இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் – செல்வம் அடைக்கல நாதனுக்கும் இடையில் விசேட சந்திப்பு.

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(22) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட் ( justine boillat) தலைமையிலான குழுவினர் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு 22-10-24 காலை விஜயம் செய்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடினார்.

இதன் போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் டானில் வசந் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது கட்சியின் செயல்பாடுகள் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,தற்போதைய தேர்தல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து குறித்த குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்,தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

திருகோணமலை மாவட்ட மக்களே உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க எங்கள் வேட்பாளர் துஷ்யந்தன்

திருகோணமலை மாவட்ட மக்களே உங்கள் கேள்விகளுக்கு பதில் வழங்க எங்கள் வேட்பாளர் துஷ்யந்தன் உங்கள் முன் நேருக்குநேர் -இடம் நகரசபை மண்டபம் -சனிக்கிழமை 26-10-24 -நேரம் பிற்பகல் 4 மணி.

ஊர்காவற்துறையில் பிரசாரத்தில் ஈடுபடும் சங்கு சின்ன வேட்பாளர்கள்!

ஊர்காவற்றுறையில் சங்கு கூட்டணி மக்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் வேட்பாளர்களான குருசாமி சுரேந்திரன், சசிகலா ரவிராஜ் ஆகியோர் ஒன்றிணைந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி: ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா

பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்கள் தேசமாக ஒன்றிணைய சங்கு சின்னத்திற்கு புள்ளடி இடுவோம் – சபா குகதாஸ்!

செப்டெம்பர் 21 இலங்கை சனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழர்களாகிய நாம் தேசமாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரின் சின்னமான சங்குக்கு நேரே புள்ளடி இட்டு ஒற்றுமையை பலப்படுத்துவோம் என ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் வாக்குறுதிகள் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த காலங்களை போன்றே தேர்தல் முடிவுற காற்றோடு காற்றாக பறந்து விடும் இதுதான் உண்மை எனவே தொடர்ந்து ஏமாறும் தரப்பாக இல்லாமல் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரை தீர்க்கப்படவில்லை என்பதை ஜனநாயக புள்ளடியில் காட்டுவோம்.
தென்னிலங்கை சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் அதிகார கதிரையில் அமர்வதற்கான போட்டியிலும் ஒற்றையாட்சி மனோ நிலையிலும் குறியாக உள்ளனர் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கப்பட்டால் மட்டுமே நாடு முன்னோக்கி செல்லும் என்ற உண்மையை புரிந்தும் அதற்கான தீர்மானங்கள் எதுவும் இன்றி வெறுமனே பூகோள நாடுகளின் நிகழ்ச்சி நிரலிலே களத்தில் இறங்கியுள்ளனர் சிங்கள வேட்பாளர்கள் ஆகவே தமிழ் மக்கள் தமது அபிலாசையை முன் நிறுத்தி அதன் பேரப்பலத்தை உறுதி செய்ய சங்குக்கு வாக்களிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted in Uncategorized

சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா – ரெலோ சவால்

காணாமல் ஆக்கபட்டோர் எத்தனை பேர் என்ற வாய்க் கணக்குகளை சொல்வதை விடுத்து சர்வதேச விசாரணை நடத்துவதன் மூலமாகவே சரியான கணக்கினை அறிந்து கொள்ள முடியும். அப்பொழுதுதான் யார் பொய் சொல்லுகிறார்கள் யார் உண்மை சொல்லுகிறார்கள் என்பது வெளிவரும். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். அதை விடுத்து காலத்துக்கு காலம் வெளிவிவகார அமைச்சர்களாக வருபவர்கள் தங்கள் மனக்கணக்குகளின் படி காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையை கூறுவது அபத்தமாகும் என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டு இருக்கலாம் என்று சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த உண்மையை கண்டறிவது அரசினுடைய கடமை. அதற்கான நியாயபூர்வமான விசாரணையை நடத்துவதும் அரசின் கடமை. உள்ளூர் விசாரணைகளின் மூலம் நீ பொய் சொல்லுகிறாய், நான் பொய் சொல்லுகிறேன் என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதனால் தான் சர்வதேச விசாரணை கோரப்படுகிறது. சர்வதேச விசாரணையின் மூலமே சரியான தரவுகளையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஏற்றுக்கொள்ள ப்படக்கூடிய எண்ணிக்கையும் அறிந்து கொள்ள முடியும்.

இதனால் தான் நாம் சர்வதேச விசாரணையை கோருவதோடு ஐநா மனித உரிமை உயர் ஸ்தானிகரும் மனித உரிமை பேரவையும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினுடைய கருத்தும் சர்வதேச விசாரணையை கோருவதே சாலச் சிறந்தது என்று தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. அவர் கூறும் எண்ணிக்களை தமிழ் மக்களோ சர்வதேச பொறிமுறைகளோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

காலத்துக்கு காலம் வாய் கணக்குகளை வெளியிடுவதை விடுத்து இம்முறை ஐநா மனித உரிமைப் பேரவையில் எதிர்கொள்ள இருக்கும் பிரேரணைக்கு இணைய அனுசரணை வழங்கி சர்வதேச விசாரணை மூலமாக பொறுப்பு கூறல் நல்லிணக்கத்திற்கு அரசு தயாராக வேண்டுமே தவிர இந்த மாதிரியான கருத்துக்கள் எந்த முடிவுக்கும் இட்டுச் செல்லாது.

சரியான கணக்குகளை அறிந்து கொள்ள அமைச்சர் அலி சப்ரி அவர்கள் சர்வதேச விசாரணைக்கு தயாரா? என்பதற்கு அவர் பதில் கூற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சமஸ்டிக்கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா..! சபா குகதாஸ் பகிரங்க சவால்

ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக்கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் என்றார்.

அதேவேளை, நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீன திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமாக பார்க்கவில்லை: சபாகுகதாஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கின் தமிழர் பகுதிகளில் சீன (China) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகாதாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் சீன தூதுவரை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் சென்று சந்தித்திருந்தார்கள். அவர்களது சந்திப்பு தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆபத்தான சந்திப்பாக பார்க்கும் நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் வல்லரசுகளின் ஆதிக்கங்களே அதிகமாக காணப்படுகின்றன.

கடந்த தேர்தல்களிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் இலங்கையில் பிரயோகிக்கப்பட்ட நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன தூதுவரை சந்தித்தது தற்போதைய சூழ்நிலையில் ஏற்புடையதல்ல.

வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் பொருத்து வீட்டு திட்டம் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு அரிசி என்பன வழங்கப்பட்டது. குறித்த திட்டங்களை மக்கள் தமக்கான ஆரோக்கியமான திட்டங்களாகப் பார்க்கவில்லை.

ஆகவே, மக்களின் விருப்பங்களை அறியாதும் எமது கலாசாரங்களை பின்பற்றாத வீட்டு திட்டங்களை வழங்கும் சீன அரசாங்கம் மக்களை கருத்தில் கொள்ளாது தமது பூலோக அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்காக செய்யும் வேலை திட்டமாகவே பார்க்க முடிகிறது” என கூறியுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா)

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஒரே ஒரு பேசுபொருளாக இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் 25க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை மையமாக வைத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்குமாக தமிழ்ப் பொது வேட்பாளராக மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களின் பெயர் குறிப்பிட்டிருக்கின்றது.

தற்போது உண்மையிலேயே தமிழ் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. அது கடந்த காலங்களிலே இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசாங்கங்களினாலும், 1978ம் ஆண்டு நிறைவேற்று ஆட்சிமுறை கொண்டுவரப்பட்டதில் இருந்து ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு ஜனாதிபதிகளும் தமிழ் மக்களது பிரச்சனைகளை ஏறெடுத்தும் பார்க்காமல் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதைக் கூட கணக்கெடுக்காத நிலையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் தேவை என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியிலே தோற்றம் பெற்றது. இந்நிலைப்பாடு தமிழ் மக்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை, தற்போதும் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இங்கு நடத்தப்படுகின்றார்கள் என்பதையும், 2009க்கு முன்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்கள் ஒன்றாக இருந்ததைப் போன்று தற்போதும் ஒன்றாக நின்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற அடிப்படை உணரப்பட்டே தோற்றம் பெற்றது.

இதனூடாக தென்னிலங்கையிலே ஜனாதிபதியாக வர ஆசைப்படும் வேட்பாளர் எங்களுடன் பேரம்பேசுகின்ற ஒரு நிலைப்பாடு உருவாகலாம் என்ற நோக்கமும் இதனுள் உண்டு. பெரும்பாலும் சிங்களப் பகுதிகளிலே நான்கு பேருக்கிடையில் ஒரு போட்டி நிலவக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. இதில் வெல்லக கூடிய வேட்பாளர்கள் எங்களுடன் பேசுவதற்கான காலமும் தற்போது இருக்கின்றது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கின்ற நிலையில் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு, பரிசீலிப்பதற்கான நியாயமான தீர்வான்றை இவர்கள் முன்வைப்பார்களாயின் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்வது உகந்ததாக இருக்கும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

ஏனெனில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது நாங்கள் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற அடிப்படையில் எழுந்த விடயம் அல்ல. அதற்கப்பால் எங்களது பிரச்சனைகளை தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொண்டு செல்வதுடன், கொண்டு செல்லப்படும் கோரிக்கைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையில் எங்கள் கோரிக்கைளை நிறைவேற்றுவதற்கு வேட்பாளர்களில் எவராவது பரிசீலிப்பார்களாக இருந்தால், அதற்கான உத்தரவாதங்களைத ருவார்களாக இருநதால், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்திய தரப்பினரை பேசுவதற்கு அழைத்தால் அவர்களுடன் பேச வேண்டிய தேவைப்பாடும் எங்கள் மத்தியில் இருக்கின்றது.

அவ்வாறு எங்கள் கோரிக்கைகள் நியாயமாகப் பரிசீலிக்கப்படாதவிடத்து, தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருந்து இன்னும் சிங்களத் தரப்பிலே ஜனாதிபதியாக வருபவர்கள் எங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தயாராக இல்லை என்ற விடயத்தை உறுதியாக வெளி உலகத்திற்குச் சொல்வதற்கும், எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். இந்த நிலையில் நாங்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை முன்னெடுத் விடயம் சரியானது என்பதை நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலையும் இங்கு உருவாகும் என்று தெரிவித்தார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாமலிடம் சபா குகதாஸ் கேள்வி

காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு வாக்கெடுப்பு நடாத்த தயாரா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksha) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். சபா குகதாஸ் (Saba Kugadas) கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இன்றையதினம் (01.08.2024) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும்,

பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வடக்கு மாகாண இளைஞர்களில் ஒரு பகுதியினர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என கைவிட்டுள்ளனர் என கூறியதுடன் பெரமுன ஒரு போதும் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை ஏமாற்றியதன் விளைவு

நாமலின் தந்தை மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவிற்கு பதின்மூன்று பிளஸ் வழங்குவேன் என உத்தரவாதம் கொடுத்ததை யுத்த முடிவின் பின்னர் பதின்மூன்று பிளஸ் பிளஸ் என பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடாத்தியதையும் அவர் மறந்திருக்கமாட்டார்.

மகிந்த ராஜபக்ச தமிழர்களை ஏமாற்றியதன் விளைவை 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கற்றுக் கொண்டதை மறந்து விடமாட்டார்.

வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பின் உச்சம் 2013ஆம் ஆண்டு புள்ளடி மூலம் காட்டப்பட்டது.

வாக்கெடுப்பு

அதன் வெளிப்பாடு தமக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்பது தான் என நாமல் ராஜபக்ச நினைவில் கொள்ள வேண்டும்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாமலிடம் சபா குகதாஸ் கேள்வி | Saba Kugadas Question To Namal

2019ஆம் ஆண்டு ஐனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கொடுத்த தீர்ப்பை உலகமே அறியும்.

தமிழ் மக்களை பிரித்தாளும் எண்ணங்களை கை விட்டு முடிந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு வாக்கெடுப்பை நாமல் நடாத்த வேண்டும்” – என்றுள்ளது.

Posted in Uncategorized