ஜப்பான் அரசாங்கத்தால் சம்பூரில் குளம் புனரமைப்பு

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ” சமூக அடிப்படையிலான சிறு குள புனரமைப்பு” திட்டத்தின்கீழ் சம்பூர் பகுதியில் உள்ள பெரியகுளம் எனும் குளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை (23) விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் உதவிச் செயலாளர்கள் கலந்து கொண்டு குளத்தை விவசாயிகளின் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இக்குளத்தை “பீஸ் விண்ட்ஸ்” நிறுவனம் முன்னின்று சிறப்பாக புனரமைப்புச் செய்திருந்தது.

இக்குளம் புனரமைப்புச் செய்யப்பட்டதன் மூலம் சம்பூர் பகுதியைச் விவசாயிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சம்பூர் கமநலசேவை நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் பிரதேச செயலக உயரதிகாரிகள் ,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.