இலங்கைப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்கின்றது – ஐ.எம்.எப்.

அதிக வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக இலங்கை பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இலங்கையின் கடன் தொடர்பாக, பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் இது என்றும் முறையான செயல்முறைகள் தேவை என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஜி20 உச்சிமாநாட்டில் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கடன் கட்டமைப்பை வலுப்படுத்த மற்றும் கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா- உக்ரைன் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தீர்வைக் கண்டறிய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.