ஜனாதிபதியாக பதவியேற்கத் தயாராகும் ரணில்!

பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினத்தில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியோருவர் தெரிவு செய்யப்படும் வரையில் இவரே ஜனாதிபதியாக இருப்பார்.

அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதன்போது புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடியும் வரையில் பதவியில் இருப்பார்.

7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் – சபாநாயகர் அறிவிப்பு

ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதியின் கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யாப்பின் அடிப்படையில் பிரதமர் ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்புகளையும் தற்காலிகமாக நிறைவேற்றுவார் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் திட்டத்தை ஏழு நாட்களுக்குள் நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அதற்கான அமைதியான சூழ்நிலையை நாட்டில் உருவாக்க உதவி செய்யுமாறும் பாதுகாப்பு தரப்பினரிடமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நாளை பதினாறாம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றம் கூடும் எனவும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

’பதவி விலகல் கடிதம்’ போலியானது

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் போலியானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கைக்கான சிங்கப்பூர் தூதரகம் ஊடாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், குறித்த கடிதத்தின் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மை குறித்து ஆராய்வதாகவும், இது தொடர்பில் இன்று  சபாநாயகர் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் இதுவரையில் சபாநாயகரினால் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (

பாராளுமன்ற குழுவின் கூட்டம் இன்று

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

Posted in Uncategorized

‘நாடு முடக்கப்படலாம்’ – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நியூஸ்நைட் நிகழ்ச்சிக்கே இக்கருத்தை வீரசிங்க கூறியுள்ளார்.

அத்தியாவசியமான பெற்றோலியத்துக்குச் செலுத்துவதற்கு போதுமான வெளிநாட்டு நாணயமாற்றானது கண்டுபிடிக்கப்படலாமா என நிறைய நிச்சயமில்லாத தன்மை நிலவுவதாக வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மீட்புப் பொதியொன்றைப் பெறுவதற்கான முன்னேற்றமானது, நிலையான நிர்வாகமொன்றைக் கொண்டிருப்பதிலேயே தங்கியுள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தங்களால் இம்மாத இறுதி வரையில் குறைந்தது மூன்று தொகுதி டீசல்களுக்கும், ஒன்று அல்லது இரண்டு தொகுதி பெற்றோலுக்கும் நிதியளிக்க முடிந்ததாகவும், அதற்கப்பால் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பெற்றோலியத்துக்கு தேவையான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்தை தங்களால் வழங்க முடியுமா என நிறைய நிச்சயமில்லாத தன்மை காணப்படுவதாக வீரசிங்க கூறியுள்ளார்.

அதானேலேயே தனக்கு பிரதமொருவர், ஜனாதிபதி, முடிவுகளை எடுக்கக் கூடிய அமைச்சரவை தேவைப்படுவதாகவும், அதில்லாமல் அனைத்து மக்களும் பாதிக்கப்படப் போவதாக வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான அரசாங்கமொன்று அமையுமானால் நெருக்கடியிலிருந்து மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து மாதங்களில் இலங்கை வெளிவருமென வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

’சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும்’

பொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு பொதுநலவாய செயலகத்தின் அர்ப்பணிப்பையும் செயலாளர் நாயகம் மீண்டும் வலியுறுத்தினார்.

எனவே அமைதியான மாற்றத்தை நோக்கி இலங்கையிலுள்ள அனைவரையும் நிதானத்துடன் செயற்படுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

சிறுபான்மை மக்கள் வழங்கியிருக்கும் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் 

வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான, உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கே பாராளுமன்றத்தில் வாக்களிக்குமாறு கேட்கிறோம்.  வடக்கு கிழக்கு மக்கள் தங்களுக்கு வழங்கியிருக்கும் மக்கள் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு அறைகூவல் விடுக்கிறோம் என்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் புரட்சியால் இலங்கையில் ஏற்படுத்தப்;பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் மற்றும் வடக்கு கிழக்கு சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற தலைப்பிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் கவனத்திற்குமாக  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள், ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் (ஜன அரகலய) மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில், நாம் பெருமிதமடைகிறோம். தமிழின அழிப்புக்கும், போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிடச் செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம்.
ஏதிர்வரும் நாட்கள் இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் எதிர்கால அரசியல் மற்றும் உரிமைகள் சார்ந்து தீர்மானகரமான முடிவுகளை எட்டும் நாட்களாகும். இந்நிலையில், தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் இலங்கை மக்களினதும் குறிப்பாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து காத்திரமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் மக்களான நாங்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பேரினவாதத்தினால் அரசியல் ரீதியான அடக்குமுறைக்கும்  வன்முறைகளுக்கும் தொடர்ந்தும் உள்ளாகி வருகிறோம். போர் முடிவுற்று பதின்மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்கள் சாhந்து எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை. 2015இல் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க – சிறிசேன “நல்லாட்சி” அரசாங்கமும் “நிலைமாறு கால நீதி” எனும் பெயரில் சர்வதேசத்தை நம்பச்செய்யும் வகையில் அர்த்தமற்ற திட்டங்களை முன்வைத்தது.
இன்றுவரையில்,
– வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் மக்கள் காணிகளும் பொதுக்காணிகளும் இராணுவத்தின் வசம் உள்ளன. மக்களின் வளங்களை கட்டுக்படுத்துவதோடு சுரண்டிவருகிறது.
– இராணுவம் சிவில் நிர்வாகத்தில் தலையீடுசெய்வதோடு சிவில் நிர்வாக அதிகாரிகளையும் கட்டுப்படுத்துகிறது. வடக்கு கிழக்கில் நிழல் இராணுவ ஆட்சி காணப்படுகிறது
– மக்கள் மீதான அச்சுறுத்தல்கள், வன்முறைகள், கண்காணிப்புகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன
– பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம் மறுக்கபட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் ஏதேச்சையான கைதுகள் நடைபெறுகின்றன. அதனால் நாம் தொடர்ந்தும் அச்ச வாழ்வே வாழ நேர்ந்துள்ளது.
அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு இனமாக வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களான நாம் வாழ்ந்து வருகின்றோம்.
அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டமானது வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரப்பரவாலாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. எனினும், இலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் அனைத்துமே அதிகாரத்துக்கு வரும் வரையில் வாக்குறுதிகளை வழங்கின. ஆட்சிக்கு வந்தபின்னர், அதிகாரப்பரவலாக்கத்தை புறந்தள்ளியதோடு மட்டும்லாது, சிறுபான்மை அரசியல் உரிமைகள் பற்றி கதைப்பதை “பயங்கரவாதமாக” சித்தரித்து சிங்கள மக்களை சிறுபான்மைக்கு எதிராக தூண்டிவிட்டே வந்தன.
நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டுவரும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில், ஒரே நிலைப்பாட்டில் செயற்பட வேண்டிய தருணமிது.
அவ்வகையில், வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கு கௌரவமான, உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கே பாராளுமன்றத்தில் வாக்களிக்குமாறு கேட்கிறோம்.
வடக்கு கிழக்கு மக்கள் தங்களுக்கு வழங்கியிருக்கும் மக்கள் ஆணைக்கு விசுவாசமாக செயற்படுமாறு அறைகூவல் விடுக்கிறோம்.
Posted in Uncategorized

இலங்கை மீது ஐநா விசேட அவதானம்!

இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுடன் தாம் ஒன்றிணைந்து இருப்பதாகவும் அரசாங்கத்தின் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து வன்முறைச் சம்பவங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கண்டனம் வௌியிட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அமைதியைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகலை அறிவிப்பதில் தாமதம்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் எங்கே போவதற்காக மாலைதீவு சென்றாரோ அங்கே சென்ற பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பப்படும் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என சபாநாயகர் அலுவலகம் இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது.

”ரணில் பதவியில் இருந்து விலக வேண்டும்”: மைத்திரி கோரிக்கை!

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்​டை தொடர்ந்து அராஜகம் செய்யாமல் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.