சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்தார் மேர்வின் சில்வா!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனது கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்த மேர்வின் சில்வா 2015 காலப்பகுதியில் அதில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதுடன், தனிக் கட்சியொன்றையும் ஆரம்பித்தார்.

இவ்வாறான நிலைமையில் அவர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.