இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றம்! ரெலோமதுசூதன்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது, இனப்படுகொலை இடம் பெற்றது தொடர்பாக கனடிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதேச சபையில் வரவேற்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை

கனடிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான். அதற்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை

இதற்கமைய, நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ வின் நல்லூர் தொகுதி அமைப்பாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான  அ.மதுசூதன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.