சஹ்ரானின் போதனைகளில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக அம்பலம்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய தாக்குதல் குறித்த போதனை நடவடிக்கையில் தான் உட்பட மொத்தம் 15 பெண்கள் கலந்து கொண்டதாக யுவதியொருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர்களில் ஐந்து பேர் 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் விளக்கமறியலில் உள்ளதுடன், தான் உட்பட 7 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரானின் தீவிரவாத் குறித்த போதனைகளில் கலந்து கொண்ட குற்றச்சாட்டுக்காக மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதான முகமது இப்ராஹிம் சைதா என்ற யுவதியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு வெள்ளிக்கிழமை கைது செய்தது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.