டியாகோகார்சீயாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை குடியேற்றவாசிகள் தற்கொலை முயற்சி

டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக சிக்குண்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 தற்கொலை செய்ய முயன்றுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்துசமுத்திரத்தில் உள்ள பிரிட்டனிற்கு சொந்தமான சிறிய தீவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள பிபிசி சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொவிட் கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற  ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

டியாகோ கார்சியாவில் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார் மேலும் இங்கு உண்ணாவிரதப்போராட்டங்களும் இடம்பெறுகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ருமேனியாவில் கைது

இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நட்லாக் எல்லைபகுதியில் எல்லையை கடக்க முயன்ற டிரக்கை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டவேளை உள்ளே 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட டிரக் ஆடைகளை கொண்டு செல்கின்றது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததுஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 வெளிநாட்டவர்கள் மறைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றிற்குள் காணப்பட்டனர் சோதனைகளிற்கு பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் – அவர்கள் பங்களாதேஸ் எரித்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 21 முதல் 67 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நட்லாக் எல்லையில் ருமேனிய பிரஜையொருவர் செலுத்திய வாகனத்தை சோதனையிட்டவேளை இலங்கை பாக்கிஸ்தானை சேர்ந்த 21 வயது முதல் 42 வயதுடைய 11குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.