கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரருக்கு இன்று(23) பிணை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 89 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் T. N. L.மஹவத்தவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல உத்தரவிட்ட மேலதிக நீதவான், மாதாந்தம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வௌிநாட்டு பயணத்திற்கான தடையை விதித்த மேலதிக நீதவான், வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் எவ்வித விடயங்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கக் கூடாது எனவும் அறிவித்துள்ளார்.

மீண்டும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவதாக முறைப்பாடு கிடைத்தால், பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் இதன்போது அறிவித்துள்ளார்.