இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம் – UNICEF எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் மோசமாக பாதிக்கப்படலாம் என UNICEF எச்சரித்துள்ளது.

UNICEF அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம் என நாங்கள் அச்சமடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.