சூரிச் மாநிலத்தில் தமிழ்தேசிய வீரர்கள் 38 நினைவு தினம்

25.07.2021 ஞாயிறு சுவிஸ்லாந்து சூரிச் மாநிலத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், சுவிஸ் கிளையால் அனுஷ்டிக்கப்பட்டது.

1983 ஜூலையில் வெலிக்கடை படுகொலை செய்யப்பட்ட ஸ்தாபன தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் நடேசுதாசன், தேவன், சிவபாதம் மாஸ்டர். குமார குலசிங்கம்,
மற்றும் 53 அரசியல் கைதிகளின் படுகொலையும், அதன்பின் ஏற்பட்ட இனக் கலவரத்தில் கொல்லப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி செய்யும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

சுவிஸ் கிளையின் செயலாளர் விமல் அவர்கள் அஞ்சலி நிகழ்வை தொடங்கி வைத்தார்.

எம் கிளையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சிவா அவர்களின் சிறிய அஞ்சலி உரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.

மேலும் ,வருகை தந்த அனைவருக்கும், மற்றும் தொலைபேசி வாயிலாகவும், இணையம் வாயிலாக ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறியும்,
அத்துடன் எமது ஸ்தாபன தலைவர்கள் பற்றியும் அவர்கள் வழிகாட்டலில் எமது பாதை பயணங்கள் பற்றியும் ,சுவிஸ் கிளையின் அமைப்பாளர் ஞானம் அவர்கள் நன்றி உரையுடன் கூடிய சிற் உரையை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் இணையம் வழியாகவும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது சிறப்பு.

நன்றி
சுவிஸ் கிளை நிர்வாகம்.