நம்பிக்கையில்லா பிரேரணை – ஆதரிக்கலாமா? Elanadu Editorial

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி
மீதான நம்பிக்கையில்லா பிரேரனையொன்றை கொண்டுவருவதற்கான

முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஆதரிக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து
கட்சிகள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க
வேண்டுமென்று கோரியிருக்கின்றன. இது தொடர்பில் அவர்கள் ஒரு அறிக்
கையை வெளியிட்டிருக்கின்றனர். வழமைபோல் தமிழரசுக் கட்சி வெளியில்
நிற்கின்றது.

சஜித் பிரேமதாஸவினால் முன்னெடுக்கப்படும் நம்பிக்கையில்லா
பிரேரணை முயற்சி வெற்றியளிக்குமா என்பதில் கேள்விகள் உண்டு.

ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ளவர்கள் அனைவரும்
இதற்கு ஆதரவளிப்பார்களா- என்பது கேள்விக்குறியாகும். ஏனெனில்
அவர்களில் அநேகர், பஸில் ராஜபக்ஷவுடன் முரண்பாடுள்ளவர்களேயன்றி,
மொட்டு தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் அவர்களுக்குள் பெரிய சிக்கல்கள் இல்லை. அதேவேளை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான
அணியுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புக்கள்
இருந்தால் மட்டும்தான், அவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள்.

இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க
லாம்? ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியே,
மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 69
லட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் கோட்டபாயவுக்கு வாக்களித்திருந்
தனர். ஆனால் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் அவரை பெருவாரியாக
நிராகரித்திருந்தனர்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், தன்னையொரு
சிங்கள பௌத்த தலைவராகவே காட்சிப்படுத்தியிருந்தார். அனுராதபுரத்தில்,
தனது பதவிப் பிரமாணத்தை செய்ததன் மூலம், தனது வழி சிங்களபௌத்தம் என்பதை மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பிரகடனப்படுத்திருந்தார்.

இந்த நிலையில், அவரைப் பதவி விலகுமாறு கூறும் கோரிக்கையை தமிழ்த் தேசியத் தரப்புக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறும் சஜித் தரப்பு, இதுவரையில்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை தொடர்பில் எவ்விதமான நிலைப்
பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஆகக் குறைந்தது கோட்டபாய ராஜ
பக்ஷவின், தமிழர் பிரச்னை தொடர்பான நிலைப்பாட்டை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக்கூட, சஜித் பிரேமதாஸ தெளிவுபடுத்தவில்லை.
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே அவரது செயற்பாடுகள்
அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் சஜித் பிரேமதாஸவின் நம்பிக்
கையில்லா பிரேரணையை ஆதரிப்பது தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு
முறை தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்தித்து செயற்படவேண்டும்.

ஜனநாயக்ததை உறுதிப்படுத்துதல் என்னும் ஒற்றைச் சொல்லை வைத்துக்
கொண்டு, விடயங்களை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. 2015 ஆட்சி
மாற்றமும் அப்படியானதொரு கணிப்பின் அடிப்படையில்தான் தமிழர்களால்
ஆதரிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? ரணில்-மைத்திரி
ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த
முடிந்ததா?

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மிகவும் கவனமான அணுகு
முறை அவசியம். ஒருவேளை, கூட்டமைப்பின் ஆதரவுடன், பிரேமதாஸ
வின், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையுமானால் – அதன்
பின்னர் கோட்டபாய ராஜபக்ஷவுடன் எந்தவொரு விடயம் தொடர்பிலும்
கூட்டமைப்பினரால் பேச முடியாமல் போகும். ரணில்-மைத்திரி முரண்
பாட்டின்போது, கூட்டமைப்பு ரணில் சார்பில் செயற்பட்டது. முக்கியமாக
சம்பந்தனும் சுமந்திரனும், அப்போதும் ஜனநாயகக் கதைகளையே கூறியிருந்தனர்.

இறுதியில் மைத்திரியின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட
கூட்டமைப்பால், அதன் பின்னர் அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தை
களையும் முன்னெடுக்க முடியவில்லை. இந்த அனுபவங்களிலிருந்துதான்
கூட்டமைப்பு அதன் முடிவுகளை பரிசீலிக்கவேண்டும். ஆதரிப்பது அல்லது
எதிர்ப்பது என்பதல்ல இங்கு விடயம். ஆனால், ஒரு முடிவால் வரப்போகும்
சாதக பாதங்கள் என்ன என்பதை கருத்தில் கொள்வதே முக்கியமானது.
ஓவ்வொரு முடிவும் இறுதியில் தமிழர்களுக்கு என்ன நன்மையை கொண்டு
வருமென்பதுதான் முக்கியமானது.

Posted in Uncategorized

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியது அரசாங்கம்

வௌிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டியை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கலந்துரையாடல் மூலம் கடன் மறுசீரமைப்பிற்கு செல்லவுள்ளதாகவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கூறினார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மத்திய வங்கி புதிய ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், கடனை மீள செலுத்துவதை விட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார்.

எரிபொருள், எரிவாயு, மருந்துப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஏற்றுமதி வருமானத்தை வர்த்தக வங்கிகளினூடாக இலங்கை மத்திய வங்கிக்கு கட்டாயமாக மாற்றுவதை 50 வீதத்திலிருந்து 25 வீதமாக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மீதமுள்ள 25 வீத வௌிநாட்டு கையிருப்பு, அத்தியாவசிய இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ தளங்களினூடாக இலங்கைக்கு பணத்தை அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கடனை மீள செலுத்துவதற்காக அநாவசியமாக பணம் செலவிடப்பட மாட்டாது எனவும், நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபயவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் – 11 கட்சிகள் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளன 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தை இன்று (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.

Posted in Uncategorized

பௌத்த தேசம்; கொழும்பில் பிக்குகள் களமிறக்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த ஆர்ப்பட்ட குழு ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைத் துணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வண.வட்டினாபஹ சோமானந்த தேரரிடம் இந்த நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று தீவிரவாத இனவாதிகள் குழுவுடன் இணைந்து மக்கள் போராட்ட பூமியை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Update: A pro-government protest march was held at Viharamahadevi Park. pic.twitter.com/3zcFQcDF6s

— DailyMirror (@Dailymirror_SL) April 12, 2022

‘சிங்கள பௌத்த ஆணைக்கு கை வைக்கும் பொய்யான போராட்டங்களுக்கு ஏமாறாதீர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் காலிமுகத்திடல் பகுதியில் பல உளவாளிகள் இறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவாக இலட்சக்கணக்கான மக்கள் தற்போது போராட்டக்களத்தில் திரண்டு வருகின்றனர்.

அரசாங்கம் எவ்வளவு ஆத்திரமூட்டல் செய்தாலும், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் போர்க்களத்தில் உள்ள அமைப்பாளர்கள், வலியுறுத்துகின்றனர்.

அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க போவதாக கூறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையிலான இந்த சதி குறித்து ஏற்கனவே இலங்கை தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு மோதல் வலயத்தில் உள்ள இளம் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது இறுதி முயற்சி – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சியே நேற்றைய பிரதமரின் உரை. உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள். இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு நேற்று பிரதமர் ஆற்றிய உரை தொடர்பாக என் மனதுக்குள் உடன் எழுந்த எண்ணங்களை என் தமிழ்த் தேசிய உணர்வுகளுடன் பகிர்கிறேன்.

அரசுத் தலைமை, அரசாங்கத் தலைமை மக்கள் முன் இன்னொரு தடவை உரையாற்ற முடியாத நிலையில் அரசாங்கப் பதவியணியில் தன் தம்பியைக் காப்பாற்ற பிரதமர் உரையாற்றியுள்ளார்.

இரண்டரை வருடங்களாக அரசுத் தலைவர், அரசாங்கத் தலைவர் எனும் வகையில் மேதகு அவர்கள் உரையாற்றுவார். இடையிடையே, பிரதமர் தன் தம்பிக்கு முட்டுக்கொடுப்பார்.
பேசும் போதெல்லாம் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சிறகடித்துப் பறக்கும். அவர்கள் உடல் மொழிகளோ வித்தியாசமாக இருக்கும்.

நேற்றைய பிரதமர் உரையில், சிங்களமும் இல்லை. பௌத்தமும் இல்லை. அவர்களது வழமையான கம்பீர உடல் மொழியும் இல்லை. வார்த்தைகளில் கூட சுரத்து இல்லை. இன்னமும் கூட தமிழ் மக்கள் தம் உரிமைகளுக்காக போராடிய 70 வருட வரலாறுகள் தம்மை தக்க வைக்கத் தேவைப்படுகிறது.

யுத்தம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. யுத்தத்தின் காரணங்கள் மாறிமாறி வந்த அரசாங்கங்களால் உணரப்படவில்லை. ராஜபக்ச குடும்பம் ஒட்டு மொத்த நாட்டின் சீரழிவுக்குக் காரணம் என்று நாம் கூறவில்லை. உங்கள் அரசின் 11 பங்காளிக் கட்சிகளே கூறுகின்றன. மொட்டுக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறுகின்றனர். அமைச்சர்கள் பலர் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் நீங்கள் இன்னமும் புலியை ஒழித்த பூனையைப் புடுங்கிய சிங்கங்கள் நாம் என்று புலம்புகிறீர்கள்.

மக்கள் எரிபொருளுக்கு கியூவில் நிற்கிறோம். எரிவாயுவுக்கு கியூவில் நிற்கிறோம். அத்தியாவசியப்  பொருளுக்காக அலைகிறோம். உரமின்றி வாடுகிறோம். உயிர்வாழ வழியின்றி இருக்கிறோம் என்று நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறோம். அதை உணர்கிறோம். அது உண்மை என்கிறோம். என்று கூறும் நீங்கள். உங்கள் அரச பதவிகளைத் துறவுங்கள். நீங்கள் அடித்த கமிசன்களை நாட்டின் திறைசேரிக்குத் தாருங்கள் என்பதனை  மட்டும் ஏற்க ஏன் தயங்குகிறீர்கள்.

உலகத்தில் எந்த ஒரு அரசுத் தலைவரும் உங்களைப் போல் புகழப்பட்டவர்களுமில்லை. உங்களைப் போல் இகழப்பட்டவருமில்லை. பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையால் வெற்றிக்களிப்பில் மமதை கொண்ட நீங்கள், அதே பேரும்பான்மை மக்களின் பெரும்பான்மையினரால் இன்று இகழப்படுகிறீர்கள். இத்தனைக்கும் எம் தமிழ் இளைஞர்கள் இன்னும் ஓரமிருந்து ஓரக்கணாணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரச ஊழியர்கள், நாளாந்த கூலித் தொழிலாளர்கள் வடக்கிலிரந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை யாவரும் உங்களுக்கு எதிராக கோசமிடுகிறார்கள். அதுவும் பெருமைமிகு உங்கள் குடும்பப் பெயரை சந்திக்கு இழுக்க வைக்க இன்னமும் விரும்புகிறார்கள்.

உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள்  நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள்.

இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம். நேற்றைய உங்கள் உரை என் மனதில் தந்த உணர்வு இதுவே. அது தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சி. என்பதுவே!

Posted in Uncategorized

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும்!

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையை பொறுத்தமட்டில் நாங்கள் தனியாக முடிவு எடுப்பதை காட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு முடிவு எடுத்தால் தான் அது பலமாக இருக்கும் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக முடிவு எடுக்கும்போது அது பலமாக இருக்கும். எந்தவிதமான பிரேரணை கொண்டு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் நாங்கள் தனியாக தீர்மானிக்க முடியும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை மக்களை மிகப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி பாதித்திருக்கின்றது. ஆகவே, பொருளாதார பின்னடைவு நிச்சயமாக நீண்ட காலமாக இருந்து வந்த ஒன்று. இந்த நாட்டிலே யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்ட பெருந்தொகையான பணங்கள் அதற்காக பட்ட கடன்கள் அதனால் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சேர்த்தே பொருளாதார பின்னடைவுக்கு ஆரம்பிக்க காரணமாக உள்ளது.

போராட்டத்துக்கு ஜனாதிபதி சரியான பதில் ஒன்றை வழங்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று கூறியே மக்கள் போராடுகிறார்கள். அதனை ஜனாதிபதி செய்ய மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, இணுவில் பகுதியில் இடம்பெற்ற புளொட் மத்திய குழுக் கூட்டத்தில் அண்மையில் உயிரிழந்த கட்சியின் பொதுச் செயலாளருமான அமரர் சு. சதானந்தம் அவர்களின் வெற்றிடத்திற்கு தற்காலிகமாக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

மத்திய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சிவநேசன் உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

நிபந்தனையின்றி ஆதரவளித்தால் வீதிகளில் இறங்குவோம் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழ் தேசிய பிரதான மூன்று அணிகள் நம்பிக்கையில்லாப் பிரேரனை ஆட்சிமுறையை ஒழிப்பது சம்பந்தமாக கூட்ட அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் கொண்டு வந்து என்ன செய்யப் போகின்றோம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

எதுவும் மாறப்போவதில்லை. வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். சாதாரண பெரும்பான்மை மூலம் மாகாண சபை சட்டத்தின்படி அருகருகே இருக்கக்கூடிய இரண்டு மாகாணங்கள் இணைக்கப்பட முடியும் என்று கூறப்படுகின்றது.

பாராளுமன்றில் சாதாரண பெரும்பான்மை மூலம் கூட இதனை நிறைவேற்ற முடியும். இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் எந்தவித பொருளாதாரத்திற்கும் தீர்வும் கிடையாது.

அத்துடன் நிரந்தர சமாதானமும் நல்லிணக்கமோ கிடையாது என்பதை தெட்டத் தெளிவாக உணர வேண்டும். ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி அதன் பின்னர் நீ யாரோ நான் யாரோ என்ற நிலை தான்.

நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம் என்றார்.

அரசாங்கத்தை எதிர்க்கின்ற கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முக்கிய சந்திப்பு

அரசாங்கத்தை எதிர்க்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமாரவெல்கம சம்பிக்க ரணவக்க , அனுரபிரியதர்சன யாப்பா எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள மத்தியில் ; முன்னோக்கி நகர்வது குறித்து மாற்றுக்கருத்துக்கள் உள்ளதால் முன்னுரிமையளி;க்கவேண்டிய விடயங்களை அடையாளம் காண்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள கட்சிகள் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு விரும்பவில்லை,ஜனாதிபதி பதவி விலகினால் அமைச்சரவை கலைக்கப்பட்டால் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் அவர்கள் மத்தியில் கருத்துடன்பாடு இல்லை.

இதன்காரணமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை அமைப்பது என தீhமானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 வது நாளாகவும் தொடரும் போராட்டம்

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு (11) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக தெரியவருகிறது தெரியவருகிறது.

காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் – காணொளி உரையின் 15 முக்கிய தகவல்கள்

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் ஆளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சவையில் இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை தமது ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கம் வாயிலாகவும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்

1. யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் மறந்த கதை தற்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில் மின்சாரம் தடைபடாத நாடொன்றை நான் உருவாக்குவேன் என அன்று நான் கூறினேன். அதற்கான மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் திட்டங்களை ஆரம்பித்திருந்தாலும், முந்தைய அரசாங்கம் எமது திட்டத்தை உரிய வகையில் முன்னோக்கி கொண்டு செல்லாததால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனது.

2. எரிபொருள் வாங்க மக்கள் நாட்கணக்கில் கஷ்டப்பட்ட துன்பத்தை எம்மால் உணர முடிகிறது. எரிவாயுவை வாங்க நின்ற பெண்களின் சிரமத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். எனினும், அவர்கள் வரவில்லை.

3. தற்போது கட்சி தொடர்பில் சிந்திப்பதை விடவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதே எம் அனைவரது பொறுப்பாகும். யார் பொறுப்பேற்கா விட்டாலும், அதிகாரத்திலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பிரச்னைகளுக்கு நாம் தீர்வை பெறுவோம்.

4. 30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம். இந்த நேரத்தில் மக்கள் கஷ்டப்பட நாம் வசதிகளை உருவாக்கவில்லை. அதிவேக வீதிகள், நவீன வீதிகள் நிர்மாணிக்கப்பட்டது, உங்களை அந்த வீதிகளில் வரிசைகளில் நிற்க வைப்பதற்காக அல்ல. நாம் துறைமுகங்களை நிர்மாணித்தது, எரிபொருள் கப்பல்களை பணம் செலுத்தி அதில் உள்ள பொருட்களை வாங்க முடியாமல் நிறுத்தி வைப்பதற்காக அல்ல.

5. மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்துவதற்காகவும், துப்பாக்கி சூடுகளை நடத்துவதற்காகவும் நாம் ஆட்சி நடத்தவில்லை. இந்த நாட்டின் அனைத்து பிரச்னைகளின் போதும், மக்களை பாதுகாத்துக்கொள்ள முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வரலாறு எமக்கு உள்ளது. மக்களுடன் தைரியமாக வேலை செய்து, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே நாம் பாடுபடுகிறோம். மிகவும் சிரமமான காலத்தில் கூட வெளிநாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சித்தது.

6. இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்காத விதத்திலான தீர்மானமொன்றை எடுப்பது எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காக மாத்திரமே வேலை செய்தோம். ‘நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் வேண்டாம்’ என்ற போராட்டம் தற்போது எமக்கு கேட்கிறது. அதனூடாக இந்த ஜனநாயக முறைமையை நிராகரிப்பது என்றால், அந்த ஆபத்தின் எதிர்காலத்தை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

7. நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசி, முழு நாடாளுமன்றத்தையும் இல்லாது செய்வதன் ஊடாக ஏற்படும் அனர்த்தத்தை நாம் கண்டுள்ளோம். அன்று நாடாளுமன்ற ஜனநாயகம் நிராகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் ரத்தம் வீதிகளில் வழிந்தோடியதை கண்டோம். இந்த ஜனநாயகத்தை நிராகரிக்க வேண்டும் என்றால், அந்த அபாயத்தை கடந்த காலங்களை நினைத்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்,

8. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உயிரோடு எரித்தார்கள். 88, 89 ஆகிய இருள்ட யுகத்தில் 60 ஆயிரம் வரையான இளையோரின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். அன்று இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாம் எடுத்த முயற்சி, முதியோரின் நினைவில் இருப்பதை நாம் நன்கறிவோம். தெற்கிலுள்ளவர்களை போன்று வடக்கில் உள்ளவர்களுக்கும் இதனை நினைவுப்படுத்த வேண்டும்.

9. அந்த இறந்த உறவுகளின் பெற்றோரிடம் கேட்டால், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என கூறியே, மக்கள் பிரதிநிதிகள் வீதிகளில் கொலை செய்யப்பட்டனர். அதனூடாகவே 70களில் வடக்கு இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த அரசியல் செயல்பாடு காரணமாக வடக்கில் மாத்திரமன்றி, தெற்கு மக்களும் துன்பங்களை அனுபவித்தனர்.

10. கண்ணி வெடிகளுக்கு, துப்பாக்கி சூடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பாடசாலை மாணவர்களும் படிப்படியாக போராட்டத்திற்கு அழைத்த செல்லப்பட்டார்கள். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு அழைத்து சென்றனர்.

11. நாடாளுமன்றம் வேண்டாம் என்றே அன்றும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆபாயத்தை நாம் அறிந்தமையினால், உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் பிறந்த இந்த தாய் நாட்டை மீண்டும் அந்த இருள் சூழ்ந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள், ஒவ்வொரு நொடியையும் கடக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடியாது போனாலும், விரைவில் இந்த பிரச்னையைத் தீர்ப்போம்.

12. நீங்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு தருணத்திலும், எமது நாட்டிற்கு டொலர் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர், தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையிலிருந்து மீண்டெழுவது எம் அனைவரது பொறுப்பாகும். அதற்காக சக்தி, தைரியம் உள்ள அனைவரையும் நாம் அழைத்திருக்கிறோம்.

13. உங்களின் பொறுமை இந்த நாட்டிற்கு தற்போது அவசியம். அன்புக்குரிய பிள்ளைகளே, நீங்கள் பிறந்த இந்த பூமியின் மீது அளப்பரிய அன்பை கொண்டுள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று வன்முறைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது, மிதிக்கப்பட்ட மணல் துகில்ககளை விடவும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் கூறியுள்ள நிந்தனைகள் மற்றும் அபகீர்த்திகள் அதிகம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூற வேண்டும்.

14. நாட்டிற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர், போலீஸார் இடையூறு, அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம். இன்று சுதந்திரமாக வீதிகளில் நீங்கள் பயணிக்க, ஆர்ப்பாட்டங்களை நடத்த, ராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து, நாட்டை மீட்டெடுத்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

15. ஆர்ப்பாட்டம் நடத்தும் உங்களின் கைகளில் தேசிய கொடி இருக்கிறது. நாம் பிறந்த இந்த மண்ணில் எந்தவொரு இடத்திலும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான். அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.

பிபிசி தமிழ்