இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையம் திறப்பு

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கட்டு நாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற விசேட விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் 1வதாக தரையிறங்கியது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1147 என்ற இந்த விசேட விமானத்தில், 95 தேரர்கள் உள்ளடங்கலாக 111 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.