அரசின் பங்காளிகட்சிகள் சற்று முன்னர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளும் இந்த ஆண்டு தனித்தனியாக மே தினத்தை நடத்த தீர்மானித்துள்ளன.

இன்று (29) சற்று நேரத்திற்கு முன்னர் 11 கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மே தினம் குறித்துக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.