58 கைதிகள் காணாமல்போயுள்ளனர் – சிறைச்சாலைகள் ஆணையாளர்

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்.சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை, குறித்த கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனையடுத்து, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி!

பொதுச் சொத்துக்களை திருடுபவர்கள் மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நேற்று முதல் நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நியிலேயே முப்படையினருக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பக்கத்தில் விசேட கோரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுப்பதற்காக நாசகார சக்திகள் வன்முறையை தூண்டுவதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதை தடுப்பதற்காக மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தந்தை நாட்டைவிட்டு ஓட மாட்டார் – மகன் நாமல் அதிரடி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடவில்லை என அவரது மகன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து வௌியிட்ட அவர், ““எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார், நாட்டை விட்டு செல்லமாட்டார்” என்று கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஊரடங்கு உத்தரவு வியாழன் வரை நீட்டிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.
முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

Posted in Uncategorized

திருகோணமலையில் பதற்றம்! மஹிந்த குடும்பத்துடன் அங்குதான் உள்ளாராம்.!

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினரால் அலரி மாளிகை அருகில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றிய பின்பு மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அதன் பிறகு இன்று அதிகாலை இருள் விலக முன்னரே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, ஷிரந்தி, மஹிந்தவின் இரண்டாம் புதல்வன் யோஷித்த அவனது மனைவி மற்றும் இன்னும் சிலரும் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் இருக்கும் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாடு ஒன்றின் ஒத்துழைப்புடன் இன்னும் ஒரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.

Posted in Uncategorized

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் தீக்கிரை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வாகனங்கள் மற்றும் வீடுகள் போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இன்று காலை முதல் காலிமுகத்திடல் மற்றும் அலரிமாலிகை உள்ளிட்ட பல பகுதிகளில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டும், தீ வைக்கப்பட்டும் வருகின்றது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் குருநாகலிலுள்ள கட்சி அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டள்ளது.

மஹிந்தவின் தங்காலை இல்லம் வீரகெட்டிய இல்லம் குருணாகலையிலுள்ள இல்லம் என்பன உடைத்து எரிக்கப்பட்டது.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின், மாத்தளையில் உள்ள வீடுமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அருந்திக்க பெர்னாண்டோ MP ன் இல்லம் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவலயத்துக்கு முன்பாக உள்ள நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் வீடு ஆர்பாட்ட காரர்களால் முற்றாக எரித்து சாம்பலாக்கபட்டது.

ரமேஷ் பதிரணவின் வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் கல்கிஸ்ஸயில் அமைந்துள்ள வீடும் உடைக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் மனைவியின் குருணாகல் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பண்டாரவல மேயர் ஜானகவின் வீடும் பொதுமக்களினால் தாக்ப்பட்டது.

நீர்கொழும்பு மீரிகம வீதியில் உள்ள Avenra Garden Hotel ஆர்பாட்டகாரர்களால் முற்றாக எரிக்கப்பட்டு அங்குள்ள உலகின் விலையுயர்ந்த சொகுசு வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டிருக்கிறது.

தங்கொட்டுவ அருந்திக்க பிரனான்துவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

கனக ஹேரத் MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகேவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

பண்டார MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு MP நிமல் லான்சாவின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் மேயரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அருந்திக பெர்ணாண்டோ MP ன் வீடு எரிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையின் கதவுகள் போராட்டக்காரர்களால் திறக்கப்பட்டு சிசிடிவி கமெராக்களும் தாக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மெதமுலனவிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை மாலை கல் வீச்சு நடத்ப்பட்டு வீட்டின் முன் பகுதியிலுள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மஹிபால ஹேரத் MPயின் கேகாலை வீடு தீக்கரையாக்கப்பட்டது.

அலிசப்ரி ரஹீம் அவர்களின் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டது.

திஸ்ஸ குட்டியாராச்சி MP ன் வீடு உடைக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையாரது நினைவுத் தூபியும் உடைக்கப்பட்டது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்கள்…

வன்முறை தாக்குதலுக்கு கண்டனம் வௌியிட்ட அமெரிக்க தூதுவர்

அமைதியான போராட்டங்கள் மீது இன்று(09) மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie J. Chung கண்டனம் வௌியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் ட்விட்டர் பதிவினூடாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நிட்டம்புவ ஆர்ப்பாட்டத்தில் சிக்கி அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழப்பு

நிட்டம்புவயில் இன்று(09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், சம்பவத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“குறித்த பாராளுமன்ற உறுப்பினர். அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.” என்று ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் கட்டிடத்தை சூழ்ந்த, பின்னர் அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று கொழும்பில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.