மகிந்த – பஸில் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்க நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ தமது உத்தியோகபூர்வ கடமைகளை எங்கு செய்கின்றார்கள் என்பது பொது மக்களுக்கு தெரிவதில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிவில் அமைப்புகளை சேர்ந்த சிலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Posted in Uncategorized

இந்நாடு மதசார்பற்ற, சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக வேண்டும் – காலிமுக போராட்டக்காரர்கள் மத்தியில் மனோ கணேசன்

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த வேண்டாம். ஆகவே, இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக வேண்டும். அதுபோல் மதசார்பற்ற நாடாகவும் வேண்டும். இந்த கருத்துகள் நாட்டின் அரசியலமைப்புக்குள், சட்ட வரையறைக்குள் வர வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி கூறினார்.

காலிமுக போராட்டக்காரர்கள்  அரசியல் கட்சிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் உரை நிகழ்த்திய மனோ எம்பி மேலும் கூறியதாவது;    

எம்பிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில், நாட்டுக்கும், பதவிக்கும் சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள். உண்மையில் நாட்டுக்கும், பதவிக்கும் தாம், ஒருபோதும் சொந்தக்காரர்கள் இல்லை, தெரிவு செய்யப்பட்ட சில காலத்துக்கான குத்தகைகாரர்கள்தான் என்பது சிலருக்கு மறந்து விடுகிறது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கண்காணிக்க நிரந்தரமாக மக்கள் சபைகள் தேவை. ஆகவே உங்கள் மக்கள் சபை என்ற பிரேரணையை வரவேற்கிறேன்.

ஆனால், மக்கள் சபை என்ற பிரேரணையை சும்மா வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அது நாட்டின் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு சட்ட வலு கிடைக்கும். அதேபோல் இன்னமும் சில அடிப்படை விடயங்கள்  நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும்.

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதை தீர்க்காமல் ஒன்றும் நடக்காது. உங்கள் போராட்டம் சிங்கள போராட்டமல்ல என நினைக்கிறேன்.   தமிழ் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன். முஸ்லிம் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன்.  அது சிங்கள,தமிழ், முஸ்லிம் போராட்டம் என நினைக்கிறேன்.

இந்த கருத்தும், போராட்டக்களத்தில் இருந்தால் போதாது. அதுவும் நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும். எப்படி?  இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம்,நாடு என்பதும், மதசார்பற்ற நாடு என்பதும் நாட்டின் அரசியமைப்பில் சட்டப்படி இடம்பெற வேண்டும்.

இந்நாடு ஒரு இனத்துக்கும், மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்தப்படக்கூடாது. இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். மதசார்பற்ற நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும். இது எமது போராட்டம்.

கோட்டாவுக்கு அமெரிக்கா விசா மறுப்பு; தரை இறங்க இந்தியா மறுப்பு; வெளியேறும் பல முயற்சிகள் தோல்வி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் 15 வரையிலான அவரது நெருங்கிய குடும்ப உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. அதேவேளை, அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஜனாதிபதி விசா விண்ணப்பித்த போதிலும் அமெரிக்க அதனை மறுத்துள்ளது. அதேவேளை, இலங்கை விமானபப்டையின் விமானங்கள் இந்திய மண்ணில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் விமான நிலைய அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்திருந்த ஜனாதிபதி மற்றும் உறவினர்கள் , நேற்று திங்கட் கிழமை இரண்டு பெல் 412 ரக உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு ரத்மலான விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அங்கே, முப்படையினரின் தளபதிகளை சந்தித்துவிட்டு, மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL225 ஊடாக டுபாய்க்கு அவர்கள் ஜனாதிபதியும் அவரது உறவினர்களும் அனைவரும் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்களை குடிவரவு பகுதிக்கு அவர்களின் கடவுசீட்டுக்களை ஸ்டாம் பண்ணுவதற்கு வருமாறு குடிவரவு அதிகாரிகள் நிர்ப்பந்தித்தனர். ஆனால், பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அந்த பகுதிக்கு செல்வதற்கு அவர்கள் மறுத்தனர். அதேநேரம் , விசேட மற்றும் அதி விசேட அதிதிகள் செல்லும் குடிவரவு பகுதியில் பணியாற்றும் அதிகாரிகள் சனிக்கிழமை இரவு முதல் தமது பணிகளை இடை நிறுத்தி இருந்தனர்.

அதேசமயம், ஜனாதிபதியை ஏற்றிக்கொண்டு சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்தமான AN32 என்ற விமானம் இந்திய விமானம் நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு இந்தியா மறுத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, இலங்கை விமானப்படை முகாம் ஒன்றில் ராஜபக்ஸ நேற்றைய இரவை கழித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கோட்டபாய திறந்திருந்ததால், அமெரிக்க செல்லுவதற்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரின் மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் இன்னமும் அமெரிக்க பிரஜைகளே. ஆனால், அவர்கள் இன்னமும் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனர்.

அமெரிக்க குடியுரிமையை திறந்த ஒருவருக்கு மீண்டும் விசா வழங்க முடியாது என்றும் நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவரின் மரணம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே விதிவிலக்காக விசா வழங்கப்படும் என்றும் அமெரிக்க தூதரகம் விளக்கம் அவருக்கு அளித்துள்ளது.

அவருக்கு விசா இல்லை என்பது மிகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தலைவராக அவர் அங்கு செல்லலாம். ஆனால், தற்போதைய நிலைமைகள் வேறு ” என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஸ அண்மையில் அவரது அமெரிக்க கடவு சீட்டை தொலைத்திருந்த நிலையில் புதிதாக கடவுசீட்டை பெறுவதற்கு அமெரிக்க தூதரகம் உதவியிருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகம் ஆர்பாட்டக்காரர்களினால் முற்றுகை இடப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியும் பசிலும் தப்பி சென்றிருந்த நிலையில், பசில் அவரது கடவுசீட்டை அங்கு விட்டு சென்றிருந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் சில்க் பாதை ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பசில் மேற்கொண்ட முயற்சி குடிவரவு அதிகாரிகளினால் முறியடிக்கப்பட்டது.

Posted in Uncategorized

‘தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம்’ – போராட்டக்காரர்கள் அறிவிப்பு

ஜனாதிபதி பதவி விலக தயார் என்ற அறிவிப்பை விடுப்பதை விடுத்து, பிரதமரும் பதவி விலக வேண்டும் என கொழும்பு மாளிகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

தான் முன்பு கூறியதை போன்றே, எதிர்வரும் 13ம் திகதி பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை தெரிவித்தது.

இந்த நிலையில், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

உரிய தீர்வு கிடைக்கும் வரை, தாங்கள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற போவதில்லை என போராட்டக்காரர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77 பேர் கைது!

சட்ட விரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்றதாக கூறப்படும் 77 பேர் மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் இயந்திரப்படகில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்து கைப்பற்றினர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததை அடுத்து 77 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

சஜித்தை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க ஐமச தீர்மானம்!

டைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தினார். 

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் தற்போது கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மட்டுமே வெளியிடுவார்

முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி பிரதமருக்கு தெரியப்படுத்தியதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மட்டுமே வெளியிடுவார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறைகளில் ஊகச் செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்று கூறியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை என மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக அமைப்புகள் மற்றும் மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்புமாறு இந்தியாவின் மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜுலை 20ம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்!

இன்று நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13ம் திகதி பதவி விலகினால் ஜூலை 15 பாராளுமன்றத்தை கூட்டி அவரது பதவி விலகலை அறிவித்து 19ம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு கோரப்பட்டு ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

முடிவை இறுதி நேரத்தில் மாற்றுவாரா ‘ரிவஸ் மன்னன்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எடுத்த பல தீர்மானங்களை தலைகீழாக மாற்றிய அல்லது “மீளப்பெற்ற” ஜனாதிபதி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ரசாயன உரத்தடை, காலத்துக்கு காலம் அமுல்படுத்தப்படும் அவசர சட்டம், காலத்துக்கு காலம் ஊரடங்குச் சட்டம், பல தடவைகள் வாபஸ் பெறப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட கோத்தபாய ராஜபக்சவின் தீர்மானங்கள் தலைகீழாக மாறுவது உலக சாதனையாகக் கூட இருக்க முடியும்.

தற்போது அவர் பதவி விலகுவதற்கான திகதியை அறிவித்துள்ளார். அது நாளை மறுநாள் 13ம் திகதியாகும். நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற போதிலும், ஜனாதிபதி பதவி இருக்க எந்த அவகாசமும் இல்லை. ஆட்சியில் அவருக்கு இருந்த தார்மீக சக்தி ஏற்கனவே அவரது காலடியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தனது ராஜினாமா குறித்து சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் தனது உடன்பாட்டை தெரிவித்தாரே தவிர இன்னும் எழுத்துமூலம் பதவி விலகவில்லை.

எனவே, ‘ரிவஸ் மன்னன்’ நாளை மறுநாள் தனது ராஜினாமா முடிவை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.