நினைவேந்தல் நிகழ்வுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- மாவீரர்களின் பெற்றோர் கோரிக்கை!

நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிழியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் அறிக்கை ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமான வேளை அங்கு வந்திருந்த அரசியல் கட்சி ஒன்றினை சார்ந்தவர்கள் பிற கட்சியினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முகமாக செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கிருத்தவர்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

அந்நிலையில் அது தொடர்பாக அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தியாக திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்.

இந்த ஆண்டின் திலீபன் நினைவு ஆரம்ப நிகழ்வு தொடங்கும் முன்னர் பிறிதொரு அணியினரை சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது.

நேற்று இவர் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டாளரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் இந்நிகழ்வை பொது நிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்னவென்று கேட்டேன். எதுவும் இல்லை என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது.

அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்று நடந்து கொண்டார்.
ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளை தாக்கும் களமாக பயன்படுத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை கடைபிடிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார்.

எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியமை பற்றி செய்தி பத்திரிகையில் வெளியான போது மிகவும் வேதனைப்பட்டேன்.

அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன்.

எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும். அதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான் பதவியேற்றபோது தாங்கள் அங்கு இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய அபிவிருத்தி அமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்கின்ற சூழலிலே நானும் அங்கு சென்றிருந்தேன். பொருளாதார அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு அதில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே பதவி ஏற்றிருக்கின்றார். இதிலே குறிப்பாக கூற வேண்டிய விடயம் என்னவெனில் எங்களுடைய கிராம புறங்கள் இதனூடாக வலுப்பெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது.நிச்சயமாக தட்டி கேட்போம். வன்னி பிரதேசத்தில் ஒரு அமைச்சு பதவி கிடைத்திருக்கின்றது என்ற காரணத்திற்காக நாங்கள் சென்றிருக்கின்றோம்.

ஜனாதிபதியை நாங்கள் சந்தித்த போதும் இவ்வாறு விமர்சனங்கள் வந்தது. மக்களுடைய நலன் கருதி அபிவிருத்தி சம்பந்தமாக இருக்கின்ற விடயங்களிலே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களுடைய மக்களும் பட்டினியை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான விடயங்களை பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் வன்னி பிரதேச பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு பதவி கிடைத்த காரணத்தினால் வாழ்த்த சென்றிருந்தேன் அவ்வளவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள அமெரிக்க செனட்டர்கள்

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் முன்வைத்துள்ளனர்.

ராஜபக்ஸவின் ஆட்சி மிகவும் ஊழலான குடும்ப ஆட்சி என்பதுடன், வெளிப்படைத்தன்மையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த ஆட்சியில், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் தமது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் விவசாயம் தொடர்பான தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமை, நீடித்து நிலைக்க முடியாத மாபெரும் திட்டங்களுக்காக சீனாவிடம் பில்லியன் கணக்கான டொலர்களை கடனாகப் பெற்றமை, பொது வளங்களை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மோசடி மற்றும் ஊழல் தொடர்பான வெளிப்படையான, பொறுப்பான விசாரணைகளை நடத்துவது உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் பரிசீலிக்கத் தவறிவிட்டதாக நான்கு அமெரிக்க செனட்டர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அமைதியான அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க செனட் சபையிடம் செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

கசூரினா கடற்படை முகாமை அகற்ற பணம் கோரியுள்ள கடற்படை

கசூ­ரினா கடற்­க­ரை­யின் சுற்­றுலா மையத்­தில் 4 பரப்பு விஸ்­தீ­ர­ணத்­தில் உள்ள கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்குக் கடற்­ப­டை­யி­னர் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர். அதற்­காக கடற்­ப­டை­யி­னர் கோரிய பணம் இன்று பிர­தேச சபை­யால் காசோலை மூலம் வழங்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையத்­தில் கடற்­படை முகாம் அமைக்­கப்­பட்­டி­ருந்­த­தால், அந்­தப் பகு­தியை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. அத்து­டன் சுற்­று­லா­வி­க­ளும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. அத­னால் அங்­கி­ருந்து கடற்­படை முகாமை அகற்ற வேண்­டும் என்று பிர­தேச சபை கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

நேற்று பிர­தேச சபை மாதாந்த அமர்வு கசூ­ரினா பொது­நோக்கு மண்­ட­பத்­தில் நடைபெற்ற நிலை­யில், காரை­ந­கர் கடற்­க­ரைப் பொறுப்­ப­தி­கா­ரி­கள் இரு­வர் கலந்து கொண்­ட­னர்.

கடற்­ப­டை­யி­ன­ரால் அமைக்­கப்­பட்­டுள்ள நிரந்­தக் கட்­ட­டத்­துக்­கான பெறு­ம­தி­யைச் செலுத்­து­வ­து­டன், பிறி­தொரு காணி­யை­யும் வழங்­கி­னால் அந்­தப் பகு­தி­யில் இருந்து உட­ன­டி­யாக வில­கிக் கொள்­ள­வோம் என்று கடற்­படை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கடற்­ப­டை­யி­னர் அமைத்­துள்ள நிரந்­த­ரக் கட்­ட­டத்­தின் பெறு­மதி 13 லட்­சத்து 20 ஆயிரம் ரூபா என்று விலை மதிப்­பீட்­டுத் திணைக்­க­ளம் மதிப்­பிட்­டி­ருந்­தது.

பணத்­தை­யும், சுற்­றுலா மையத்­துக்கு வெளியே காணி­யொன்றை வழங்­க­வும் பிர­தேச சபைக் கூட்­டத்­தில் நேற்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து நேற்று முதல் அந்த இடத்­தில் இருந்து கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் ஆரம்பிக்கப்­ப­டும் என்று கடற்­ப­டைப் பொறுப்­ப­தி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கடற்­ப­டைக்கு வழங்­கும் பணத்தை ஏற்­க­னவே ஒதுக்­கப்­பட்ட நிதி­யொ­துக்­கத்­தில் மீதமாக உள்ள தொகை­யில் இருந்து பயன்­ப­டுத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்டு, இன்று அதற்­கான காசோலை கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­டும் என்று தெரிவிக்கப்பட்­டது.

Posted in Uncategorized

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபி வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முதல் தேசிய எழுச்சிக்கொடி கட்டப்பட்டு பிரதான தூபியில் மாணவர்களால் அமைக்கப்பெற்ற நினைவாலயத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவனால் பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகை சுடரும் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் பொழுது யாழ் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களுடன் இஸ்லாமிய சிங்கள மாணவர்களும் இம்முறை உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்ததோடு மேலும் யாழ் பல்கலை கல்விசாரா ஊழியர்கள்,யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ச்சியாக எதிர்வரும் 26ம் திகதி வரை மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Posted in Uncategorized

வடமாகாண முஸ்லீம் மக்களின் பிரச்சினை: ஐக்கியநாடுகள் சபையின் செயலாளருக்கு மகஜர்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஜக்கியநாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லீம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வடமாகாண முஸ்லீம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(13.9.2022) மாலை-4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகத்தில் வைத்து
மக்கள் பணிமனைத் தவிசாளரும், வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான சுபியான் மெளலவி மற்றும் அமைப்பாளர் ஏ.சி.எம்.கலீல் ஆகியோர் இணைந்து மகஜரினை ஐக்கியநாடுகள் சபையின் யாழ்ப்பாணப் பிரதிநிதி திருமதி.காயத்திரி குமரனிடம் நேரடியாகக் கையளித்தனர்.

இதேவேளை, மகஜரினைப் பெற்றுக் கொண்ட ஐக்கியநாடுகள் சபையின் யாழ்ப்பாணப் பிரதிநிதி ஐக்கியநாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் மூலம் குறித்த மகஜரினை உடனடியாக ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Posted in Uncategorized

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக விகாரை கட்டுமானப் பணி – தமிழ் தரப்புக்கள் விசனம்

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் 19.07.2022 அன்று திருத்தத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய கட்டளைகளை உதாசீனம் செய்து கட்டுமானங்கள் தொடர்ந்து இடம்பெற்று விகாரை கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

19.07.2022 அன்று திருத்தத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய வழங்கிய திருத்திய கட்டளையிலே .தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதிய கட்டளையில் புதியவிகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது.எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும்.எனவும் கட்டளை வழங்கியிருந்தது.

இந்நிலையில் குறித்த கட்டளையை மீறி அங்கு அமைக்கப்பட்ட விகாரை கட்டுமான பணி தொடர்ந்து இடம்பெற்று விகாரை கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது எனவும் பொலிசார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் பொலிசார் உரிய பாதுகாப்பினையும் வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் கடந்த 14.07.2022 அன்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.

குருந்தூர் மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் இவர்கள் சார்பில் சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் மற்றும் சட்டத்தரணி கெங்காதரன் அவர்களும் முன்னிலையாகியதோடு எதிர்தரப்பிலே பொலிசார் மன்றில் முன்னிலையாகினர் இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் வழக்கினுடைய தீர்ப்பை வழங்கினார்.

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறை படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து 19.07.2022 அன்று குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் தெரிவித்துள்ளார்.

கௌரவ முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தொல்லியல் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் இரு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்ட தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் . அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்க்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.

இங்கு நிலைகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் நீதிமன்றிலே வருகை தந்து குறித்த வழக்கிற்கான புதிய திருத்திய கட்டளையை நீதிபதி பிறப்பித்திருந்தார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையிலே. தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதிய கட்டளையில் புதியவிகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது.

எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும்.எனவும் கட்டளை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

இலங்கை தமிழர் பிரச்சினை – இந்தியாவின் மாற்றத்துக்கு காரணம்?

இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐ.நா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என இந்தியா அந்த கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனவும் இந்தியா கூறுகின்றது.

இதன்படி, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்னைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி கரிசனத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடாத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதிநிதி, அதன்மூலம் அனைத்து இலங்கையர்களாலும் சுபிட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும், எனவே இவ்விடயத்தில் இலங்கை உடனடியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் இந்த கரிசனமானது, ஒரு கானல் நீர் கரிசனம் என இலங்கையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஆர். சிவராஜா தெரிவித்தார்.

தமிழர்களுக்கு குறைந்தபட்ச தீர்வு இதுவென இந்தியா கருதிய போதிலும், உண்மையில் தமிழர்களுக்கான தீர்வு இது கிடையாது என அவர் கூறுகின்றார்.

´´வருடா வருடம் இதே விடயத்தையே இந்தியா கூறுகின்றது. தமிழர்களுக்கு குறைந்த பட்ச தீர்வு இதுவென இந்தியா கருதுகின்றது. ஆனால் உண்மையில் அது தீர்வு அல்ல. மாகாண சபை இவ்வளவு காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலே இல்லை. மாகாண சபை இயங்கவில்லை. இப்படியான சூழ்நிலையிலும், தமிழ் மக்கள் முன்னர் போன்றேதான் வாழ்கின்றார்கள். மாகாண சபை ஒத்தி வைத்தமையினால், தமிழர்களுக்கு பாதிப்பு வரவில்லை. அப்படியே மூடி மறைக்கும் வேலையை தான் அரசாங்கம் செய்யும். கோட்டாபய ராஜபக்ஸ இருக்கும் போது, மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை என சொல்லப்பட்டது. அவர் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை தான் ஜெனீவாவில் ரணில் இன்று அறிவித்திருக்கின்றார். அதனால், பெரிய மாற்றங்கள் வராது. ரணில் புதிதாக ஒன்றும் செய்ய மாட்டார். பொருளாதார ஸ்திரதன்மை, அரசியல் ஸ்திரதன்மை இல்லாமல், அவரால் செய்ய முடியாது” என ஆர்.சிவராஜா குறிப்பிடுகின்றார்.

தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயமானது, ஓர் இழுத்தடிப்பு வேலையாகவே காணப்படுகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், இந்தியா தொடர்ந்தும் பாரிய உதவிகளை வழங்கி வருகின்ற இந்த பின்னணியிலேயே, தமிழர் பிரச்னைக்கான தீர்வு குறித்து இந்தியா கரிசனை வெளியிடுகின்றமை, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை கொண்டு வருமா? என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜாவிடம் வினவினோம்.

´´மாற்றத்தை ஏற்படுத்தவே படுத்தாது. தமிழர் பிரச்னை குறித்து இந்தியா பேசுகின்ற போதிலும், இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் அதனூடாக எந்தவித நன்மையும் இல்லை. அதுவொரு நிலைபாடு. வழமை போல் இந்தியாவின் ஓர் அறிவிப்பு. அவ்வளவு தான்” என அவர் கூறுகிறார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், “ராஜதந்திர அழுத்தம் காரணமாகத்தான் இந்திய பிரதிநிதி இவ்வாறு ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் தெரிவித்திருக்க வேண்டும். உண்மையில் இலங்கை தமிழர்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என இந்தியா நினைத்திருந்தால் அதனை எப்போதோ கொண்டு வந்திருக்கலாம். அப்படி பல வாய்ப்புகள் இருந்தும் அதனை இந்தியா செய்யவில்லை.” என்றார்.

“இப்போது இலங்கை தன் கட்டுப்பாட்டை மீறியோ அல்லது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதால் இந்தியா ஒரு அழுத்தத்தை விளைவிக்க இவ்வாறு கூறியிருக்கலாம். இலங்கை மீதான பல குற்றச்சாட்டுகளை கடந்து அந்த நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த இந்தியா, இவ்வாறு கூறுவது மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.”

“2009-ல் இருந்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் இலங்கைக்கு ஆதரவாகத்தான் இந்தியா செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாக நெருக்கடியான நிலையை இந்தியா கொடுக்கக்கூடும் என்பதைவிட, அப்படி நெருக்கடியை கொடுக்கும் நாடு இந்தியா அல்ல. எங்களால் அழுத்தம் தர முடியும் என்று காண்பிக்கக்கூடிய நாடுதான் இந்தியாவே தவிர, உண்மையில் அத்தகைய அழுத்தத்தை இந்தியாவால் ஏற்படுத்த முடியாது. இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாக ஒரு செய்கையை காண்பிக்கிறார்கள், அவ்வளவுதான். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது மற்ற நாடுகளைவிட இந்தியாதான் அதிகமாக உதவி செய்தது. அப்படி இருக்கையில் எப்படி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக செயல்பட முடியும்?” என்றார் ராமு மணிவண்ணன்.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இலங்கையை பொறுத்தவரை இந்தியாவின் ராஜதந்திரம் என்பது ´வட இந்திய´ அரசியல்தான். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்தியா இலங்கைக்கு நட்பு நாடு. ஆனால், தமிழகமோ அல்லது தென்னிந்திய அரசியலில் இருந்து பார்க்கும்போது அது உண்மை கிடையாது. இலங்கை ஏறக்குறைய முழுமையாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு செல்லும்போது இந்தியப் பெருங்கடலில் புவிசார் மாற்றங்கள் நிகழும்போது இந்திய அரசாங்கத்தின் பார்வையில் ஒரு மாற்றத்தை அவதானிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை ஒரு முழுமையான கட்டாயமாக இந்தியா எதிர்பார்க்கவில்லை. ராஜதந்திர அரசியலில் இந்தியாவைவிட பலமடங்கு முன்னோடி நாடாக இலங்கை இருக்கிறது. தேவைப்படும்போது இந்தியாவை புறக்கணிப்பதும் மற்ற தருணங்களில் மிக மிக நெருக்கமாக இருப்பதும் இலங்கைக்கு கடினமான ஒன்று அல்ல” என அவர் தெரிவித்தார்.

(பிபிசி தமிழ்)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை வரைபு சமர்ப்பிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான புதிய பிரேரணை வரைபு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மசிடோனியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உணவு பாதுகாப்பற்ற தன்மை, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு, வீட்டு பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக வறுமையில் வாடும் மக்கள், நாளாந்த சம்பளம் பெறுவோர், சிறு பிள்ளைகள், வயோதிபர்கள் மற்றும் உபாதைக்குள்ளானோர் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் தொடர்பில் புதிய வரைபு பிரேரணையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாத்தில் இருந்து இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அறவழி போராட்டக்கார்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அவர்கள் கைது செய்யப்பட்டமை, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோர் தொடர்பில் ஏற்பட்ட வன்முறைகள், கொலை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல், நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக செயற்படுகின்ற அமைப்புகளின் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றமை, மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாமை, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு செவிசாய்க்காமை, ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை, பின்தொடரப்படுகின்றமை, துன்புறுத்தப்படுகின்றமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பிலான விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர வீடுகள்; தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர வீடுகளைக் கொண்ட மறுவாழ்வு முகாம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிரந்தர வீடுகள் திண்டுக்கல்லில் இலங்கை அகதிகள் குடியிருந்த தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளன.

மேலும், உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

17.84 கோடி இந்திய ரூபா செலவில் தலா 300 சதுர அடியில் 321 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழக முகாம்களில் வாழும் இலங்கையர்கள் நீண்ட நாட்களாக நிரந்தர குடியிருப்புகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், முதன் முறையாக நிரந்தர குடியிருப்பு வசதிகளை தமிழக அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized