ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரதிநிதி – யாழ் மாவட்ட செயலாளர் சந்திப்பு

ஐ.நா. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஓகஸ்ட் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மகேசனை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்தார்.இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து இதன்போது இவர்கள் விரிவாக அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துக் கொண்டனர்.

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது என்கிறார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தாய்லாந்தில் உள்ள சூலாங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஐநா பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மே 9 வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசேட விசாரணை நாளை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில் பதிவாகிய சொத்து சேதம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை முதல் HRCSL வளாகத்திற்கு நாளாந்தம் வரவழைக்கப்படுவார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு பெற்ற) ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் மனித உரிமை ஆணையத்திற்கு 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமக்கு மொத்தம் 521 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 107 முறைப்பாடுகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 88 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

86 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்திலிருந்தும், 26 முறைப்பாடுகள் களுத்துறை மாவட்டத்திலிருந்தும் கிடைத்துள்ளன.

வீடுகளுக்கு தீ வைத்தல் , கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தல் , பஸ்களுக்கு தீ வைத்தது, வீடுகளை சேதப்படுத்தியது போன்ற புகார்கள் இந்த புகார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சேதங்களை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மீண்டும் சொந்த நாடான அமெரிக்கா செல்ல தயாராகும் கோட்டாபய

தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்க கிரீன் கார்டு லாட்டரியை பெறும் நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன் தனது குடியுரிமையை திரும்பப் பெற்றார்.

எவ்வாறாயினும், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்க பிரஜைகள் என்பதால், முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை மீளப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்க குடியுரிமையை துறந்தவருக்கு அதை திரும்ப வழங்க அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தற்போது தாய்லாந்தில் இருக்கும் திரு கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக உதயங்க வீரதுங்க நேற்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக 09 மனுக்கள் தாக்கல்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட ஒன்பது பேரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

மாடு அறுப்பதை தடுத்த மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றில் கிடைத்த நற்பெயர்

களனியில் பசு வதையை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என தெரிவித்த கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, சந்தேகநபரை நவம்பர் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விடுதலை செய்தார்.

2007ஆம் ஆண்டு, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சந்தேகநபரான அமைச்சரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் இவ்வாறு தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த  விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய அவர் கைதாகியுள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

அரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் தொடர்ந்தும் பொலிஸார் ஆர்பாட்டக்காரர்களை களைக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

பல பகுதிகளில் இருந்து வருகை தனித்துள்ள மாணவர்கள் மற்றும் பௌத்த தேரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவுளித்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மேலும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்

ரணில் பக்கம் செல்ல பலர் தயார் தமிழ், முஸ்லிம் எம்.பிக்களும் உள்ளடக்கம்

“ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியிலிருந்து 20 இற்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைய இதுவரை இணக்கம் தெரிவித்துள்ளனர். அவர்களுள் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர் ” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“எதிரணியில் இருந்து வரும் உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு பலமான அரசை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுவவுள்ளார்.

அந்த அரசுக்கு சர்வகட்சி அரசு, சர்வகட்சி ஆட்சி, தேசிய அரசு ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனவே, பலமிக்க அரசுக்கு இந்த மூன்று பெயர்களில் ஒரு பெயரை அதில் அங்கம் வகிக்கவுள்ள உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஜனாதிபதி சூட்டுவார்.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அசைக்க முடியாத அரசை நிறுவுவதே ஜனாதிபதியின் விருப்பம். இதற்காகப் பல கட்சிகளை அவர் தனித்தனியே சந்தித்தும் பேச்சு நடத்தியுள்ளார்.

எனினும், சில கட்சிகள் இழுத்தடிப்புக்களைச் செய்கின்றன. சர்வகட்சிகளை உள்ளடக்கிய தேசிய வேலைத்திட்டத்துக்குக்கூட சில கட்சிகள் நிபந்தனைகளை விதிக்கின்றன.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியால் சிக்குண்ட நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். இது கட்சி அரசியல் செய்யும் நேரமல்ல. எனவே, காலத்தை வீண்விரயம் செய்யாமல் சேர விரும்பும் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு பலமிக்க அரசை நிறுவி பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்ட தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகளைக் காணும் பயணத்தை ஜனாதிபதி உடனடியாக ஆரம்பிக்கவுள்ளார்” – என்றார்.