சமந்தா பவர் 10ஆம் திகதி இலங்கைக்கு பயணம்

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க இராஜ தந்திரியுமான சமந்தா பவர் நாளை மறுதினம் (சனிக்கிழமை) இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்.

அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதுடன், அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.