தையிட்டி விகாரை தொடர்பான ஜனாதிபதியின் இயலாமை : ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுரவை நோக்கி கேள்வி கேட்ட போது அவர் வழங்கிய பதில் அவரின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணியில் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் தனிநபர் சட்டத்தை மீறி சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நீதி வழங்குமாறு ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் அதற்கு ஆதரவு வழங்கும் மக்கள் பிரதிநிதிகளையும் பார்த்து மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்ட முயற்சிக்கின்றனர் என அப்பட்டமான பொய்யு ரைக்கும் ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே தமிழர் தாயகப்பகுதியில் அரச சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்க முயற்சிக்கின்றார்.

இதன் மூலம் இதுவரை அரச இயந்திரம் மேற் கொண்ட மேற் கொள்ளும் மத ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத ஆக்கிரமிப்பு போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி ஆதரிக்கின்றாரா ?

அநுர அரசாங்கம்

அநுர அரசாங்கம் தமிழர் தாயகத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மாகாணத்திற்கும் தமிழர்களுக்கம் தொடர்புகள் இல்லை என்ற உள் நோக்கில் மறைத்து வடக்கு மாகாணம் என்ற உரையாடலை முதன்மைப் படுத்துகின்றனர்.

ஜனாதிபதி சட்டவிரோத நடவடிக்கைக்கு நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக என்ன செய்வேன் என சொல்வதற்கு முதுகெலும்பற்று வடக்கு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வு வழங்குவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.

ஆகவே வடக்கு , கிழக்கு மாகாணங்களில் சட்டத்தின் ஆட்சியை அரச இயந்திரத்தின் மூலம் வழங்கும் இயலுமையை ஜனாதிபதி வழங்க தயார் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த பொறிமுறைகளை மீள தூசி தட்டும் அநுர அரசாங்கம் :ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

கடந்த கால அரசின் பொறிமுறைகளையே தற்புபோதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசும் கையில் எடுப்பதாக ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 58 கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத், உள்ளகப் பொறிமுறை மூலம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்தகால ஆட்சியாளர்களினால் காலத்தை கடத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை பலவீனப்படுத்துவதற்கு உண்மைக்கான நல்லிணக்க ஆணைக்குழுக்களை நிறுவியது.

தொடர்ச்சியான நிகழ்ச்சி

இது போன்ற, தோற்றுப் போன பொறிமுறைகளை அநுர அரசும் கையில் எடுப்பதாக கூறுகின்றமை கடந்தகால ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

மனிதவுரிமைப் பேரவையால் வழங்கப்பட்ட உள்ளகப் பொறிமுறை , கலப்புப் பொறிமுறை மற்றும் கால நீடிப்பு போன்றவற்றுக்கு என்ன நடந்தது உலகிற்கே தெரியும்.

அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பர்ணகம மற்றும் உடலகம ஆணைக்குழுக்களுக்கும் தோல்வியடைந்ததை எல்லோரும் அறிவர்.

நீதிப் பொறிமுறை

எதிரணியில் இருக்கும் போது தேசிய மக்கள் சக்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பொறிமுறைக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்தது இல்லை ஆகவே பாதிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட பொறிமுறைகளால் இன நல்லிணக்கம் மற்றும் உண்மையை கண்டறிதல் ஏற்பட வாய்ப்பில்லை.

அநுர அரசாங்கத்திற்கு மடியில் கனம் இல்லையென்றால் 15 ஆண்டுகளாக தோல்வியடைந்த பொறிமுறைகளை சிந்திக்காது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கும் கடந்த மனிதவுரிமைப் பேரவையின் ஆணையாளர்களின் பரிந்துரைகளுக்கும் ஏற்ப சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதன் மூலமே உண்மையை கண்டறிவதுடன் நல்லிணக்கத்தையும் மீள் நிகழாமையையும் ஏற்படுத்த முடியும்.

Posted in Uncategorized

மாற்றத்தை நோக்கி அரசாங்கம் செல்வதற்கு ஆதரவினை வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன் -ரெலோ தலைவர் செல்வம்

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடன் மக்களின் ஆணையைக் கோரிய ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கு அதற்கான ஆணை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வழங்கப்பட்டுள்ளது.

அவ்விதமான நிலையில் அவர்களின் ஆட்சியின் முதலாவது வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர்கள் வடக்கு, மாகாணத்துக்கு அதிகமான ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார்.

அதனைவிடவும், சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை கட்சி அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், அவர்களின் முன்மொழிவுகள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்பது எனது வலியுறுத்தலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் முன்மொழிவுகளை கவர்ச்சிகரமாக முன்வைத்தாலும் அவற்றை செயற்படுத்துவதில்லை.

ஆகவே,தான் தேசிய மக்கள் சக்தி மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அந்த மாற்றத்தினையே நாமும் எதிர்பார்க்கின்றோம். சாதாரண பொதுமக்களுக்காக அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும்.

பொருளாதாரரீதியாக வரவு,செலவுத்திட்டம் முன்னேற்றகரமாக இருந்தாலும் அவற்றை செயற்படுவதில் அரசாங்கம் அதீதமான முனைப்பினைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

அதேநேரம், அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண்பிப்க வேண்டியது அவசியமாகின்றது.

என்னைப்பொறுத்தவரையில், மாற்றத்தை நோக்கி அரசாங்கம் செல்வதற்கு ஆதரவினை வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன். ஆனால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் தாமதமன்றி முன்னெடுக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைகான தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக படைகள் உட்பட தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்டவற்றுக்கு துணைபோதல் ஆகியவற்றுக்கும் தாமமன்றி தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறு அரசாங்கம் செயற்படாது விட்டால் என்னால் தற்போது காண்பிக்கப்பட்டுள்ள நல்லெண்ண சமிக்ஞையை விலக்கிக் கொள்ளவே நேரிடும் உள்ளார் என்றார்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களது மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

ஆதி பரம்பொருளான சிவபெருமானுக்கு உகந்த தினமான மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை நினைத்து மனதாற வழிபட்டு, சிவனின் அருளை பரிபூரணமாக பெற்று உலகு எங்கும் வாழும் இந்து மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

“மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் வாழும் இந்து மக்கள் இந்த சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் ,விழித்திருந்து விரதமிருந்து தான தருமங்களில் ஈடுபடுகின்றனர்.

இன்றைய மகா சிவராத்திரி நாளை கொண்டாடும் எமது இந்து மக்களின் வாழ்வு சிறக்கவும் ,மக்களுடைய நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு வளமிக்கதாகவும் , சிறப்பானதாகவும் அமையவும் இந் நாளில் பிராத்தித்துகொள்ளுவதுடன் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

அ.அடைக்கலநாதன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ.

Posted in Uncategorized

யாழ்.நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்

யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்,ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 19-02-2025 நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

மேலும் அவர் ,” யாழ். நூலக மேம்பாட்டுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆசியாவிலேயே முதன்மை இடத்தைப்பெற்ற யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. எனவே, நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.

இதனை செய்தவர்கள் இப்போதும் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள், எனவே, தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கல்வியில் மேலோங்கி இருந்த ஒரு மாவட்டம். யாழ்ப்பாணம் என்றால் கல்வி மான்கள் சிறந்து விளங்கிய மாவட்டம். இன்று பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு நூலகம் எரிப்பு சம்பவமும் ஒரு காரணம்.

நிதி ஒதுக்கீட்டுக்கு நன்றி. அதேபோல எரித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

மன்னார் மாவட்டத்தில் முறையான வடிகால் அமைப்பிற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்க ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மன்னார் மாவட்டத்தில் முறையான வடிகால் அமைப்பு அமைப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில்.

இலங்கை மாண்புமிகு #ஜனாதிபதி #அனுரகுமார #திசனாயக அவர்களுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ #செல்வம் #அடைக்கலநாதன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சமீபத்திய இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் குடியிருப்புகளையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் பயிர்கள் நாசம், பொருட் சேதம் போன்றவற்றை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சொத்துக்கள் மற்றும் சாகுபடியில் முதலீடு செய்த முதலீடுகளை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது நிகழும்போது, ​​அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்கள் உலர் உணவுகளை வழங்குகின்றன மற்றும் அவற்றை மற்ற இடங்களில் அல்லது தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற பொது இடங்களில் குடியேற்றுகின்றன.

இதை நிரந்தர தீர்வு என்று சொல்ல முடியாது. இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே நீண்ட காலமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் ஆய்வு நடத்தி முறையான வடிகால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இந்தப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
அ.அடைக்கலநாதன்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்.

Posted in Uncategorized

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கட்டாயம் மீண்டும் உருவாக வேண்டும் என ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகாமல் விட்டால் இன்றைக்கு இருக்கின்ற சூழலே தொடர்ச்சியாக நீடிக்கும்.

அதாவது பிரதேச சபைகளை, மாகாண சபைகளை ஏனையவர்கள் கைப்பற்றுவார்கள். அதன்பிறகு எங்களுடைய தேசியம் என்பது அங்கே இல்லாமல் போய் விடும். இப்பொழுதே தேசியம் என்பது அரிதாகிக் கொண்டு செல்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் தமிழ் எம்பி | Tna Must Be Re Formed Selvam Mp Request

தற்போதைய அரசாங்கம் வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை கைப்பற்றுவதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றது.

எங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையால் அவர்கள் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளை கைப்பற்றினால் மாகாண சபையையும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை: ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு தேவை என்றே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் (saba.kugathas) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் வடக்கு, கிழக்கில் சமஸ்டி தீர்வு தேவை என்பதற்கே பெரும்பான்மை ஆதரவை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

சர்வசன வாக்கெடுப்பு

1949ஆம் ஆண்டு சமஷ்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதிகாரப் பகிர்வுக்கான மக்கள் ஆணையும் 1977 ஆம் ஆண்டு தனித் தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணையும் 2004 ஆம் ஆண்டு மிகப் பலமான மக்கள் ஆணையும் அதன் பின்னர் இன்று வரை ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்குமான மக்கள் ஆணையே வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளின் பெரும்பான்மை முடிவுகளின் படி அதிகாரப் பகிர்வை கோரி நிற்கும் மக்களிடம் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை திணிக்க முற்படுவதை தவிர்த்து வேண்டும் என்றால் தமிழர்களின் அரசியல் அபிலாசையை தீர்க்க சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும்: அடைக்கலநாதன் எம்.பி பகிரங்கம்

யாழ்.தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டியதுடன், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்கும் என்றும் ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று (10.02) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முழுமையான ஆதரவு

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ் தையிட்டி விகாரைக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை தெரிவிக்கும்.

அது உண்மையில் உடைக்கப்பட வேண்டிய விடயம். வடகிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் நினைத்ததை செய்யும் ஒரு நிலை காணப்படுகின்றது.

எனவே இந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கான ஆதரவை நாங்கள் வழங்குவோம். மக்களுடைய விருப்பமும் அதுவே என்றார்.

கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு.

எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படும் சகல கட்சித் தலைவர்களும் கூடினர்.

பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

இதன் மூலம் பலமான பாராளுமன்ற நடவடிக்கைகளை கொண்டமைந்த பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் பக்கம் நாம் முன்நிற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற குழுக்களில் கவனம் செலுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இங்கு சகல கட்சித் தலைவர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்து சுட்டிக்காட்டினர்.

கடந்த ஜனவரி 29 ஆம் திகதியும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடி இதேபோன்ற கலந்துரையாடலொன்றை நடத்தியதோடு, இன்று இடம்பெற்ற கலந்துரையாடலும் இதன் ஓர் தொடர்ச்சியாகும்.

இக்கலந்துரையாடலில், ​​எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக்க (எதிர்க்கட்சியின் பிரதம கொறடா) ஜே.சி. அலவதுவல (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்) அஜித் பி. பெரேரா (எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்) ரிஷாத் பதியுதீன், நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், பி. சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், வீ.எஸ். இராதாகிருஷ்ணன் அனுராத ஜயரத்ன, டி.வீ. சானக மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized