இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது கால அவகாசம்! பகிரங்க அறிவிப்பு

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் இன்றி வெறுமனே நாடாளுமன்றத்தின் காலத்தை இழுத்துக் கொண்டு செல்வதனை அனுமதிக்க முடியாது என்றும், இதனால் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்கும் தாம், திட்டங்களை முன்வைப்பதற்காக அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குவதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மருந்து தட்டுப்பாட்டால் பிள்ளைகள் வைத்தியசாலைகளில் இறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் எரிபொருள், எரிபொருள் வரிசைகளில் இறக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் விவசாயிகள் தமது விவசாய காணிகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தலை தூக்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.