தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான குகன் மற்றும் நிதிச் செயலாளர் தாஸ் அவர்களினதும் 22ம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த இவர்களை இந்நாளில் அஞ்சலிக்கிறோம்.
ரெலோ வவுனியா மாவட்ட முன்னாள் அமைப்பாளர் குகன் மற்றும் ரெலோ நிதிச்செயலாளர் தாஸ் ஆகியோரின் 22 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 15/05/2021 மன்னாரில் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது அன்னாரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
நாட்டின் கோவிட் சூழ்நிலை காரணமாக மாவட்ட செயலகங்களில் 15-05-2021 அன்று எளிமையான முறையில் இடம் பெற்றது.