளவில்லை என்றால், அந்த கடித விவகாரத்திற்கு அரசின் ஆசியும் இருக்கிறதா என்றே ரெலோ இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றது.

ஈழத்தமிழர் இனப்பிரச்னைக்கு தீர்வுகாணும் விடயத்தில் இந்தியப் பிரதமரின் உதவியைக் கோரி ரெலோ ஆறு கட்சிகளுடன் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந் தது. அந்த ஆறு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தமிழகம் செல்வதற்கு ரெலோ ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. தமிழக முதல்வரை மாத்திரமன்றி, அனைத்து தமிழக தலைவர்களையும் (பாரதிய ஜனதா கட்சி உட்பட) சந்திப்பதற்கு ரெலோ திட்டமிட்டிருந்ததுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தபோது, தமிழக முதல்வருக்கு மாத்திரம், அதுவும் அவரை உலகத் தமிழினத்தின் காவலனாக வர்ணித்து ஒரு கடிதத்தை கூட்ட மைப்பின் பேரில் அதன் பேச்சாளர் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவையுடன் சேர்ந்து திடீரென்று அனுப்பி யிருந்தார். இதற்காக உலகத் தமிழர் பேரவையை தடைசெய் ததை இந்த ஊர்க்குருவி ஏற்றுக்கொள்கின்றது என்பதல்ல.

அந்தக் கடிதம் கூட்டமைப்பின் சார்பில் அனுப்பப்பட் டதல்ல என்று அதன் பங்காளிக் கட்சிகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையிலேயே ரெலோவின் மத்திய குழு உறுப்பின ரும் பிரிட்டனின் பொறுப்பாளருமான சாம். சம்பந்தன், இக்கடிதத்திற்கு அரசின் மறைமுக நிகழ்ச்சிநிரல் இருக்கிறதா என்ற இந்த முக்கிய சந்தேகம் ஒன்றைக் கிளப்பியிருக்கிறார்.

சுகிர்தன் பொல்லைக் கொடுத்து அடிவாங்கியிருக்கிறாரா என்ற கேள்வி இப்போது எமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.