ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தாம் முன்வைத்த 3 முன்மொழிவுகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் ஒருவார கால அவகாசம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கலந்துரையாடல் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.