இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான கால அவகாசத்தை நீடித்தது பங்களாதேஷ்

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பங்களாதேஷ் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 06 மாதங்களுக்கு நீடிக்க பங்களாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடனுக்கான முதல் தவணையை ஓகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டம்பர் மாதத்திலும் செலுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, பங்களாதேஷ் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடித்தது.

மஹிந்த ராஜபக்சவின் பங்களாதேஷ் விஜயத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டு நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை பங்களாதேஷ் வழங்கியது.

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஆசிய கிளியரிங் அசோசியேஷன் பொறிமுறைக்கு வெளியே நடைபெறும் முதல் நாணய பரிமாற்றம் இதுவாகும்.

ஆசிய கிளியரிங் அசோசியேஷன் என்பது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலதீவுகளை உள்ளடக்கிய ஒரு ஏற்பாடா குறிப்பிடத்தக்கது.