சட்டவிரோத விகாரையின் பிரித் ஓதுதலுக்கு நாக தம்பிரான் கோவில் பக்திப்பாடல் இடையூறாம் – குழப்பம் விளைவித்த பொலிஸார்

தையிட்டி நாக தம்பிரான் கோயிலில் இன்று பூசைக்கான ஏற்பாடுகளில் பொலிஸார் குழப்பம்தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

இந்த ஒலியானது அருகிலுள்ள சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்கு நின்றிருந்த மூத்த சட்டவாளர் திரு. நடராஜர் காண்டீபன், சட்டவிரோத தையிட்டி விகாரையின் பிரித் ஓதும் ஒலியை நிறுத்தும்படி காவல்துறைக்கு விளக்கமளித்ததையடுத்து பிரித் ஓதும் ஒலி நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகிறது.