எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் சேதத்திற்கு எதிராக வெளிநாட்டில் வழக்குத் தாக்கல்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் கடற்பரப்பில் ஏற்பட்ட சேதத்திற்கு எதிராக வெளிநாடு ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நீதி அமைச்சு கூறியுள்ளது.

அதற்காக 2 வெளிநாட்டு சட்ட நிறுவனங்களை தொடர்பு கொள்ளவுள்ளதாக நீதித்துறை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2021 மே 19 அன்று கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல், 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டு இருந்த போது, ​​மே 20 அன்று தீ விபத்துக்குள்ளானது.