பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்ற திரு சிவகுமார் நடேசன் அவர்களுக்கு கெளரவிப்பு

உயர்திரு சிவகுமார் நடேசன், வீரகேசரி முகாமைத்துவப் பணிப்பாளர் ( எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் ) அவர்களுக்கு இந்திய அரசால் அதி உயர் விருது வழங்கப்பட்டதைப் பாராட்டி நடாத்தப்பட்ட விழாவில் , அவருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சிவகுமார் நடேசன் அவர்களை 2023ஆம் ஆண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதுக்காக (PBSA) இந்திய அரசாங்கம் தெரிவு செய்துள்ளது.

இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் அதி உயர் கௌரவமே பிரவாசி பாரதிய சம்மான் விருது என்பது குறிப்பிடத்தக்கது. 17ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின்போது மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீமதி திரௌபதி முர்மு அவர்களால் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது

 

குடியரசுத் துணைத் தலைவர் ஶ்ரீ ஜெகதீப் தன்கர் அவர்களை தலைவராகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர் அவர்களை துணைத் தலைவராகவும் கொண்ட ஜூரிக்கள் சபையானது, திரு சிவகுமார் நடேசன் அவர்களை இந்த உயர் கௌரவத்துக்காக தெரிவு செய்திருந்தது. உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளிலும் சிறந்துவிளங்கி சாதனைபுரிந்த இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் சிறப்பை இந்த பிரவாசி பாரதிய சம்மான் விருது அங்கீகரிக்கின்றது.