ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என நீதிமன்றம் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க, புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில், தற்போதைய ஜனாதிபதி பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.