சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி திங்களன்று அங்குரார்ப்பணம்

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (22) மஹரக தேசிய இளைஞர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் உட்பட முக்கிய தரப்பினர் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ’43ஆவது படையணி’ என்பதை ஆரம்பித்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இளைஞர், யுவதிகளை முன்னிலைப்படுத்தி புதிய அரசியல் கட்சியான ‘ஐக்கிய குடியரசு முன்னணி’ நாளை மறுதினம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவார் என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.