அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!

கொழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி சில தினங்களுக்கு முன்னர் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இன்று (திங்கட்கிழமை) இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவை சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளர் தாக்கல் செய்துள்ளார்.