காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி

காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.இந்தச் சேவையானது இலங்கையர்களுக்கு எரிபொருள், உரம், பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள உதவும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறைக்கும் தமிழகத்திலுள்ள துறைமுகங்களான காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.