இந்தியா இல்லாத தீர்வு ?

-யதீந்திரா-

கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்இ சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டிருக்கின்றது. சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாகஇ இவ்வாறானதொரு சந்திப்பிற்காக கூட்டமைப்பு காத்துக்கிடந்தது. இந்திய தூதுவரை சந்திக்கும் சந்தர்பங்களிலெல்லாம்இ சம்பந்தன்இ இந்திய பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார். இந்த அடிப்படையில்தான்இ இந்திய தூதரகம்இ நீண்ட நாட்களாக இவ்வாறானதொரு சந்திப்பிற்கான முற்சியை மேற்கொண்டுவந்தது. பிரதமர் மோடிஇ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஸ் வர்தன் ஆகியோர்இ புதுடில்லியில் இருக்கும் தருணமொன்றிற்காக இந்திய தூதரகம் காத்திருந்தது. இந்த பின்புலத்தில்தான்இ கூட்டமைப்பின் புதுடில்லி பயணத்திற்கான திகதியும் திட்டமிடப்பட்டது. ஆனால் இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பைத்தான் சம்பந்தன் சாதாரணமாக புறம்தள்ளியிருக்கின்றார்.

சம்பந்தன் ஏன் இந்த சந்திப்பை பிற்போட்டார்? சம்பந்தன் இதற்கு மூன்று காரணங்களை கூறியிருக்கின்றார். வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும்இ பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதுஇ மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் இடம்பெறவுள்ளது. ஒரு பிராந்திய சக்தியான இந்தியாவின் பிரதமரை சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தவிர்ப்பதற்காக சம்பந்தன் கூறியிருக்கும் காரணங்கள்தான் இவைகள்! வரவு செலவுத்திட்ட விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதுஇ நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பசில் ராஜபக்சவை விடவும் சம்பந்தனுக்கு வரவு செலவுத்திட்டம் முக்கியமான ஒன்றா? ஒரு வேளை வரவு செலவுத்திட்டம் முக்கியமானதென்றால்இ ஏனைய இரண்டு காரணங்களை சம்பந்தன் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை. ஒரு இனத்தின் எதிர்காலம் தொடர்பான விடயத்தின் போதுஇ மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணத்தை சம்பந்தன் தொடர்புபடுத்தியிருக்கின்றார். இந்திய பிரதமருடனான சந்திப்பை பிற்போடுவதற்காகஇ சம்பந்தன் குறிப்பிட்டிருக்கும் மூன்று காரணங்களும்இ நகைச்சுவைக்குரியது என்பதைஇ புரிந்துகொள்வற்கு அரசியல் அறிவு தேவையில்லை. இந்த நகைச்சுவைக்காகஇ நிச்சயம்இ இந்திய தூதரக அதிகாரிகள் சிரித்திருப்பார்கள்.

தமிழர் பிரச்சினையில் இந்தியா மீளவும் தலையீடு செய்வதை சம்பந்தன் தவிர்க்க விரும்புகின்றாரா? சம்பந்தனின் அண்மைக்கால நடவடிக்கைகள் இப்படியானதொரு கேள்விக்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய உயர் அதிகாரிகள் வழமைபோல் கூட்டமைப்பை சந்தித்துச் செல்கின்றனர் ஆனால்இ கூட்டமைப்போ இந்தியாவை நோக்கிச் செல்லவில்லை. அவ்வாறு செல்ல வேண்டுமென்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரும் போதெல்லாம்இ அதனை சம்பந்தன் தடுக்கின்றார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில்இ ஒரு முறை கூட புதுடில்லி செல்லவில்லை. ஒரு காலத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதுஇ அவர் எவ்வாறு புதுடில்லியுடன் உரையாடியிருந்தார். அவருக்கு இந்திராகாந்தி எத்தகைய கௌரவத்தை வழங்கியிருந்தார் என்பது வரலாறு. இது பற்றி அமிர்தலிங்கம் எழுத்திலும் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் சம்பந்தனோஇ சிங்களவர்களை காரணம் காட்டிஇ புதுடில்லிக்கான பயணத்தை தவிர்த்துவருகின்றார். மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்த போதுஇ புதுடில்லி சென்று உரையாடுவோம் என்னும் கோரிக்கையைஇ அப்போது கூட்டமைப்பின் அங்கமாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார். அவ்வாறு நாம் செய்தால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் – குழம்புவார்கள்இ என்னும் காரணத்தை கூறிஇ சம்பந்தன் அதனை தட்டிக்கழித்தார்.

ரணில்-மைத்திரி ஆட்சியில்இ பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள்இ புதுடில்லி செல்வதற்கான யோசனையை முன்வைத்த போது – அப்போதும்இ கருமங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன – இப்போது நாம் அங்கு சென்றால் தென்னிலங்கையில் பதட்டங்கள் ஏற்படுமென்று கூறி அதனையும் சம்பந்தன் தட்டிக்கழித்தார். இப்போது இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை பொறுப்பற்ற காரணங்களை கூறி பிற்போட்டிருக்கின்றார்.

ரணில்-மைத்திரி கூட்டரசாங்கமும் கூட்டமைப்பும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்தது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை காணமுடியுமென்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. புதிய அரசியல் யாப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லையென்பதை சிலர் எதிர்வு கூறியிருந்தனர். புதிய அரசியல் யாப்பு வருவதற்கான வாய்ப்பில்லை – இந்த ஆடம்பரமான சொல்லாடல்கள் அனைத்தும் ஒரு கட்டத்துடன் முடிவுக்குவந்துவிடும் என்பதை இந்தக் கட்டுரையாளரும் பல்வேறு சந்தர்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் முற்றிலும் உள்நாட்டு நகர்வுகள் மூலம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியுமென்று நம்பினர்.

ஆனால் இறுதியில் எதிர்பார்த்தது போன்றேஇ புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் புஸ்வானமாகியது. விமர்சனங்கள் இருப்பினும் கூடஇ சில முயற்சிகள் இடம்பெற்றது உண்மைதான். ஆனால் இப்போது நிலைமைகள் தலைகீழாகிவிட்டது. அமெரிக்க பயணத்தை தொடர்ந்து – அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாகஇ சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஜனவரி மாதமளவில்இ அமெரிக்காஇ அதன் கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்குமென்றும் சுமந்திரன் எதிர்வு கூறுகின்றார். இவ்வாறானதொரு பின்னணியில்தான் – சம்பந்தன்இ இந்தியாவிற்கு செல்வதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கின்றார். அவ்வாறாயின்இ அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாட்டை அறிந்த பின்னர்இ புதுடில்லிக்கு செல்ல முயற்சிக்கின்றாரா? அல்லது இந்தியா இல்லாமல் ஒரு தீர்வை எதிர்பாக்கின்றாரா? கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு முற்சியின் கீழ்இ தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு கிடைக்குமென்று சம்பந்தன் எதிர்பார்க்கின்றாரா?

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் இந்தியா ஒன்றே அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருகின்றது. இலங்கையின் உடனடி அயல்நாடென்னும் வகையில்இ இந்தியா எப்போதும் இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில்தான்இ இலங்கையின் இன முரண்பாட்டிற்குள்இ ஒரு சமரச முயற்சியாளராக இந்தியா தலையீடு செய்தது. முன்னைநாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணின் வார்த்தையில் கூறுவதானால் – புவியியல் நிலைமையும் வரலாறும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டை நோக்கி இந்தியாவை தள்ளியிருந்தது. இந்தியாவின் சமரச முயற்சியின் விளைவாக வந்ததுதான் மாகாண சபை முறைமை. அந்த மாகாண சபை முறைமையை தொடர்ந்தும் வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்னுமடிப்படையில்தான்இ புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது.

 

தற்போதைய தென்னிலங்கை ஆட்சியாளரை பொறுத்தவரையில் தமிழர் பிரச்சினையென்பது ஒரு உள்நாட்டு விவகாரம். இதில் இந்தியாவோ வேறு எவரோ தலையீடு செய்யவேண்டியதில்லை. இந்தியாவிற்கான தூதுவர் மிலிந்த மொறகொடஇ இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில்இ இதனை வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். அதாவதுஇ அரசியல் தீர்வென்பது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரமாகும். இதன் மூலம் அவர் இந்திய தலையீட்டை முற்றிலுமாக மறுதலிக்கின்றார். அவர் சமர்ப்பித்த மூலோபாய அறிக்கையிலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேசப்படவில்லை. இது தொடர்பில் பேராசிரியர் சூரிய நாராயணன் இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதிய கட்டுரையில் விவாதித்திருந்தார். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை புறம்தள்ள முற்படுவது போன்றுதான்இ இப்போது சம்பந்தனும் செயற்படுகின்றாரா? தமிழர்களுக்கான அரசியல் தீர்வு முற்றிலும் ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதுதான் சம்பந்தனதும் நிலைப்பாடா?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர்இ அசியல் தீர்வு தொடர்பில் இடம்பெற்ற எந்தவொரு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் அந்த முயற்சிகள் எவற்றிலும் இந்தியாவின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை. நோர்வேயின் மத்தியஸ்த்த முயற்சியில் இந்தியாவிற்கு எந்தவொரு பங்களிப்பும் இருக்கவில்லை. இந்தியாவை கோபப்படுத்திவிடக் கூடாதென்னும் முன்னெச்சரிக்கையுடன்இ எரிக் சொல்ஹைய்ம் விடயங்களை புதுடில்லிக்கு கூறிக் கொண்டிருந்ததை தவிரஇ இந்தியாவின் எந்தவொரு பங்களிப்பும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் இருந்திருக்கவில்லை. நோர்வேயின் மத்தியஸ்த்தம் என்பது அடிப்படையில் ஒரு மேற்குலக மத்தியஸ்தமாகவே இருந்தது.

இதன் பின்னர் இடம்பெற்ற பிரதானமான தீர்வு முயற்சி ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்தது. ஒரு புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கலாம் என்பதே சம்பந்தனின் திட்டமாக இருந்தது. இதன் போதும் இ;ந்தியா பார்வையாளராகவே இருந்தது. சம்பந்தனை பொறுத்தவரையில்இ இந்தியாவை சம்மந்தப்படுத்தினால்இ சிங்களவர்கள் கோபிப்பார்கள். ஆனால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அறுவடையான மாகாண சபை முறைமையை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில்தான்இ அதனை முற்றிலுமாக புறம்தள்ளும் வகையில் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பில் சம்பந்தன் ஒரு நாகரீகத்திற்காக கூடஇ இந்தியாவின் ஆலோசனைகளை கோரியிருக்கவில்லை.

விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் மட்டும் துருத்திக் கொண்டு தெரிகின்றது. தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு விடயம் மட்டுமே இதுவரையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமை ஒன்றுதான். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் அந்த முயற்சிகள் எவற்றிலும்இ இந்தியாவின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை. இது தமிழர் தலைமைகளுக்கு கூறும் செய்தி என்ன?

த.தே.கூ பதிவு செய்யாமல் இருக்க முடியாது: டெலோவின் செயலாளர் நாயகம்

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் உறுதியாகஉள்ளது, அதே நேரம்,  தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒரு தனிமனிதனின் தலைமைத்துவத்திற்குள் இல்லாமல் இரு இணைத்தலைமை உருவாக்கப்படவேண்டும் என்பதிலுமு; உறு தியாக உள்ளது என்று  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அசயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இரண்டு பொலிஸ் நிலையம் ஊடாக வழக்குகள் பொத்துவில் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்தது. பொத்துவில் பொலிஸாரும் திருக்கோவில் பொலிஸாரும் இரண்டு வேறுபட்ட வழக்குகளை போட்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கான வழக்காக அது தெரியவில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்டு 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியல் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பொலிஸ் நிலையத்திலும் அதேபெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் அங்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் அவர்களது உரிமைகளை கேட்டுபோராடும்போது அவர்களை நசுக்குவதற்காக போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே சிலரது பெயர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்படுகின்றது. சிறுபான்மை மக்களை நீதித்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

சட்டவாக்கத்துறை ஒழுங்கில்லையென்பது சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான சபை அமர்வு 11ஆம் திகதி கூடுவது என தீர்மானித்திருந்தும் ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி பாராளுமன்ற கூட்டத்தொடரை 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.இதன் ஊடாக சட்டவாக்கத்துறையும் சீரில்லாமல் உள்ள நிலையே உள்ளது.

நிர்வாகத்துறையினை எடுத்துக்கொண்டாலும் இந்த நாட்டில் மிக மோசமான நிர்வாகம் இருக்கின்றது என்பது அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபையில் ஆணையாளர் நியமனங்களில் இருந்தே நிர்வாகத்துறை சீர்கேடான நிலையிலிருக்கின்றது என்பது இதன்மூலம் வெளிப்படையாக தெரிகின்றது.

ஜனாதிபதியின் செயலாளரால் தான் இந்த நாட்டில் நிர்வாகம் சிர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஷ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்த வரை 20வருடங்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் பதியப்படாத நிலையிலுள்ள ஒரு அரசியல் கூட்டாகவே இருக்கின்றது. இது மிகவும் துரதிர்ஸ்டவசமானது.

மலையக கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முன்னணியை உருவாக்கியிருந்தார்கள். மூன்று வருடத்துக்குள்ளே அவர்கள் அதனை ஒரு அரசியல்கட்சியாக பதிவுசெய்துள்ளார்கள்.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் ஐயா தொடர்ச்சியாக இருந்துவருகின்றார். தற்போது பத்திரிகை ஊடாக அறியக்கூடியதாகவுள்ளது சம்பந்தர் ஐயா அவர்கள் திருகோணமலை பாராளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்யப்போவதாக அறியக்கூடியதாகவுள்ளது.

இது எந்தளவுக்கு உண்மையென்று தெரியாவிட்டாலும் அப்படியொரு நிலைமையேற்பட்டால் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இருப்பவர் சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற உறுப்பினர் பதவி வலிதற்றதாகும்போது தலைமை பொறுப்பையும் இழப்பார்.

இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து விலத்தவேண்டிய தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வகிப்பவர் பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்ற நியதியில்லை.

அவர் விரும்பி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவியை துறப்பாரானால் தமிழ் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்து அங்கம் வகிகும் கட்சி என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது. இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்படாமலிருக்கமுடியாது என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை துறக்க தயாராகும் இரா.சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவர்களின் ஆலோசனைகளிற்கு அமையவே அவர் இந்த தீர்மானங்களை எடுத்துத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தற்போது வரையில் அது பேச்சுமட்டத்திலேயே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்தாலும், கூட்டமைப்பின் தலைவராக அவர் தொடர்ந்தும் நீடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இரா.சம்பந்தனின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கூட்டணி சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட உபதலைவர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவரை எமது கட்சி சிரேஸ்ட உப தலைவராக தெரிவு செய்யவில்லை என்பதை ஊடகங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆயுட்கால உறுப்பினர் பட்டியல் இன்று இல்லை. இரு தடவை கட்சி பிளவுபட்டு ஆயுட்கால உறுப்பினர் பட்டியல் காலவதியாகிவிட்டது.

இவ்வாறு கூறித்திரிவது கூட அரவிந்தனின் தந்திரங்களில் ஒன்றாகும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியாக எமது மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அரவிந்தன் சொல்லும் அளவிற்கு அரசியல் தெரியாதவனல்ல.

அரவிந்தன் பிறப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்தவன். மிகச்சிறந்த அரசியல் தலைவர்களுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவன். கிளிநொச்சி தொகுதியில் என் கால் படாத இடமே கிடையாது. என்னுடைய அரசியல் பின்னணியும் வரலாறும் தெரியாமல் கருத்துக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2018ம் ஆண்டு வரை லண்டனில் இருந்து விட்டு எமது மக்களின் அவலநிலை தெரியாமல் அரசியல் பேசுகின்றார். தற்போதுள்ள அரசியல் யதார்த்தநிலையை நன்கு புரிந்து கொண்டுதான் நான் சமீபத்தில் “அந்நிய நாடுகளை தலையிட கோருவது மேலும் ஆபத்தை விளைவிக்கும்” என்று ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அதனை விளங்கிக் கொள்ளாத அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அறிக்கை விடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய காலம் தொட்டு, தந்தை செல்வாவுடன் இணைந்து அவர் மறையும் வரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, அவர் மறைந்த பின்பும் அவரின் வழியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் ஜனநாயக ரீதியில் போராடிக்கொண்டு வருகின்றேன்.

எங்கிருந்தோ வந்து விட்டு தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது நகைப்பைத் தருகின்றது. பாவம் அவரது அரசியல் அறிவு அவ்வளவுதான்.

இல்லாத ஒரு பதவியை தனக்கு தரப்பட்டது என்று பொய்களைக் கூறி எமது கட்சி உறுப்பினர்களை குழப்பத்தில் ஆழ்த்தி கட்சிக்குள் உட்பூசலை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை!

“அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது. ஆனால், அதற்காகத் தவறான தீர்மானங்களுக்குத் துணைபோகவும் முடியாது.”

– இவ்வாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்கும் என முழுமையாக எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தலைமையிலான அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகச் செயற்படுகின்றமை கவலைக்குரியது. கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசு தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும், அரசின் கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குண்டு.

யுகதனவி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும். இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்துக்கும், மின்சாரத்துறை அமைச்சுக்கும் இடையில் சாதாரண ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையைப் பிற நாட்டின் தனியார் நிறுவனத்துக்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையைத் தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றோம்.

யுகதனவி விவகாரத்துக்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன.

கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்துக்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்கள்.

உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

Posted in Uncategorized

அப்பாவி தமிழ் இளைஞர்களை கைதுசெய்யும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுங்கள்-றிசாட்

அப்பாவி இளைஞர்களை கைது செய்யும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றி மனிதர்களுக்கு ஏற்ற சட்டமாக உருவாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“பயங்கரவாத தடைச் சட்டமானது இலங்கையிலே ஒரு அவசரத்திற்காக தற்காலிகமாக கொண்டுவரப்பட்டது. அந்தச்சட்டத்தினை பயன்படுத்தியே பாராளுமன்ற உறுப்பினரான என்னை கைதுசெய்தார்கள். அதே போல கிளிநொச்சி முல்லைத்தீவுஇ மட்டக்களப்பு பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் இரண்டு வருடம் என சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்ற அடிப்படையில அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களிடம் பணம் இல்லை அதனால் சட்டத்தரணிகளை நியமிக்கும் வாய்ப்பில்லாமல் மிகவும் கஸ்ரப்படுகின்றார்கள். அதேபோல 300வரையான முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் 40 பேருக்கு வழக்குத்தாக்கல் செய்துள்ள நிலையில் ஏனையவர்களுக்கு வழக்குத்தாக்கல் எதனையும் செய்யாமல் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழே சிறையிலே வாடுகின்றார்கள்.

எனவே இந்தச்சட்டத்திலே உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று உலகமே வேண்டி நிற்கின்றது. இந்த நாட்டிலே ஆகப்பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக ஆடைத்தொழிற்சாலைகள் இருக்கின்றது. எனவே அதனால் கிடைக்கின்ற ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிபந்தனையாக வைத்து இந்த சட்டத்தை மாற்றி சர்வதேசத்தோடு உள்ள சட்டங்களாக உருவாக்குமாறு கேட்டிருக்கின்றார்கள். அந்த வரிச்சலுகை கிடைக்காமல் போனால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடிய ஆபத்து ஏற்படும். எனவே நாம் இந்தமோசமான பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்து மனிதர்களுக்கு ஏற்ற சட்டமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார்.

Posted in Uncategorized

அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு-பெப்ரல் அமைப்பு

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தெளிவாக உள்ளது. கோவிட்19 வைரஸ் தாக்கத்தினால் தேர்தல் பிற்போடப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டின் தேர்தல் முறைமை ஆட்சியாளர்களினால் தொடர்ச்சியாக மாற்றியமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சருக்கு தேர்தல் சட்டங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட்19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 வைரஸ் பரவல் தாக்கம் செலுத்தும் வேலையில் பாராளுமன்ற தேர்தலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த முறையில் நடத்தியது. தற்போதைய அரசாங்கம் கடந்த வருடங்களில் எதிர்க் கட்சி பதவியில் இருக்கும் போது உரிய நேரத்தில் தேர்தலை நடாத்துவதற்கு பல போராட்டங்களை முன்னெடுத்தது. அவர்களின் போராட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் பெப்ரல் அமைப்பு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.

தேர்தலை நடத்துவதால் கோவிட் பரவல் தீவிரமடையுமா? தேர்தலுக்கு செலவாகும் 6000 ஆயிரம் மில்லியன் முதல் 10000 ஆயிரம் மில்லியன் வரையிலான நிதி தற்போது அரசாங்கத்திடம் உள்ளதா? தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமை தொடர்பில் ஒரு தீர்வு கிடைக்கப் பெறுமா? பல மில்லியன் செலவழித்து தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் முதலில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா ஆகிய கேள்விகள் தோற்றம் பெற்றுள்ளன.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்பது தெளிவாக உள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு முற்பட்ட அரசாங்கமும் இவ்வாறான தன்மையில் செயற்பட்டன. நாட்டின் தேர்தல் முறைமையை ஆட்சியாளர்கள் குறுகிய தேவைக்கேற்ப செயற்படுத்திக் கொள்வது ஜனநாயகத்துக்கு முரணானது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு 90 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுவது அடிப்படை உரிமைக்கு முரணானது” என்றுள்ளது.

சீனாவின் எட்டு நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா

டி.ஜே.ஐ டிரோன் (ஆளில்லா விமானம்) நிறுவனம் உட்பட, எட்டு சீன நிறுவனங்கள் மீது சில புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்களின் பங்குகளை குடிமக்கள் வாங்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

டி.ஜே.ஐ ஆளில்லா விமான தொழிநுட்ப நிறுவனத்தின் ஆளில்லா விமானங்கள்இ சீனாவில் உள்ள வீகர் இஸ்லாமியர்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இது ஓர் அடையாள ரீதியிலான தடையாகவே கருதப்படுகிறது. காரணம் டி.ஜே.ஐ பொதுவெளியில் வர்த்தகமாகும் நிறுவனமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்கள் டி.ஜே.ஐ நிறுவனத்தின் ஆளில்லா விமானங்களை வாங்கலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமென்னவெனில்இ 900-க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் உள்ள பொது பாதுகாப்பு முகமைகள் டி.ஜே.ஐ சாதனங்களை பயன்படுத்தி வருகின்றன.

இதில் நியூயார்க் நகர காவல்துறையும் அடக்கம். கடந்த ஆண்டுஇ அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஆளில்லா விமான சந்தையில் கிட்டத்தட்ட 80மூ சந்தையை பிடித்துள்ளது டி.ஜே.ஐ என துறை சார் தரவுகள் கூறுகின்றன.

நீதி, நிருவாகம், சட்டவாக்கல் ஆகிய துறைகள் இலங்கையில் இன்று சீர்குலைந்துள்ளன – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் நேற்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையங்களின் ஊடாக இவ்வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த விடயத்தைப் பார்க்கும் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வழக்காக அது தென்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே திட்டமிட்டு இந்தப் பொலிஸ் நிலையங்களினால் 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியலைக் கொண்டு இரண்டு பொலிஸ் நிலையங்களிலும் அதே பெயர்கள் உள்வாங்கப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளாத சிலருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதில் விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதிலிருந்து தெரிகின்ற விடயம் ஒன்றே தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளைக் கேட்டுப் போராடும் போது அவர்களை நசுக்குவதற்காக திட்டமிட்டு ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்னமே சிலரது பெயர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கெதிராக வழங்குத் தொடர்ந்திருக்கின்றாhர்கள். இந்த நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை நீதித் துறையினூடாக அடக்கும் ஒரு அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன. ஏனெனில் நீதித்துறை ஒழுங்காகக் செயற்படவில்லை என்பது இவ்hறான வழங்குகள் மூலம் தெரிகின்றது. சட்டவாக்கல் துறை ஒழுங்கில்லை என்பது பாராளுமன்ற நடவடிக்கைகள் குழு பராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு ஜனவரி 11ம் திகதி என ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தும், ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கூட்டத்தொடரை 18ம் திகதி ஒத்திவைத்திருக்கின்றார். இதனூடாகச் சட்டவாக்கல் துறையும் ஒரு சீரான நிலையில் இல்லை என்பது புரிகின்றது.

நிருவாககத் துறையும் இந்த நாட்டடில் மோசமான நிலையில் இருக்கின்றது என்பது எமது மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினைக் கொண்டு அறிய முடியும்.

அத்துடன், ஜனாதிபதியின் செயலாரால் தான் இந்த நாட்டில் நிருவாகம் சிர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஸ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ச அவர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளார்கள்.

மட்டக்களப்பு மாநசபையைப் பெருத்த மட்டில் கடந்த முதலாம் திகதி ஆளுநரால் மாநகரசபைக்குப் புதிய ஆணையாளர் நியமிக்கப்படுகின்றார். இருந்த பழைய ஆணையாளருக்கு இடம்மாற்றம் வருகின்றது. புதிய ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்று அன்று பிற்பகலிலே திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பின்பு பழைய ஆணையாளர் திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். அதேவேளை புதிய ஆணையாளர் காலையில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்று தனது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுகின்றார். அன்று பிற்பகலில் புதிதாக ஒரு தொலைநகல் வருகின்றது. புதிய ஆணையாளர் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல பழைய ஆணையாளர் மீண்டும் மாநகரசபைக்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றார்.

ஒரு நிருவாகத்தை அரசியல் எந்தளவுக்குக் குழப்புகின்றது என்பதற்கு உதாரணமாக எதிரணி உறுப்பினர் ஒருவரைப் பார்த்து அந்த ஆணையாளர் நமது தலைவர் சாதித்து விட்டார் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத கைங்கரியத்தைச் செய்துள்ளார் என்று கூறுவது இணையத்தளங்களில் பரவியிருக்கின்றது.

அது என்ன கைங்கரியம் ஒரு துஸ்பிரயோகம் நடத்தும் ஆணையாளரை மீண்டும் கொண்டு வந்ததுதான் அந்தக் கைங்கரியம். ஒரு நாட்டின் நிருவாகம் சீர்குiலைந்தால் அந்த நாடு எவ்வாறு அபிவிருத்தியை அடையும் என்பதற்கு இந்த மாநகரசபையில் நடக்கும் நிகழ்வுகளே சான்றாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 38 உறுப்பினர்களைக் கொண்ட மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு அமைத்திருக்கும் அந்த ஆட்சியைக் குழப்புவதற்காகவும், இந்த மாவட்டத்திலே மாநகரசபையினால் செய்யப்படும் அபிவிருத்தியைக் குழப்புவதற்காகவும் இப்படியொரு நிருவாக சீர்கேட்டைச் செய்திருக்கின்றார்கள். இது மிகவும் வருந்தத் தக்கதுடன், மாநகர மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்றாகும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சிங்கள மக்கள் இனவாதிகளே- பகிரங்கமாக கருத்து வெளியிட்ட தேரர்!

இலங்கையில் சிங்கள மக்கள் இனவாதிகளே என தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக சமூகத்தில் நல்லிணக்கத்திற்கான அரசியலமைப்பு என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட வடவல சித்தார்த்த தேரர் என்பவரே, கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவுபடுத்தி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் இந்த கருத்துக்களை வெளியிட்டமையால் விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும், எனினும் அது தொடர்பில் தான் கவலையடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நீண்ட காலமாக என் மனதில் இருக்கும் பெரும் வேதனையான ஒரு விடயத்தை நான் இந்த இடத்தில் சொல்ல ஆசைப்படுகின்றேன். நான் சிலாபம் பகுதியில் கடற்கரைக்கு அருகில் பிறந்தேன்.

நான் வாழ்ந்த அந்த பகுதியில் நிறைய தமிழ் குடும்பங்கள் அன்று வாழ்ந்து வந்தன. 1956 ஆம் ஆண்டு காலப் பகுதி அது. அந்த நாட்களில் நான் பாடசாலைக்கு சென்று வந்ததன் பின்னர் விகாரைக்கு சென்று அங்குள்ள புத்தகங்களை வாசிக்கச் செல்லுவேன்.

அன்று அதில் நான் பார்த்த விடயம் தான் இன்று வரை என்மனதில் பெரும் கவலையாக உள்ளது. சிங்களவர் தமிழர் இனக் கலவரம் இடம்பெற்ற வேளையில் சிங்களவர்களால் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் சிங்களவர்களின் உடல்களை அமிழ்த்துகிறார்கள்.

அதேபோல் மற்றொரு சம்பவத்தையும் பார்த்தேன் அதேபோல் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் தமிழர்களின் உடல்களை அமிழ்த்தி கொல்கின்றார்கள். அன்று எனக்கு 10 வயது . இதை பார்த்த நாள் முதல் இன்று வரை சிங்கள தமிழ் கலவரம் பற்றி பேச்சை எடுத்தால் என் மனம் என்னிடம் சொல்லும் ”சித்தார்த்த நீ மாத்திரம் சிங்களவர்களுக்காக பேசக்கூடாது” என்று.

அதே போல் நேற்று மாலை ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த புத்தகத்தில் கடந்த 70 களில் நடத்த யுத்தம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த யுத்தத்தின் போது இருந்த தமிழ் குடும்பங்கள் வீடுகளை விட்டு காடுகளுக்குள் ஒளிந்திருந்து ஒரு வாரம் கழித்து வீடு உள்ளதா என பார்க்க வருவார்கள்.

வந்து பார்க்கும் போது வீட்டிற்கு குண்டு தாக்குதல் மேற்கொண்டு வீடு சுக்குநூறாகியிருக்கும். தாய் தன் தந்தையை தேடி அழுகிறாள். காரணம் தந்தையை காணவில்லை. பார்த்தால் தந்தை கிணற்றில் விழுந்துள்ளார் அல்லது இராணுவத்தினால் கொன்று வீசப்பட்டுள்ளார்.

இப்படியான நாட்டில் தான் நாம் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகின்றோம். இன்று தேரர்களாகிய நாம் மக்களிடத்தில் நிறைய, பிரபலமாக, கடுமையாக விமர்சனத்திற்குள்ளாகின்றோம். நாம் தான் இனவாதிகள் என நான் சொல்கின்றேன் அது உண்மை தான்.

இதை கூறியதற்காக என்னை விமர்சிப்பார்கள். பத்திரிகைகளில் எழுதினாலும் பரவாயில்லை அதுதான் உண்மை. தேரர்களாக எமக்கு, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய உயிரை உயிராக மதித்து அவர்களுக்கு உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.