கொரோனா தடுப்பூசிகளுக்காக 80.5 மில்லியன் டொலர் நிதியுதவி: உலக வங்கியும் நிதி அமைச்சும் ஒப்பந்தம்

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் விநியோகிப்பதற்காகவும் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க உலக வங்கியும் நிதி அமைச்சும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்

இலங்கை சார்பில் நிதி அமைச்சின் செயலாளரும் உலக வங்கி சார்பில் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் அவசரத் தேவை மற்றும் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை வழங்க உலக வங்கி உதவி புரியும் என உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் இதன்போது கூறியுள்ளார்.