தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம் – பா.உ. இராகிருஷ்ணன்

மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்படும் என பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் என்பது ஜனநாயக அம்சம். எனவே, தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம். ஆதரவையும் வழங்குவோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராகிருஷ்ணன்கூறினார்.

நுவரெலியா, தலவாக்கலையில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்தியாவின் அழுத்தத்தாலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஆனாலும் அவ்வாறு இல்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். எம்மை பொறுத்தமட்டில் சர்வதேச அழுத்தத்தாலேயே தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.

இந்த அரசாங்கம் பல கபளிகரமான விடயங்களை செய்துவருகிறது முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது உதாரனமாக எரிவாயு, பால்மா, கோதுமை மா போன்ற பொருட்களுக்கு தட்டுபாட்டை ஏற்படுத்தி சந்தையில் அதனை இல்லாது போல் செய்து அந்த நிருவனங்களின் ஊடாக குறித்த பொருட்களை அதிக விலைக்கு விற்ககூடிய சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது.

மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர விலையஅதிகரிப்பை பற்றி சிந்திப்பதில்லை சில பொருட்களுக்கு கட்டுபாட்டு விலை இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது

இன்று அரிசிக்கு கட்பாட்டு விலை கிடையாது, எரிவாயிக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது. பால்மாவுக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது, அரசாங்கம் அவர்களுக்கு கீழ் செயற்படுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் இன்று அனைத்து பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அனைத்து பொருட்களையும் இந்த அரசாங்கம் கொண்டுவர நினைத்தாலும் அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லை டொலர் இல்லாவிட்டால் மீண்டும் பால்மா, கேஸ், சீமெந்து ஆகிய விலைகள் அதிகரிக்கும், வாழ்க்கை செலவு இனி குறையாது இதற்கு கடவுளை நம்பவும் முடியாது அன்று ஐந்து ரூபாவுக்கு ஒரு ராத்தல் பானை கொள்வனவு செய்த காலத்தை மீண்டும் திரும்பி பார்க்க முடியாது.

நாட்டில் உரத்திற்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தில் தேயிலைக்கு கூட போதுமான உரம் கிடைப்பதில்லை இவ்வாறு சென்றால் தேயிலைதுறையும் விழ்ச்சியடையும் பெருந்தோட்ட நிருவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்காது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் வாசுதேவ நானயகாரவும் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருக்கிறார் அவ்வாறு இறங்கினால் நாங்களும் அவருக்கு நிச்சயமாக ஆதரவினை வழங்குவோம் மாகாணசபை தேர்தல் பலய முறையில் நடாத்தப்பட வேண்டமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை மற்றும் 13வது திருத்தத்தை வழுபடுத்தவும் இந்த மாகாணசபை தேர்தல் முக்கியமானதாகும். இதில் இந்தியாவின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும் என குறிப்பிட்டார்.

அதேவேளை, முன்னரெல்லாம் வரவு – செலவுத் திட்டம்வரும்போதுதான் பொருட்களின் விலை மறுசீரமைக்கப்படும். ஆனால் இன்று நாளாந்தம் அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களுமே விலையை நிர்ணயிக்கின்றனர். அப்படியானால் அரசாங்கம், அமைச்சரவை எதற்கு என்றார்.

சினிமோவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலப்பகுதியில் பாணுக்கு வரிசையில் நின்ற நாட்டுமக்கள் இன்று 40வருட த்திற்கு பிறகு இன்று பால்மாவிற்கும் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் திருகுமார் நடேசன்!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், திருகுமார் நடேசன் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு பிரசன்னமான திருக்குமார் நடேசன், 1:30 வரை வாக்குமூலம் வழங்கியதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தான் சாட்சியமளிப்பதற்கு தயாராகி வராமையினால், ஆவணங்களை கொண்டு வரவில்லை எனவும், ஆவணங்களை கொண்டு வர வேறொரு தினத்தை பெற்றுத்தருமாறும் அவர் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

இதையடுத்து, பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையுடன் தொடர்புடைய ஆவணங்களுடன், எதிர்வரும் 15ஆம் திகதி இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும்- மக்கள் காங்கிரஸ்

பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்து நடத்த வேண்டும் என மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி,  சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட்,  சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு, தேர்தல்கள் சீர்திருத்தம்  தொடர்பாக மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய பிரேரணையை முன்வைத்தனர்.

அதில் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் விடயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியதுடன், விரிவான நீண்ட நேர கருத்தாடல்களையும் மேற்கொண்டனர்.

மேலும், பொதுத்தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் விகிதாசார முறைப்படி தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்த வேண்டும் என்ற வாதங்களும் மக்கள் காங்கிரஸ் கட்சியினரால் அங்கு முன்வைக்கப்பட்டது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் ஆரம்பகாலத்தில் இருந்த விகிதாசார முறைப்படியான தேர்தல் முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும்  இப்பொழுது இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறை நாட்டுக்கு உகந்தது அல்ல என்றும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, விசேடமாக புலம்பெயர்ந்தவர்களினுடைய வாக்குரிமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதில் முக்கியமாக  வடக்கு  மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு, புத்தளம் உள்ளிட்ட இதர மாவட்டங்களிலே வாழ்ந்துவரும், அதாவது இன்னும் தமது சொந்த ஊரிலே குடியேறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும் விஷேட சலுகை அடிப்படையில், அவர்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களிலுள்ள முகாம்களில் இருந்தே, அவர்கள் விரும்பிய தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Posted in Uncategorized

அமெரிக்கா செல்ல அனுமதி!

நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, பயணத்திற்கு 3 நாள்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

நவம்பர் முதல் அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளை ஆரம்பம்?

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாளின் தரத்தை எந்த விதத்திலும் மாற்றி அமைப்பதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு பாடத்தை உள்ளடக்கி பரீட்சைக்கு தயாராவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாடசாலை நாட்காட்டியில் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டில் 65 நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்திலுள்ள மாணவர்களுக்காக 5 நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாகாண மட்டத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

முகாம்களில் இருந்து கனடாவுக்கு தப்பி ஓட்டிய இலங்கை அகதிகள்!

இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.

மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம்.

மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளனா். ஆனால், தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக காவல்துறை சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி இருக்கிறது.

Posted in Uncategorized

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

4 அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

13ஐ முழுமையாக அமுல்படுத்த  மாகாண சபைத் தேர்தலை  நடத்த வேண்டும்  – இரா.துரைரெட்ணம்

சிறுபான்மையினரின் அதிகாரப்பரவலாக்கல், பங்கீடு சம்பந்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசை வலியுறுத்தியதற்கு இந்திய அரசினை வாழ்த்துகின்றோம். அதே நேரத்தில்  13ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடடியாக நடத்த வேண்டும்  என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதற்குப்பிற்பாடு கடந்த ஒரு மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியான இராஜதந்திர அழுத்தத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழுவினுடைய அழுத்தங்கள்,  இலங்கை அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் தொடர்பான செயல்வடிவங்களை முன்நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் வெளிநாடுகள் சம்பந்தமான இராஜதந்திரச் செயற்பாட்டில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  இந்தியா 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்லுள்ளமை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது. புலம்பெயர் சக்திகளுடன் ஜனாதிபதி அவர்கள் பேசப்போவதாகக் கூறியிருக்கிறார்.

இவ்வாறான விடயங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சம்பந்தப்பட்ட விடயத்தில் சில மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசின் இந்த மாற்றங்கள், அவதானிப்புகள் ஊடாக சிறுபான்மைத் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும், சிறுபான்மை மக்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட விடயத்திலும்  ஜனநாயக ரீதியான செயற்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து சிறுபான்மையினரினரை வெல்லவேண்டும்.

கடந்த வாரம் இலங்கைக்கு இந்தியாவின் சிரேஸ்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வருகை தந்து இலங்கை- இந்திய அரசுகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி பல விடயங்கள் குறித்து ஆராய்ந்தாலும், குறிப்பாக சிறுபான்மையினரின் அதிகாரப் பரவலாக்கல், பங்கீடு சம்பந்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டமைக்கு நாங்கள் இந்திய அரசினை வாழ்த்துகின்றோம். பாரட்டுகின்றோம்.

இந்த விடயங்களை உணர்ந்து முழநாட்டுக்கும் நன்மை பயக்கக்கூடிய மூன்று இனத்துக்கும் நன்மை பயக்கக் கூடிய எல்லா மாகாண சபைகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல் படுத்துவதற்கான செயல்வடிவங்களை இலங்கை. அரசாங்கம் முன்கொண்டு செல்ல வேண்டும். அதன் ஒரு கட்டமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தபட வேண்டும்.

அந்தத் தேர்தலை நடத்தி மக்களாட்சி அமுல்படுத்தப்படும் போதுதான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படும். குறிப்பாக வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தச்சட்டம், சுயாட்சி, தமிழீழம் எனப் பல கருத்துக்கள் நம் மத்தியில் முட்டி மோதினாலும், தற்சமயம் 13ஆவது திருத்தச் சட்டத்தையேனும் அமுல்படுத்தினால் சிறுபான்மையினர் நன்மை பெறுவார்கள் என்ற நிலையில். இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத் தை அமுல்படுத்துவதற்கும் வடக்குக் கிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள்  அதன் ஆரம்ப கட்டத்துக்கு செயல் வடிவத்தைக் கொடுப்பதற்கும்; மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும்.

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் தற்சமயம் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற தொனி சமூகத்தின் மத்தியில் வேரூன்றுகின்றது.

அத்தோடு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புகளை நல்கி மாகாண சபையின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு செயல் வடிவம் கொடுக்க கேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

தேர்தல் திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு கூடியது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

புதிய திருத்தத்தின் ஊடாக ஸ்திரமான அரசாங்கமொன்று உருவாக்கப்படுவதும் மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியது.

நாட்டில் உள்ள சகல பூகோள எல்லைகளையும் அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவம் புதிய திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும். விருப்பு வாக்கு முறையின் ஊடாக தமக்குத் தேவையான மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்களால் தெரிவுசெய்ய முடியும். வாக்குச் சீட்டுக்கள் மக்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியது. தேர்தல் முறையின் ஸ்திரத்தன்மை அவசியமானது என்றும், இது வாக்காளர்களின் கோணத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று (07) பரிந்துரைத்தது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக பொது மக்களின் நியாயமான பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும், இந்த முறையின் கீழ் சகல வாக்குகளுக்கும் மதிப்பை வழங்க முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றியமைக்காது அதில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்குப் புதிய திருத்தங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு எனப் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டது.

விசேட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தேர்தல் முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என அக்கட்சி தெரிவித்தது. விகிசாதாரப் பிரதிநிதித்துவ முறை நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது என்றும், இதன் ஊடாக மக்களின் வாக்குரிமை பலப்படுத்தப்படும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்குமான மூன்று தேர்தல்களுக்கும் விகிசாதாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் பரிந்துரைகளை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குறிப்பிடுகையில், விகிசாதாரப் பிரதிநிதித்துவமே நாட்டுக்குப் பொருத்தமானது எனத் தெரிவித்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். தேசியப்பட்டிலியலில் 50சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார்.

தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் சகல சந்தர்ப்பத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் கலாசாரத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அரசியலில் பெண்களின் பங்களிப்புக் குறைவடைந்துள்ளது என்றும் அவர் குழுவில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, எம்.யு.எம்.அலி சப்ரி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் இன்று (08) பிற்பகல் இடம்பெறுவதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

Posted in Uncategorized

நவம்பரில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பையும் வாக்கெடுப்பையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.