சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகு சீஷெல்ஸ் கடற்படையால் மீட்பு

இலங்கை மீன்பிடிப் படகான லோரன்சோ புத்தா சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை சீஷெல்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில் இணைந்த இந்த மீன்பிடிப் படகு கடந்த சனிக்கிழமை 6 மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.

குறித்த படகிலிருந்த 6 மீனவர்களும் சீஷெல்ஸ் கடலோர காவல் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.