சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி
மீதான நம்பிக்கையில்லா பிரேரனையொன்றை கொண்டுவருவதற்கான
முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஆதரிக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரன்
தெரிவித்திருக்கின்றார். தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து
கட்சிகள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க
வேண்டுமென்று கோரியிருக்கின்றன. இது தொடர்பில் அவர்கள் ஒரு அறிக்
கையை வெளியிட்டிருக்கின்றனர். வழமைபோல் தமிழரசுக் கட்சி வெளியில்
நிற்கின்றது.
சஜித் பிரேமதாஸவினால் முன்னெடுக்கப்படும் நம்பிக்கையில்லா
பிரேரணை முயற்சி வெற்றியளிக்குமா என்பதில் கேள்விகள் உண்டு.
ஏனெனில் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ளவர்கள் அனைவரும்
இதற்கு ஆதரவளிப்பார்களா- என்பது கேள்விக்குறியாகும். ஏனெனில்
அவர்களில் அநேகர், பஸில் ராஜபக்ஷவுடன் முரண்பாடுள்ளவர்களேயன்றி,
மொட்டு தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் அவர்களுக்குள் பெரிய சிக்கல்கள் இல்லை. அதேவேளை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான
அணியுடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புக்கள்
இருந்தால் மட்டும்தான், அவர்கள் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள்.
இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க
லாம்? ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியே,
மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 69
லட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் கோட்டபாயவுக்கு வாக்களித்திருந்
தனர். ஆனால் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் அவரை பெருவாரியாக
நிராகரித்திருந்தனர்.
அதேவேளை, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், தன்னையொரு
சிங்கள பௌத்த தலைவராகவே காட்சிப்படுத்தியிருந்தார். அனுராதபுரத்தில்,
தனது பதவிப் பிரமாணத்தை செய்ததன் மூலம், தனது வழி சிங்களபௌத்தம் என்பதை மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பிரகடனப்படுத்திருந்தார்.
இந்த நிலையில், அவரைப் பதவி விலகுமாறு கூறும் கோரிக்கையை தமிழ்த் தேசியத் தரப்புக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறும் சஜித் தரப்பு, இதுவரையில்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்னை தொடர்பில் எவ்விதமான நிலைப்
பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஆகக் குறைந்தது கோட்டபாய ராஜ
பக்ஷவின், தமிழர் பிரச்னை தொடர்பான நிலைப்பாட்டை தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக்கூட, சஜித் பிரேமதாஸ தெளிவுபடுத்தவில்லை.
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே அவரது செயற்பாடுகள்
அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் சஜித் பிரேமதாஸவின் நம்பிக்
கையில்லா பிரேரணையை ஆதரிப்பது தொடர்பில் ஒன்றுக்கு இரண்டு
முறை தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்தித்து செயற்படவேண்டும்.
ஜனநாயக்ததை உறுதிப்படுத்துதல் என்னும் ஒற்றைச் சொல்லை வைத்துக்
கொண்டு, விடயங்களை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. 2015 ஆட்சி
மாற்றமும் அப்படியானதொரு கணிப்பின் அடிப்படையில்தான் தமிழர்களால்
ஆதரிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது? ரணில்-மைத்திரி
ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த
முடிந்ததா?
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் மிகவும் கவனமான அணுகு
முறை அவசியம். ஒருவேளை, கூட்டமைப்பின் ஆதரவுடன், பிரேமதாஸ
வின், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையுமானால் – அதன்
பின்னர் கோட்டபாய ராஜபக்ஷவுடன் எந்தவொரு விடயம் தொடர்பிலும்
கூட்டமைப்பினரால் பேச முடியாமல் போகும். ரணில்-மைத்திரி முரண்
பாட்டின்போது, கூட்டமைப்பு ரணில் சார்பில் செயற்பட்டது. முக்கியமாக
சம்பந்தனும் சுமந்திரனும், அப்போதும் ஜனநாயகக் கதைகளையே கூறியிருந்தனர்.
இறுதியில் மைத்திரியின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட
கூட்டமைப்பால், அதன் பின்னர் அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தை
களையும் முன்னெடுக்க முடியவில்லை. இந்த அனுபவங்களிலிருந்துதான்
கூட்டமைப்பு அதன் முடிவுகளை பரிசீலிக்கவேண்டும். ஆதரிப்பது அல்லது
எதிர்ப்பது என்பதல்ல இங்கு விடயம். ஆனால், ஒரு முடிவால் வரப்போகும்
சாதக பாதங்கள் என்ன என்பதை கருத்தில் கொள்வதே முக்கியமானது.
ஓவ்வொரு முடிவும் இறுதியில் தமிழர்களுக்கு என்ன நன்மையை கொண்டு
வருமென்பதுதான் முக்கியமானது.