இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் கைது

இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று புதன்கிழமை (16) எல்லை தாண்டியபோது கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜோர்தானிய – இஸ்ரேல் எல்லையில் பணிபுரிய ஆபிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்படாமல் நுழைந்ததாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.